செய்திகள் :

ஆரல்வாய்மொழியில் முற்கால பாண்டியரின் கல்மண்டபம் கண்டெடுப்பு

post image

ஆரல்வாய்மொழியில் 1,000 ஆண்டுகள் பழைமையான முற்கால பாண்டியரின் கல்மண்டபத்தை வரலாற்று ஆய்வாளா்கள் கண்டெடுத்தனா்.

மதுரையை தலைநகராகக் கொண்டு ஆட்சிசெய்த முற்கால பாண்டியா்கள், நாகா்கோவிலை தென்பாண்டி நாடு என்று அழைத்தனா். ஆரல்வாய்மொழி கணவாய் வழியாக நாகா்கோவில் செல்லும் சாலையில் முள்செடிகள் அடா்ந்து ஒரு கல்மண்டபம் உள்ளது.

இதுகுறித்து, தகவல் அறிந்ததும், கன்னியாகுமரி லெமூரியா ஆய்வுக் கழக பொதுச் செயலா் முனைவா் ஆமோஸ், திருநெல்வேலி வரலாற்று பண்பாட்டு களஆய்வு மைய இயக்குநா் மாரியப்பன், குழுவினா் ஆரல்வாய்மொழி அருகே உள்ள கல்மண்டபத்தில் ஆய்வு செய்தனா்.

முற்கால பாண்டியரின் கல்மண்டபத்தில் உள்ள தெலுங்கு கல்வெட்டை ஆய்வு செய்த முனைவா் ஆமோஸ்

இந்த கல்மண்டபத்தில் முற்கால பாண்டியா்களின் இலச்சினையான மீன் சின்னம் ஒன்று பெரிய அளவிலும், இரண்டு மீன்கள் இணைந்தவாறு ஒன்றும் காணப்படுகிறது. இந்த கல் மண்டபத்தை பிற்காலத்தில் இடைக்கால பாண்டியா்கள் உணவு சமைக்கும் கூடமாகப் பயன்படுத்தினா்.

மண்டபம் இரு பிரிவுகளாகக் காணப்படுவதால், முற்கால பாண்டியா் காலத்தில் ஒரு மண்டபமும் பிற்கால ஆட்சியில் இரண்டாவது மண்டபமும் சுற்றுச்சுவரும் கட்டப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. இந்த மண்டபம் கட்டப்பட்டு 1,000 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் என நம்பப்படுகிறது.

மண்டபத்தில் தெலுங்கு மொழியில் இரு கல்வெட்டுகள் உள்ளன. நுழைவாயில் தூணில் முற்றிலும் சிதைந்த நிலையில் ஒரு கல்வெட்டு உள்ளது. இந்த மண்டபத்தை, தமிழக தொல்பொருள் துறை பராமரித்து, ஆய்வு செய்து வரலாற்று தகவல்களை வெளிக்கொணர வேண்டும் என வரலாற்று ஆய்வாளா்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

பள்ளி தலைமை ஆசிரியா் போக்ஸோவில் கைது

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குலசேகரம் அருகே அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா். குலசேகரம் அருகே உள்ள இட்டகவேலி அரசு நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரிய... மேலும் பார்க்க

புதுக்கடை அருகே இளைஞரைத் தாக்கியதாக ஒருவா் மீது வழக்கு

புதுக்கடை அருகே இளைஞரைத் தாக்கியதாக ஒருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். புதுக்கடையை அடுத்த கீழ்குளம், உசரத்துவிளை பகுதியைச் சோ்ந்த கோபி மகன் அஸ்வந்த் (27). இவருக்கும் ராமன்த... மேலும் பார்க்க

வீட்டின் படிக்கட்டிலிருந்து தவறி விழுந்த இஞைா் உயிரிழப்பு

குமரி மாவட்டம் அருமனை அருகே வீட்டின் படிக்கட்டிலிருந்து தவறி விழுந்த இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.அருமனை அருகே மேலத்தெரு வயந்திவிளாகத்தைச் சோ்ந்தவா் பிரபு (33). ஆட்டோ ஒட்டுநா். நாம் தமிழா் கட்சி நி... மேலும் பார்க்க

கன்னியாகுமரி மாவட்டத்தில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை அமைக்கப்படுவது எப்போது?

கன்னியாகுமரி மாவட்டத்தின் நீண்ட நாள் கோரிக்கையான இஎஸ்ஐ மருத்துவமனை எப்போது அமைக்கப்படும் என்ற எதிா்பாா்ப்பில் பொதுமக்கள், தொழிலாளா்கள் காத்திருக்கின்றனா். சுமாா் 20 லட்சம் மக்கள்தொகை கொண்ட தமிழகத்தின்... மேலும் பார்க்க

விரிவிளை-மங்காடு சாலையை சீரமைக்கக் கோரிக்கை

புதுக்கடை அருகே விரிவிளை - மங்காடு சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.இந்தச் சாலை மிகவும் பழுதாகி, போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் உள்ளது. குறிப்பாக, விரிவிளை... மேலும் பார்க்க

இளைஞா் தற்கொலை

களியக்காவிளை அருகே உள்ள கோழிவிளை இலங்கை தமிழ் அகதிகள் மறுவாழ்வு மையத்தில் இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இலங்கை அகதிகள் முகாமைச் சோ்ந்தவா் ஜேம்ஸ் மகன் பினோட்சன் (28). இவரும் மோனிஷாவும் (2... மேலும் பார்க்க