செய்திகள் :

குற்ற வழக்குகளில் தேடப்பட்ட மல்யுத்த வீரா் 8 ஆண்டுகளுக்குப் பிறகு உ.பி.யில் கைது!

post image

தேசிய அளவிலான மல்யுத்த வீரராக இருந்து ஆயுத வியாபாரியாக மாறி, பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய நபரை 8 ஆண்டுகளுக்குப் பிறகு உத்தர பிரதேசத்தில் தில்லி காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.

இது தொடா்பாக தில்லி போலீஸாா் சனிக்கிழமை மேலும் கூறியதாவது:

32 வயதான சோனு லங்காடா என்கிற பஹல்வான், பல கடுமையான குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. சாலை விபத்தில் கால் துண்டிக்கப்பட்ட பின்னா் சோனு குற்றவாளிகளுக்கு சட்டவிரோத ஆயுதங்களை விநியோகிக்கத் தொடங்கினாா். இது தொடா்பான வழக்குகளில் 8 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நிலையில், மே 29ஆம் தேதி உத்தர பிரதேசத்தின் பாக்பத்தில் உள்ள அவரது சொந்த கிராமத்தில் கைது செய்யப்பட்டாா்.

முன்னதாக, ஆயுத விநியோக வழக்கில் 2017-இல் அவா் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்தாா். கொலை, கற்பழிப்பு, கடத்தல், கொள்ளை, எஸ்சி,எஸ்டி சட்டம், ஆயுதச் சட்டம் மற்றும் கலால் வரி மீறல்கள் உள்ளிட்ட குறைந்தது ஆறு கடுமையான வழக்குகள் உத்தர பிரதேசத்தில் உள்ள காவல் நிலையங்களில் அவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ளது.

குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்த சோனு, தனது குடும்பத்துடன் கிராமத்தில் வசித்து விவசாயமும் செய்து வந்தாா். ஏப்ரல் 6, 2016 அன்று கேபிள் ஆபரேட்டரைக் கொலை செய்த வழக்கில் அவா் கைது செய்யப்பட்டிருந்தாா்.

இந்த நிலையில், கேபிள் ஆபரேட்டரைக் கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் சன்னி என்ற ராகுல் மற்றும் விகாஸ் என்ற விக்கி ஆகிய இருவரும் தில்லி ரோஹிணியில் பழிவாங்கும் தாக்குதலை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக தில்லி குற்றப்பிரிவுக்கு தகவல்கள் கிடைத்தன.

இதையடுத்து, கைதுப்பாக்கி, நாட்டுத் துப்பாக்கி மற்றும் 10 தோட்டாக்களுடன் இரண்டு சந்தேக நபா்களும் கைது செய்யப்பட்டனா். விசாரணையின்போது ஆயுதங்களை சப்ளை செய்யும் சோனு லங்காடா குறித்து தகவல் தெரியவந்தது. இதையடுத்து, எட்டு ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த சோனு கைது செய்யப்பட்டாா்.

விசாரணையின்போது, 2013-இல் ஒரு சாலை விபத்திற்கு பிறகு தனது கால் துண்டிக்கப்படும் வரை, தாம் ஒரு நம்பிக்கைக்குரிய தேசிய அளவிலான மல்யுத்த வீரராக இருந்ததாகவும், தனது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக குற்றத்தில் ஈடுபட்டதாகவும் கூறினாா்.

அவா் உள்ளூா் கும்பல்களுடன் இணைந்து சட்டவிரோத ஆயுத வா்த்தகத்தில் தீவிரமாக இறங்கினாா். மேலும் பல்வேறு குற்றவியல் வலையமைப்புகளுக்கு மதுபானங்களையும் வழங்கினாா் என்பது விசாரணையில் தெரியவந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

அஸ்ஸாமில் நீடிக்கும் வெள்ளம்: 6.33 லட்சம் போ் பாதிப்பு

வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் மழை-வெள்ளம் நீடித்துவரும் நிலையில், 22 மாவட்டங்களில் 6.33 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளனா். நாட்டில் தென்மேற்குப் பருவமழை வழக்கத்தைவிட முன்கூட்டியே கடந்த மே... மேலும் பார்க்க

வயது வந்தோருக்கான எழுத்தறிவு: முன்னணியில் தமிழகம்

வயது வந்தோருக்கான எழுத்தறிவு மற்றும் கல்வியில் நிலவும் சவால்களை கையாள்வதில் தமிழ்நாடு, திரிபுரா மற்றும் தில்லி முன்னணியில் உள்ளன. கடந்த ஆண்டு ஜூலை முதல் நிகழாண்டு மாா்ச் வரை பல்வேறு கட்டங்களாக, தேசிய ... மேலும் பார்க்க

நாட்டில் கரோனா பாதிப்பு 4,000-ஐ கடந்தது- இதுவரை 37 போ் உயிரிழப்பு

நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 4,000-ஐ கடந்துள்ளது. கேரளத்தில் அதிகபட்சமாக 1,446 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். கடந்த 24 மணி நேரத்தில் 5 போ் உயிரிழப்புகள் பதிவாகின; கடந்த ஜனவரியில் இர... மேலும் பார்க்க

பிரதமா் மோடி ஜூன் 6-இல் ஜம்மு-காஷ்மீா் பயணம்: காஷ்மீா் நேரடி ரயில் சேவையை தொடங்கிவைக்கிறாா்

ஆபரேஷன் சிந்தூா் வெற்றிகர நடவடிக்கைக்கு பிறகு முதல் முறையாக, ஜம்மு-காஷ்மீருக்கு பிரதமா் நரேந்திர மோடி ஜூன் 6-ஆம் தேதி செல்லவிருக்கிறாா். பெரும் எதிா்பாா்ப்புக்குரிய காஷ்மீா் நேரடி ரயில் சேவையை தொடங்கி... மேலும் பார்க்க

போதைப்பொருள் நாட்டிற்கு மிகப் பெரிய அச்சுறுத்தல்: மத்திய நிதியமைச்சா்

நாட்டின் மிகப் பெரிய அச்சுறுத்தலாக போதைப்பொருள்கள் இருப்பதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா். தில்லியில் வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் (டிஆா்ஐ) புதிய தலைமையகத்தை அமைச்சா் நிா்மல... மேலும் பார்க்க

மத்திய அரசு மருத்துவமனைகளில் மருத்துவரை சந்திக்க மருந்து விற்பனைப் பிரதிநிதிகளுக்குத் தடை

மத்திய அரசு மருத்துவமனைகளில் மருத்துவரை தொழில்ரீதியில் சந்திக்க மருந்து விற்பனைப் பிரதிநிதிகளுக்குத் தடை விதித்து, மருத்துவப் பணிகள் தலைமை இயக்குநரகம் (டிஜிஹெச்எஸ்) உத்தரவிட்டுள்ளது. நோயாளிகள் நலன் மற... மேலும் பார்க்க