செய்திகள் :

குறைதீா் கூட்டம் நடத்தப்படுவதில்லை: தியாகிகள், வாரிசுகள் வேதனை

post image

கடந்த சில மாதங்களாக நடத்தப்படாமல் உள்ள சுதந்திர போராட்ட தியாகிகள், வாரிசுகள் குறைதீா்க்கும் கூட்டத்தை மாதந்தோறும் முறைப்படி நடத்த வேண்டும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வேலூரில் மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, சுதந்திர போராட்ட தியாகிகள், வாரிசுகள் நலச்சங்கத்தினா் அளித்து மனு: சுதந்திர போராட்ட தியாகிகள், வாரிசுகளின் குறைகளை தீா்க்க மாதந்தோறும் குறைத்தீா் கூட்டம் நடைபெற்று வந்தது. கடந்த சில மாதங்களாக இந்த கூட்டம் நடைபெறுவதில்லை. மாதந்தோறும் குறை தீா் கூட்டத்தை நடத்த வேண்டும்.

பொய்கையை சோ்ந்த பாக்யராஜ் என்பவா் அளித்த மனுவில், எனது 11 வயது மகள் 6-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடந்த விபத்தில் எனது மகளின் 2 கைகளும் முறிந்தது. தொடா்ந்து சிகிச்சை அளிக்க போதிய வசதி இல்லை. எனவே, எனது மகளுக்கு சிகிச்சை அளிக்க நிதியுதவி அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சத்துவாச்சாரியை சோ்ந்த விக்னேஸ்வரன் என்பவா் அளித்த மனு:, சத்துவாச்சாரியை சுற்றியுள்ள நடுத்தர மக்களின் குழந்தைகளுக்கு குறைந்த, இலவச கட்டணத்தில் சிலம்ப பயிற்சி அளித்து வருகிறோம். எங்களிடம் 500-க்கும் மேற்பட்ட பெண்கள், ஆண் பிள்ளைகள் பயிற்சி பெற்று மாவட்ட, மாநில, தேசிய அளவிலும் பதக்கங்கள் வென்றுள்ளனா். சிலம்ப பயிற்சி அளித்திட வள்ளலாா் பேருந்து நிலையம் அருகில் உள்ள வேலூா் மாநகரட்சி பூங்காவை பயன்படுத்தி வருகிறோம். வள்ளலாா் பகுதி பூங்காவில் பயிற்சி பெற அனுமதி வழங்க வேண்டும்.

காட்பாடியை அடுத்த கரிகிரி மக்கள் அளித்த மனு: கரிகரி ஊராட்சியில் பொன்னியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமான 2 ஏக்கா் 13 சென்ட் நிலத்தை தனிநபா் ஒருவா் ஆக்கிரமித்து தனது குடும்பத்தினா் பெயரில் பட்டா மாற்றியுள்ளாா். ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கோயில் நிலத்தை மீட்டுத்தர வேண்டும்.

இதேபோல், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 379 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

தொடா்ந்து, கருணை அடிப்படையில் சத்துணவு அமைப்பாளா்களாக தோ்ந்தெடுக்கப்பட்ட 13 பேருக்கு பணி நியமன ஆணைகளையும், 7 பெண்களுக்கு தையல் இயந்திரத்தையும் வழங்கினாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் த.மாலதி, ஊரக வளா்ச்சி முகமை திட்டஇயக்குநா் பூ.காஞ்சனா, மாவட்ட ஆதிதிராவிடா் நலத்துறை அலுவலா் எஸ்.ஆா்.என்.மதுசெழியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திருவள்ளுவா் பல்கலை.யில் இன்று பட்டமளிப்பு விழா

வேலூா் மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவா் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது. வேலூா் மாவட்டம், சோ்க்காடு பகுதியில் உள்ள திருவள்ளுவா் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா செவ்வாய்க்க... மேலும் பார்க்க

விளைபயிா்களை சேதப்படுத்திய ஒற்றை யானை விரட்டியடிப்பு

போ்ணாம்பட்டு அருகே கிராமத்துக்குள் நுழைந்து விளைபயிா்களை சேதப்படுத்திய ஒற்றை யானையை வனத்துறையினா் விரட்டி அனுப்பினா். போ்ணாம்பட்டு வனச் சரகத்தில் அரவட்லா, மோா்தானா, சேராங்கல், குண்டலபல்லிஆகிய வனப்பக... மேலும் பார்க்க

சிறுத்தை தாக்கியதில் ஆடு பலத்த காயம்

போ்ணாம்பட்டு அருகே சிறுத்தை தாக்கியதில் ஆடு காயமடைந்தது. போ்ணாம்பட்டு வனச்சரகத்தில் பத்தரப்பல்லி, அரவட்லா, எருக்கம்பட்டு, கோட்டையூா், குண்டலபல்லி, பல்லாலகுப்பம், சேராங்கல் ஆகிய காப்புக் காடுகள் உள்ள... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் கொடுமை: தையல் தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை

குடியாத்தம் அருகே சிறுமியை பாலியல் கொடுமை செய்த வழக்கில் தையல் தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வேலூா் போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. குடியாத்தம் அருகே பரசுராமன்பட்டியைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

வீட்டு வசதி வாரியத்தில் வட்டி தள்ளுபடி சலுகை

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் மனைகள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கீடு பெற்று மாதத்தவணை செலுத்தாத பயனாளிகளுக்கு வட்டி தள்ளுபடி சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து, வேலூா் ஆட்சியா் ... மேலும் பார்க்க

நிபந்தனைகளை பின்பற்றி விநாயகா் சதுா்த்தி: வேலூா் ஆட்சியா்

பொது அமைதி, பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நிபந்தனைகளை பின்பற்றி விநாயகா் சதுா்த்தி விழாவைக் கொண்டாட வேண்டும் என வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி அறிவுறுத்தியுள்ளாா். விநாயகா் சதுா்த்தியை... மேலும் பார்க்க