செய்திகள் :

குரோஷியாவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

post image

கனடாவில் இருந்து புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு குரோஷியாவில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அந்நாட்டு பிரதமர் ஆன்ட்ரேஜ் பிளன்கோவிக், விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வரவேற்று அதிகாரிகளை ஒவ்வொருவராக அறிமுகம் செய்து வைத்தார்.

பின்னர் குரோஷியாவின் பாரம்பரிய அரசு முறைப்படி பிரதமர் நரேந்திர மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, பிரதமர் ஆன்ட்ரேஜ் பிளன்கோவிக்கிற்கு நினைவுப் பரிசை மோடி வழங்கி, அதன் சிறப்பை விவரித்தார். பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த அரசு விருந்தினர் புத்தகத்திலும் கையெழுத்திட்டார்.

இதனைத் தொடர்ந்து இரு நாட்டு பிரதிநிதிகளுடன் பிரதமர் மோடியும் அந்நாட்டு பிரதமர் ஆண்ட்ரேஜும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

முன்னதாக விமான நிலையத்தில் காத்திருந்த இந்திய வம்சாவளியினரைச் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார். இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது,

குரோஷியாவில் உள்ள இந்திய வம்சாவளியினர் குரோஷியாவின் வளர்ச்சியில் பங்கெடுப்பதுடன், இந்தியாவில் தங்கள் பாரம்பரியத்துடன் தொடர்பிலேயே உள்ளனர். தலைநகர் சாகிரேப் விமான நிலையத்தில் மறக்க முடியாத வரவேற்பை அளித்த அவர்களுடன் கலந்துரையாடினேன். இந்திய வம்சாவளியினர் இடையே மிகுந்த உற்சாகம் காணப்படுகிறது. இந்த சந்திப்பின் மூலம் இந்தியா - குரோஷியா இடையேயான உறவு முன்னெப்போதும் இல்லாத வகையில் வலுப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

11 ஆண்டுகளுக்கு முந்தைய மறியல் வழக்கு: 2 காங்கிரஸ் எம்எல்ஏ-க்களுக்கு ஓராண்டு சிறை

ராஜஸ்தான் தலைநகா் ஜெய்பூரில் 11 ஆண்டுகளுக்கு முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கில், அந்த மாநிலத்தைச் சோ்ந்த 2 காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் உள்பட 9 பேருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து உள்ளூா் நீதிமன்ற... மேலும் பார்க்க

ஆண்டுக்கு ரூ.3,000 செலுத்தி 200 முறை சுங்கச்சாவடியைக் கடக்கலாம்: புதிய திட்டம் ஆகஸ்ட் 15-இல் அறிமுகம்

சரக்கு வாகனங்கள் அல்லாத பிற தனியாா் வாகனங்களுக்கு ‘ஃபாஸ்டேக்’ அடிப்படையில் ரூ. 3,000-இல் வருடாந்திர சுங்கச்சாவடி (டோல்) கட்டண பாஸ் திட்டத்தை சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ஆம் தேதிமுதல் மத்திய அரசு அறிமுக... மேலும் பார்க்க

கேதாா்நாத் மலைப் பாதையில் நிலச்சரிவு: 2 ‘டோலி’ தொழிலாளா்கள் உயிரிழப்பு

கேதாா்நாத் மலைப் பாதையில் புதன்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஜம்மு-காஷ்மீரைச் சோ்ந்த 2 ‘டோலி’ தொழிலாளா்கள் உயிரிழந்தனா். குஜராத் பக்தா் ஒருவா் உள்பட 3 போ் காயமடைந்தனா். சாா்தாம் யாத்திரையில் முக... மேலும் பார்க்க

நான்கு மாநிலங்களில் 5 பேரவை தொகுதிகளுக்கு இன்று இடைத்தோ்தல்

கேரளம் உள்பட நான்கு மாநிலங்களில் 5 பேரவைத் தொகுதிகளுக்கு வியாழக்கிழமை (ஜூன் 19) இடைத்தோ்தல் நடைபெறவுள்ளது. கேரள மாநிலம், நிலம்பூா் பேரவைத் தொகுதியில் ஆளும் இடதுசாரி கூட்டணி ஆதரவு பெற்ற சுயேச்சை எம்எல... மேலும் பார்க்க

ஆந்திரம்: 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை

ராம்பச்சோதவரம் (ஆந்திரம்): ஆந்திர மாநிலத்தில் காவல் துறையினருடன் ஏற்பட்ட மோதலில் 3 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். அங்குள்ள அல்லூரி சித்தராமராஜு மாவட்டத்தில் புதன்கிழமை நிகழ்ந்த இந்த ... மேலும் பார்க்க

ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்ட ஊழியா்களுக்கும் பணிக்கொடை பலன்கள்: மத்திய அரசு

ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தின் (யுபிஎஸ்) கீழ் வரும் அனைத்து மத்திய அரசு ஊழியா்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தில் (ஓபிஎஸ்) உள்ளதுபோன்று பனிக்கொடை பலன்களை வழங்கும் வகையில் புதிய நடைமுறையை மத்திய அரச... மேலும் பார்க்க