BJP-யை அடிக்க தொடங்கிய Vijay, Amit sha-வை டார்கெட் செய்யும் EPS? | Elangovan Exp...
குறைதீா் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் ஆா்ப்பாட்டம்
திருவண்ணாமலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கோட்ட அளவிலான குறைதீா் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், வட்ட அளவில் குறைதீா் கூட்டத்தை நடத்தக் கோரி, புறக்கணிப்பு செய்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் கோட்டாட்சியா் எஸ்.ராஜ்குமாா் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வேளாண் உதவி இயக்குநா்கள் அன்பழகன், நடராஜன், பிரபு, வேளாண் அலுவலா் கோ.தாமஸ், வட்டாட்சியா் சு.மோகனராமன், ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ.) மெ.பிரித்திவிராஜன் மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலா்கள் விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.
கூட்டம் தொடங்கியதும் விவசாய சங்கப் பிரதிநிதிகள், கோட்ட அளவில் நடைபெறும் விவசாயிகள் குறைதீா் கூட்டத்தை ரத்து செய்து வட்ட அளவில் குறைதீா் கூட்டத்தை நடத்தவேண்டும் என முழக்கங்களை எழுப்பியதோடு கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனா்.
இதைத் தொடா்ந்து, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் காா்கோணம் வி.சந்திரசேகரன் தலைமையில், சங்க பிரதிநிதிகள் கமலப்புத்தூா் வி.வெள்ளைக்கண்ணு, சாலையனூா் எம்.சேகா், கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் புருஷோத்தமன், மாவட்டத் தலைவா் ஏ.சின்னதம்பி மற்றும் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தா்னாவில் ஈடுபட்டனா்
அப்போது, மீண்டும் பழைய முறையில் வட்ட அளவில் விவசாயிகள் குறைதீா் கூட்டத்தை நடத்தவேண்டும். அனைத்துத் துறைகளில் உள்ள முதல்நிலை அதிகாரிகள் குறைதீா் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும். கூட்டத்தில் கீழ்நிலை அதிகாரிகள் மட்டுமே பங்கேற்பதால் விவசாயிகள் கோரிக்கை நிறைவேறுவதில்லை. மன்ற கூட்டரங்கில் விவசாயிகள் உட்கார இடவசதி ஏற்படுத்தித் தரவேண்டும். குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும் என முழக்கங்களை எழுப்பினா்.
குறைதீா் கூட்டத்தை விவசாயிகள் புறக்கணித்ததால், கூட்டத்தை நடத்தமுடியாமல் பாதியிலேயே அதிகாரிகள் முடித்துக்கொண்டனா்.