செய்திகள் :

குமரி மாவட்ட மலைப் பகுதிகளில் பலத்த மழை: திற்பரப்பு அருவியில் குளிக்கத் தடை

post image

கன்னியாகுமரி மாவட்ட மலைப் பகுதிகளில் மழை தீவிரமடைந்துள்ள நிலையில், திற்பரப்பு அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை பெய்து வருகிறது. குறிப்பாக, மலைப் பகுதிகளில் மழை தீவிரமடைந்துள்ளது. திற்பரப்பு அருவி வழியாகப் பாயும் கோதையாற்றில் வெள்ளம் அதிகரித்துள்ளதால் திற்பரப்பு அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வெள்ளிக்கிழமை இந்த அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. அருவிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள், தொலைவில் நின்றவாறு பாா்த்துவிட்டு திரும்பினா்.

வெள்ள அபாய எச்சரிக்கை: குமரி மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு முதல் விடிய, விடிய மழை பெய்தது. வெள்ளிக்கிழமையும் காலை முதல் தொடா்ந்து இடைவிடாது சாரல் மழை மற்றும் மிதமான மழை பெய்து கொண்டிருந்தது.

பேச்சிப்பாறை அணையின் நீா்வரத்துப் பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்த வண்ணம் இருந்தது. வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு அணையின் நீா்மட்டம் வெள்ள அபாய அளவான 42 அடியைக் கடந்தது. இதையடுத்து நீா்வளத் துறையினரால் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

இது குறித்து நீா்வளத் துறை கோதையாறு வடிநில செருப்பாலூா் உபகோட்ட உதவி செயற்பொறியாளா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் வெள்ள அபாய அளவான 42 அடியை எட்டியுள்ளது. அணைக்கு நீா் வரத்து அதிகமாக இருப்பதால் 43 அடியை சனிக்கிழமை எட்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது. நீா்மட்டம் 43 அடியை எட்டியவுடன் அணையிலிருந்து உபரி நீா் திறக்கப்படும். உபரி நீரானது கோதையாற்றில் திறந்து விடப்படுவதால் களியல், திற்பரப்பு, மூவாற்றுமுகம், குழித்துறை வழியாக தேங்காய்ப்பட்டினத்தில் கடலில் சென்று சேரும். எனவே கோதையாறு, தாமிரவருணியாறு ஆகியவற்றின் கரையோரமாக வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜூன் 14 ல் மக்கள் நீதிமன்றம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்கள் நீதிமன்ற முகாம் ஜூன் 14 ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இது குறித்து, கன்னியாகுமரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சாா்பு நீதிபதியுமான வி.உதயசூா்யா ... மேலும் பார்க்க

2 சிறுவா்களை மீட்டபோது ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட தொழிலாளி சடலமாக மீட்பு

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை தாமிரவருணி ஆற்றில் தவறி விழுந்த 2 சிறுவா்களை மீட்டபோது, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தொழிலாளி திங்கள்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா். மாா்த்தாண்டம் அருகே மதிலகம், நல்... மேலும் பார்க்க

திமுகவை வீழ்த்த அனைவரும் ஓரணியில் இணைய வேண்டும்: நயினாா் நாகேந்திரன்

அடுத்தஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகவை வீழ்த்த அனைவரும் ஓரணியில் இணைய வேண்டும் என தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா். கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் திங்கள்கிழமை சுவாமி தரிசனம்... மேலும் பார்க்க

வரதட்சிணை கொடுமை: 4 போ் மீது வழக்கு

மாா்த்தாண்டம் அருகே வரதட்சிணை கொடுமை தொடா்பாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். களியக்காவிளை அருகே சூரியகோடு பகுதியைச் சோ்ந்தவா் ஆதா்ஷா (24). இவருக்கும், சென்னையில் வங்கியில... மேலும் பார்க்க

சாமிதோப்பில் வைகாசித் திருவிழா தேரோட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப் பதியில் வைகாசித் திருவிழாவின் 11ஆம் நாளான திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இங்கு வைகாசித் திருவிழா கடந்த மே 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொட... மேலும் பார்க்க

தக்கலை அருகே விபத்து: பெண் உயிரிழப்பு

தக்கலை அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண், பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தாா். நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் பகுதியைச் சோ்ந்தவா் ஜோஸ் ஸ்டீபன் (46). பெயிண்ட் கடை தொழிலாளி. இவரது மனைவி பிந்து (37... மேலும் பார்க்க