செய்திகள் :

கும்பகோணம்: குப்பைக் கூளமாய் காட்சியளிக்கும் நதிநீர் கால்வாய்; அலட்சியம் காட்டாமல் சீரமைப்பார்களா?

post image

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சி பகுதியை சேர்ந்த புளியஞ்சேரி என்ற கிராமத்தை ஒட்டிய நதிநீர்கால்வாய்தான் நாம் இங்கு பார்த்து கொண்டு இருக்கிறோம். இந்த கால்வாயானது 1924-ம் வருடம் விவசாய பாசனத்திற்கு அமைக்கப்பட்ட ஒரு கால்வாய் ஆகும். இது காவேரி ஆற்றின் நதிநீர் கால்வாயாக பாபுராஜபுரத்தில் ஆரம்பித்து, புளியஞ்சேரி வழியே ஊருக்குள் வருகிறது‌.

இங்கு வசிக்கும் மக்களிடையே இந்த நீரோடையை பற்றி கேட்கையில், அவர்களின் பதில், இந்த நீரோடையானது பாபுராஜபுரத்தில் ஆரம்பித்து புளியஞ்சேரி வழியில் இன்னம்பூர் வரை விவசாய நிலங்களுக்கு நடுவே செல்கிறது என்றனர்.

மேலும், ‘ நாங்கலாம் சின்னப் பசங்கலா இருந்தப்ப இந்த நீரோடையிலத்தா குளிப்போம்’ என்றும், மற்றொருவரின் பேச்சில், ‘அப்பெல்லாம் அப்படியே தண்ணில எட்டிப்பாத்தா மொகம் தெரியும்’! என்றும்,‘குளிக்க, குடிக்க, துணி துவைக்க , வீட்டு பயன்பாட்டுக்குனு எல்லாமே இதுல வர தண்ணி தான் எங்களுக்கு’ எனவும் அவர்கள் கூறிய பதில், வியப்பில் தான் ஆழ்த்தியது.

காரணம், இப்போது இந்த நீரோடையில் நீருக்கு பதில் சாக்கடை ஓடிக்கொண்டு இருக்கிறது. மக்கள் இதில் மூட்டை மூட்டையாக குப்பைகளை கொட்டிக்கொண்டு இருக்கிறார்கள். அருகில் ஏதாவது மாநகராட்சி குப்பைதொட்டி இருக்கிறதா? என்ற கேள்விக்கு பதில், இருக்கிறது.

ஆனால் அது பயன்படுத்தப்படாத எல்லையில் வீணாய் கிடக்கிறது. மக்கள் நடமாட்டம் இல்லாத ஒரு குளக்கரையில் மூன்று மாநகர குப்பை தொட்டிகள் பயனற்று கிடக்கிறது.

அதைபற்றி விசாரிக்கையில், ஊராட்சி தூய்மை பணியாளர்கள் தினமும் இப்பக்கம் வருவதில்லை என்றும், குப்பை தொட்டிகளில் மக்கள் வீணான சாப்பாடு, இறைச்சிகள், பிளாஸ்டிக் பொருட்கள், அழுகிய காய்கறிகள் என்று எல்லாவற்றையும் ஒரே குப்பைதொட்டியில் போட்டு திணிப்பதன் விளைவில், அவ்விடமே நாற்றம் எடுத்து அருகில் யாரும் போகமுடியாத சூழல் உண்டாகிறது என்றனர். இதுமட்டுமல்லாமல் சாலையை ஒட்டிய இந்த கால்வாய்களில் தேங்கி நிற்கும் சாக்கடை நீரில் இருந்து பலதரப்பட்ட நோய்கள் வருகிறது என்றும் கூறினர்.

அரசாங்கத்திடம் இது பற்றிய புகார் அளித்தீர்களா? என்ற கேள்விக்கு, சொல்லிட்டுதா இருக்கோம், கண்டுக்க மாட்டுக்குறாங்க, வாய்க்கால் சீரமைப்பு திட்டமுனு, பொதுப்பணி துறையில பேசினோம். ‘குறிச்சி வச்சியிருக்கோமுனு’ சொல்றாங்க.

சில சமயம் இது எங்க டிபார்ட்மெண்ட் இல்ல, இதுக்கு வேற டிபார்ட்மெண்ட் அப்படினு சொல்லிடுவாங்க.

முதல்ல இந்த வாய்க்கால சீரமைக்கணும்ப்பா! ஒரே நாத்தமா அடிக்குது. கொசு தொல்ல வேற அதிகமா வந்துட்டே இருக்கு. தூங்க முடியல. அதுமட்டுமா, இங்க இருக்குறவங்க வீட்ல இருநூறு அடி ஆழத்துல இருந்து வர தண்ணியெல்லாமே சாக்கடை நாத்தம் தாப்பா வரும். நாத்தம் போறதுக்கே பத்து பாஞ்சி நிமிஷத்துக்கு மேல ஆகும்.

