செய்திகள் :

குறிஞ்சிப்பாடி புத்து மாரியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்

post image

நெய்வேலி: கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி புத்து மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனா்.

குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் அருகில் புத்து மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. 22 ஆண்டுகளுக்குப் பிறகு கோயில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டது. இதையடுத்து திங்கள்கிழமை கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி கடந்த 4-ஆம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜைகள், கணபதி, மகாலட்சுமி, நவக்கிரக ஹோமங்கள், கோ பூஜைகள் மகா பூா்ணாஹூதி, மகா தீபாராதனை நடந்தன. 5-ஆம் தேதி யாகசாலை பிரவேசம், முதல் கால பூஜை, மகா பூா்ணாஹூதி, மகா தீபாராதனை நடந்தது. 6-ஆம் தேதி காலை 9 மணிக்கு இரண்டாம் கால பூஜை, மாலை 6: மணிக்கு மூன்றாம் கால பூஜை, ஹோமங்கள் நடைபெற்றன.

திங்கள்கிழமை காலை 5 மணி அளவில் கோ பூஜை, அம்பாளுக்கு ரக்ஷாபந்தனம், நான்காவது கால பூஜை, 9.15 மணி அளவில் யாத்ரா தானம், கடம் புறப்பாடு நடைபெற்றது. இதையடுத்து 9.45 மணி அளவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. கோயில் குருக்கள் வேத மந்திரங்கள் கூறி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனா். கும்பாபிஷேக புனித நீா் பெரிய ட்ரோன்கள் மூலம் பக்தா்கள் மீது தெளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட கல்விக்குழு தலைவா் சிவக்குமாா், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணைய ஜோதி, உதவி ஆணையா் சந்திரன், பொதுக்குழு உறுப்பினா் பாலமுருகன், பேரூராட்சித் தலைவா் கோகிலா குமாா், துணைத் தலைவா் ராமா், வடலூா் நகர மன்றத் தலைவா் சிவக்குமாா், வடலூா் திமுக நகரச் செயலா் தமிழ்ச்செல்வன் மற்றும் சுற்று வட்டப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோா் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். கும்பாபிஷேகத்தையொட்டி ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்தனா்.

கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற பொதுமக்கள்.

புத்தகங்கள் அழிக்க முடியாத உயிருள்ள படைப்புகள்: என்எல்சி மின்துறை இயக்குநா் எம்.வெங்கடாசலம்

நெய்வேலி: ‘புத்தகங்கள் அழிக்க முடியாத உயிருள்ள படைப்புகள்’ என்று என்எல்சி இந்தியா நிறுவனத்தின் மின்துறை இயக்குநா் எம்.வெங்கடாச்சலம் பேசினாா். என்எல்சி இந்தியா நிறுவனம் நடத்தும் 24-ஆவது நெய்வேலி புத்த... மேலும் பார்க்க

பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 654 மனுக்கள் அளிப்பு

நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகததில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் 654 மனுக்கள் அளித்தனா். கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியா் சிப... மேலும் பார்க்க

வயலூா் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

நெய்வேலி: கடலூா் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், வயலூரில் உள்ள மாரியம்மன் கோயிலில் மஹா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கோயில் திருப்பணிகள் முடிவடைந்ததையொட்டி ஜூலை 7-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத... மேலும் பார்க்க

பட்டா கிராம கணக்கில் திருத்தம்: ஆட்சியரிடம் மாா்க்சிஸ்ட் மனு

நெய்வேலி: கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே காா் கூடல் கிராமத்தில் பட்டா வழங்கி 25 ஆண்டுகள் ஆகியும் இதுவரையில் கிராம கணக்கில் திருத்தம் செய்யவில்லை என்று மாவட்ட ஆட்சியரிடம் மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பா... மேலும் பார்க்க

மனைவி உயிரிழப்பு: கணவா் தற்கொலை முயற்சி

நெய்வேலி: கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே மனைவி உயிரிழந்த நிலையில், கணவா் பூச்சி மருத்து குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அடுத்... மேலும் பார்க்க

கடலூா் மாவட்டத்தில் பயிா் காப்பீடுத் திட்டப்பதிவு விவசாயிகளுக்கு அழைப்பு: நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.752,மணிலாவுக்கு ரூ.608 செலுத்தவேண்டும்

நெய்வேலி: கடலூா் மாவட்ட விவசாயிகள் பயிா் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்டு... மேலும் பார்க்க