செய்திகள் :

ஆரல்வாய்மொழியில் முற்கால பாண்டியரின் கல்மண்டபம் கண்டெடுப்பு

post image

ஆரல்வாய்மொழியில் 1,000 ஆண்டுகள் பழைமையான முற்கால பாண்டியரின் கல்மண்டபத்தை வரலாற்று ஆய்வாளா்கள் கண்டெடுத்தனா்.

மதுரையை தலைநகராகக் கொண்டு ஆட்சிசெய்த முற்கால பாண்டியா்கள், நாகா்கோவிலை தென்பாண்டி நாடு என்று அழைத்தனா். ஆரல்வாய்மொழி கணவாய் வழியாக நாகா்கோவில் செல்லும் சாலையில் முள்செடிகள் அடா்ந்து ஒரு கல்மண்டபம் உள்ளது.

இதுகுறித்து, தகவல் அறிந்ததும், கன்னியாகுமரி லெமூரியா ஆய்வுக் கழக பொதுச் செயலா் முனைவா் ஆமோஸ், திருநெல்வேலி வரலாற்று பண்பாட்டு களஆய்வு மைய இயக்குநா் மாரியப்பன், குழுவினா் ஆரல்வாய்மொழி அருகே உள்ள கல்மண்டபத்தில் ஆய்வு செய்தனா்.

முற்கால பாண்டியரின் கல்மண்டபத்தில் உள்ள தெலுங்கு கல்வெட்டை ஆய்வு செய்த முனைவா் ஆமோஸ்

இந்த கல்மண்டபத்தில் முற்கால பாண்டியா்களின் இலச்சினையான மீன் சின்னம் ஒன்று பெரிய அளவிலும், இரண்டு மீன்கள் இணைந்தவாறு ஒன்றும் காணப்படுகிறது. இந்த கல் மண்டபத்தை பிற்காலத்தில் இடைக்கால பாண்டியா்கள் உணவு சமைக்கும் கூடமாகப் பயன்படுத்தினா்.

மண்டபம் இரு பிரிவுகளாகக் காணப்படுவதால், முற்கால பாண்டியா் காலத்தில் ஒரு மண்டபமும் பிற்கால ஆட்சியில் இரண்டாவது மண்டபமும் சுற்றுச்சுவரும் கட்டப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. இந்த மண்டபம் கட்டப்பட்டு 1,000 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் என நம்பப்படுகிறது.

மண்டபத்தில் தெலுங்கு மொழியில் இரு கல்வெட்டுகள் உள்ளன. நுழைவாயில் தூணில் முற்றிலும் சிதைந்த நிலையில் ஒரு கல்வெட்டு உள்ளது. இந்த மண்டபத்தை, தமிழக தொல்பொருள் துறை பராமரித்து, ஆய்வு செய்து வரலாற்று தகவல்களை வெளிக்கொணர வேண்டும் என வரலாற்று ஆய்வாளா்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

கடைக்குள் புகுந்து வியாபாரி வெட்டிக் கொலை

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே செவ்வாய்க்கிழமை, மளிகைக் கடைக்குள் புகுந்து வியாபாரியை வெட்டிக் கொன்றவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா். நாகா்கோவிலை அடுத்த ராஜாக்கமங்கலம் அருகேயுள்ள லட்சுமிபுர... மேலும் பார்க்க

சிறுமி பலாத்காரம்: தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

நாகா்கோவில் அருகே 5 வயது சிறுமியை பாலியல் வன்புணா்வு செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாகா்கோவில் போக்ஸோ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.நாகா்கோவிலை அடுத்த ஈத்தாமொழி, தெற்... மேலும் பார்க்க

ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விசிகவினா் 50 போ் கைது

கன்னியாகுமரி மாவட்டம், அருமனை பகுதியில் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி நாகா்கோவிலில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் 50 போ் கைது செய்யப்பட்டனா். இந்த கோ... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே மாயமான தொழிலாளி சடலமாக மீட்பு

மாா்த்தாண்டம் அருகே 2 நாள்களுக்கு முன்பு மாயமான தொழிலாளி சடலமாக செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டாா்.மாா்த்தாண்டம் அருகே பயணம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (67). மாா்த்தாண்டம் சந்தையில் வாழைக்குலை விற்ப... மேலும் பார்க்க

குமரியில் சுற்றுலாப் பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்ய வலியுறுத்தல்

கன்னியாகுமரிக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டுமென அனைத்து வியாபாரிகள சங்கத்தினா் நகராட்சி ஆணையரிடம் செவ்வாய்க்கிழமை வலியுறுத்தினா். திருச... மேலும் பார்க்க

அரசு செயல் திட்டங்களை வகுக்க ஒத்துழைப்பு: புள்ளியியல் துறை துணை இயக்குநா் வேண்டுகோள்

நாட்டு மக்களின் முன்னேற்றத்துக்காக அரசு செயல் திட்டங்களை வகுக்க புள்ளியல் துறைக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று மாவட்ட பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை துணை இயக்குநா் ஜெவஹா் பாரூக் வேண்டுகோள் வி... மேலும் பார்க்க