கிட்டத்தட்ட நூறு வருடத்திற்கு முன் வெட்டப்பட்ட ஒரு நதிநீர் வாய்க்கால் இப்போது ஒரு குப்பைகிடங்காக காட்சி அளிக்கிறது.

ஊரை சுற்றிய கால்வாய்களும், நீரோடைகளும், குளங்களும், ஏரிகளும் தான் ஒரு கிராமத்தின் வாழ்வியல் ஆதாரம் ஆகும்.

இப்படிபட்ட கால்வாய்களை சுத்தமாக வைத்துக்கொள்ளாமல் அதில் குப்பை கொட்டுவது, வீட்டின் கழிவுநீரை கலப்பது, சில இடங்களில் வாய்க்காலை மறித்து வீடு கட்டுவது, நிலத்தை சுரண்டுவது, ஏரிகளில் வீடு கட்டுவது போன்ற கிராம நீர்ப்பாசன வழிகளில் நாம் செய்யும் இந்த அநியாயங்கள் எதிர்கால சந்ததிகள் வாழ்வதற்கு பாதை இல்லாத ஓர் இடமாக அமைகிறது.

குப்பைகளை குப்பை தொட்டியில் போடுங்கள். மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து போடுங்கள்‌. ஆற்றிலோ, குளத்திலோ, கால்வாய்களிலோ குப்பைகளை கொட்டாதீர்கள். ஆறுகளும் நீரோடைகளும் நம்மை வாழ வைப்பதற்காகவே இருக்கின்றன.

அவற்றை உயிரோடு கொன்று விடாதீர்கள்….

இந்த கால்வாய் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், உடனடி கவனம் செலுத்தி, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

Today Roundup: தூய்மை பணியாளர்களின் தொடர் போராட்டம் டு மோடியின் தொழில்நுட்ப புரட்சி வரை| 10.8.2025

இன்றைய நாளின் (ஆகஸ்ட் 10) முக்கியச் செய்திகள்!*பணி நிரந்தரம் செய்ய வேண்டியும், மாநகராட்சி சுகாதாரப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையை எதிர்த்தும் போராடி வரும் தூய்மை பணியாளர்களின் போராட்டம் ப... மேலும் பார்க்க

``Zero Defect, Zero Effect; தொழில்நுட்பத்தில் புரட்சி செய்ய இதுவே சரியான நேரம்'' - பிரதமர் மோடி

பெங்களூரு மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக இருந்த எலக்ட்ரானிக் சிட்டி வரையிலான மெட்ரோ ரயில் இணைப்பான மஞ்சள் வழித்தட சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். புதிய மெட்ரோ ரயிலைக் கொடி அசை... மேலும் பார்க்க

PMK: ``தந்தையை மிஞ்சிய தனயன் இருக்கக் கூடாது; போராட்டம் நடத்தினால் தமிழ்நாடு தாங்காது'' - ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ் இல்லாமலேயே அன்புமணி தலைமையில் முதல் முறையாக அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதையடுத்து இன்று இரவுபாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில... மேலும் பார்க்க

"போராடும் தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையை திமுக அரசு ஏற்க வேண்டும்" - சீமான், கி.வீரமணி ஆதரவு

அப்செட்டாக மண்டலங்கள் 5 மற்றும் 6 யை தனியார்மயப்படுத்துவதை எதிர்த்தும், பணி நிரந்தரம் கோரியும் சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே போராடி வரும் தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் 10 வது நாளாகத் தொடர்ந்து க... மேலும் பார்க்க

கொலைவெறித் தாக்குதல்; ஆணவக் கொலை மிரட்டல்! பேசித் தீர்க்கச் சொன்ன `திருச்சி போலீஸ்' - என்ன நடந்தது?

திருச்சி மாவட்டம், மணப்பாறை தாலுகா, கல்பட்டி கிராமத்தில் பட்டியலின மக்களுக்கு எதிரான தீண்டாமைக் கொடுமை தலைவிரித்தாடும் சூழலில், இளைஞர் ஒருவருக்கு ஆணவக் கொலை மிரட்டல் விடுத்து கொடூரமாகத் தாக்கியிருக்கு... மேலும் பார்க்க

``இடஒதுக்கீட்டால் தரம் கெடுகிறது என்பதை ஒருபோதும் நான் ஏற்க மாட்டேன்'' - நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

'இட ஒதுக்கீட்டை பற்றிய ஒரு தவறான புரிதல் உள்ளது. இடஒதுக்கீட்டால் தரம் கெடுகிறது என்பதை ஒருபோதும் ஏற்க மாட்டேன்' என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பேசியிருக்கிறார். தனியார் கல்லூரியில... மேலும் பார்க்க