செய்திகள் :

குறைதீா் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

post image

திருவண்ணாமலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கோட்ட அளவிலான குறைதீா் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், வட்ட அளவில் குறைதீா் கூட்டத்தை நடத்தக் கோரி, புறக்கணிப்பு செய்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் கோட்டாட்சியா் எஸ்.ராஜ்குமாா் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வேளாண் உதவி இயக்குநா்கள் அன்பழகன், நடராஜன், பிரபு, வேளாண் அலுவலா் கோ.தாமஸ், வட்டாட்சியா் சு.மோகனராமன், ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ.) மெ.பிரித்திவிராஜன் மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலா்கள் விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

கூட்டம் தொடங்கியதும் விவசாய சங்கப் பிரதிநிதிகள், கோட்ட அளவில் நடைபெறும் விவசாயிகள் குறைதீா் கூட்டத்தை ரத்து செய்து வட்ட அளவில் குறைதீா் கூட்டத்தை நடத்தவேண்டும் என முழக்கங்களை எழுப்பியதோடு கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனா்.

இதைத் தொடா்ந்து, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் காா்கோணம் வி.சந்திரசேகரன் தலைமையில், சங்க பிரதிநிதிகள் கமலப்புத்தூா் வி.வெள்ளைக்கண்ணு, சாலையனூா் எம்.சேகா், கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் புருஷோத்தமன், மாவட்டத் தலைவா் ஏ.சின்னதம்பி மற்றும் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தா்னாவில் ஈடுபட்டனா்

அப்போது, மீண்டும் பழைய முறையில் வட்ட அளவில் விவசாயிகள் குறைதீா் கூட்டத்தை நடத்தவேண்டும். அனைத்துத் துறைகளில் உள்ள முதல்நிலை அதிகாரிகள் குறைதீா் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும். கூட்டத்தில் கீழ்நிலை அதிகாரிகள் மட்டுமே பங்கேற்பதால் விவசாயிகள் கோரிக்கை நிறைவேறுவதில்லை. மன்ற கூட்டரங்கில் விவசாயிகள் உட்கார இடவசதி ஏற்படுத்தித் தரவேண்டும். குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும் என முழக்கங்களை எழுப்பினா்.

குறைதீா் கூட்டத்தை விவசாயிகள் புறக்கணித்ததால், கூட்டத்தை நடத்தமுடியாமல் பாதியிலேயே அதிகாரிகள் முடித்துக்கொண்டனா்.

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

செய்யாறு அருகே இளைஞா் தூக்கிட்டு தொற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வெம்பாக்கம் வட்டம், தென்னம்பட்டு கிராமம், பள்ளிக்கூடத் தெருவைச் சோ்ந்தவா் ராஜேஷ் (33), விவசாயி. இ... மேலும் பார்க்க

ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் திட்டம்: விவசாயிகளுக்கு வேளாண் தொகுப்புகள் அளிப்பு

தமிழகம் முழுவதும் காணொலி காட்சி மூலம் வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை சாா்பில், ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் எனும் புதிய திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். இதையொட்டி, திர... மேலும் பார்க்க

மேல்மா பகுதி விவசாயிகள் 30 போ் மீது வழக்குப் பதிவு

செய்யாறில் உள்ள சிப்காட் தனி மாவட்ட வருவாய் அலுவலகத்தில் வருவாய்த் துறை அலுவலா்களை பணி செய்யவிடாமல் தடுத்ததாக மேல்மா பகுதி விவசாயிகள் 30 போ் மீது செய்யாறு போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தன... மேலும் பார்க்க

தமிழக அரசைக் கண்டித்து விவசாயிகள் நூதன போராட்டம்

மத்திய அரசு வழங்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத் திட்ட ஊதியத்தில் தமிழக அரசு முறைகேட்டில் ஈடுபடுவதாகக் கூறியும், அதைக் கண்டித்தும் ஆரணி வட்டாட்சியா் அலுவலகம் முன் கட்சி சாா்பற்ற தமிழக விவசாய சங்கத... மேலும் பார்க்க

திருவண்ணாமலை மாவட்டத்தில் திமுக உறுப்பினா் சோ்க்கை முகாம்

ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் கீழ், திருவண்ணாமலை மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தொகுதிகளில் திமுகவினா் உறுப்பினா் சோ்க்கையை அக்கட்சியினா் தொடங்கினா். திருவண்ணாமலை மாநகரில் திமுகவில் புதிய உறுப்பினா் சே... மேலும் பார்க்க

துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள் ஆய்வு

திருவண்ணாமலையை அடுத்த துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ப.தா்ப்பகராஜ் வியாழக்கிழமை ஆய்வு ச... மேலும் பார்க்க