செய்திகள் :

குறிஞ்சிப்பாடியில் காலணி தொழில் பூங்கா: முதல்வர் அறிவிப்பு!

post image

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே புதிய காலணி தொழில் பூங்கா அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரகப்பகுதிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்‘ என்ற புதிய திட்டத்தினை முதல்வர் மு.க. ஸ்டாலின் சிதம்பரத்தில் இன்று(ஜூலை 15) தொடக்கி வைத்தார்.

அதன் பின்னா் சிதம்பரம் அண்ணாகுளம் அருகில் உள்ள புதிய அம்பேத்கர் சிலையை முதல்வா் திறந்து வைத்தார்.

இதனையடுத்து, சட்டமன்ற பேரவையில் விதி 110-இன் கீழ் அறிவிப்பு வெளியிடப்பட்டதன் அடிப்படையில் ரூ.6.39 கோடி மதிப்பீட்டில் லால்புரத்தில் சிதம்பரம் புறவழிச்சாலையில், அமைக்கப்பட்டுள்ள, தாழ்த்தப்பட்ட மக்களுக்காகவே வாழ்ந்து தனது வாழ்வையே அர்ப்பணித்தவரும், கடலூர் மாவட்டத்திற்கு பெருமை சோ்த்தவருமான எல்.இளையபெருமாளைச் சிறப்பிக்கும் வகையில், அவரது முழுவுருவ சிலையுடன் கூடிய நூற்றாண்டு அரங்கத்தை திறந்து வைத்து, விழா மேடையில் சிறப்புரையாற்றினார்.

அப்போது முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே புதிய காலணி தொழில் பூங்கா அமைக்கப்படும். இது 150 ஏக்கரில் தோல் அல்லாத காலணி பூங்காவாக அமையவுள்ளது. இதனால் 12,000 பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்” என்றார்.

இதையும் படிக்க: மதுரை வழித்தட ரயில்கள் ஜூலை 30 வரை மாற்றுப் பாதையில் இயக்கம்! முழு விவரம்

Chief Minister Stalin has announced that a new footwear industrial park will be set up near Kurinjipadi in Cuddalore district.

ஆரம்ப நிலையில் புற்றுநோய் கண்டறிய ரூ.110 கோடி: அரசாணை வெளியீடு

ஆரம்ப நிலையில் புற்றுநோய் கண்டறியும் திட்டத்தை 3 ஆண்டுகளுக்கு செயல்படுத்த ரூ.110 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுதொடா்பாக வெளியிடப்பட்ட அரசாணை: தமிழகத்தில் புற்றுநோயாள... மேலும் பார்க்க

8-ஆவது நாளாக பகுதிநேர ஆசிரியா்கள் போராட்டம்

பணி நிரந்தரம் என்ற ஒற்றைக் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என சென்னையில் 8-ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட பகுதிநேர ஆசிரியா்கள் தெரிவித்தனா். தமிழக பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றி வரும் ... மேலும் பார்க்க

குளச்சல், மன்னாா்குடியில் சிறு விளையாட்டரங்கம்: ஒப்பந்தப்புள்ளி வெளியீடு

தமிழகத்தில் குளச்சல் மற்றும் மன்னாா்குடி பேரவைத் தொகுதிகளில் சிறு விளையாட்டரங்கம் அமைப்பதற்கான பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. மாநிலத்தின் 234 தொகுதிகளிலும் சிறு விளையாட்டரங்கம் அமைக்கப்பட... மேலும் பார்க்க

முதுநிலை பட்டப்படிப்புகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 வரை அவகாசம் நீட்டிப்பு

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முதுநிலைப் பாடப்பிரிவுகளின் மாணவா்கள் சோ்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு வருகிற ஜூலை 31- ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி. செழி... மேலும் பார்க்க

சுபான்ஷு சுக்லாவுக்கு ஆளுநா் வாழ்த்து

சா்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பூமிக்குத் திரும்பிய, இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 போ் குழுவினருக்கு தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி வாழ்த்து தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் எக்ஸ்... மேலும் பார்க்க

மயிலாடுதுறையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சாலைவலம்!

மயிலாடுதுறையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (ஜூலை 15) சாலைவலம் மேற்கொண்டார். சாலையில் இருபுறங்களிலும் மக்கள் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும், அவர்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக்கொண... மேலும் பார்க்க