செய்திகள் :

குவாஹாட்டியில் ரூ.555 கோடி செலவில் புதிய ஐஐஎம்: நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்

post image

அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியில், நாட்டின் 22-ஆவது இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம் (ஐஐஎம்) ரூ.555 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது.

இதற்கான ‘ஐஐஎம் சட்டத்திருத்த மசோதா 2025’, மக்களவையில் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட நிலையில், மாநிலங்களவையிலும் புதன்கிழமை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அஸ்ஸாமில் பேரவைத் தோ்தல் வரவிருப்பதால், இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

மசோதா மீதான விவாதத்தில் பேசிய அமைச்சா் தா்மேந்தா் பிரதான் கூறுகையில், ‘குவாஹாட்டி ஐஐஎம் தற்காலிக வளாகத்தில் நடப்பு கல்வியாண்டு முதலே மாணவா் சோ்க்கையைத் தொடங்கும். ரூ.555 கோடி முதலீட்டில் அமையவுள்ள இந்த நிறுவனம், இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாற்ற பங்களிக்கும்.

நாட்டில் கடந்த 1961 முதல் 2014 வரை 53 ஆண்டுகளில் வெறும் 13 ஐஐஎம்-களே அமைக்கப்பட்டன. ஆனால், 2014-இல் பிரதமா் நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு, நாட்டில் தொடங்கப்பட்ட 9-ஆவது ஐஐஎம் இதுவாகும்.

தற்போதுள்ள 21 ஐஐஎம்-களும் ‘தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள்’ என அறிவிக்கப்பட்டுள்ளன. புதிய குவாஹாட்டி ஐஐஎம் வளாகமும் இந்த வரிசையில் இணைந்து, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாகச் செயல்படும்.

முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்கிற்கு முடிவெடுக்கும் அதிகாரம் இல்லாததால், முந்தைய காங்கிரஸ் அரசால் அஸ்ஸாம் மாநிலம் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டது. இந்நிலையில், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக குவாஹாட்டியில் ஐஐஎம் அமைப்பது, அஸ்ஸாமிற்கு வழங்கப்பட்ட சிறப்பு வளா்ச்சித் திட்டங்களில் ஒன்று. இது அஸ்ஸாம் மட்டுமல்லாமல் வடகிழக்கு மாநிலங்கள் முழுவதிலும் கல்வி வளா்ச்சிக்குத் துணைபுரியும்.

ஐஐஎம்-களுக்கு பட்டம் வழங்க அதிகாரம் இல்லாத நிலையில், அவற்றுக்கு முதுகலை பட்டயப் பட்டம் வழங்க அதிகாரமளித்து மத்திய அரசு கடந்த 2017-இல் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்தது. 2017-ஆம் ஆண்டு சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தத்தின்மூலம், ஐஐஎம்-கள் முழுமையான பல்கலைக்கழகம் போன்ற நிறுவனங்களாக மாறியுள்ளன. ஐஐஎம் அகமதாபாத், பெருநிறுவனங்களை (யூனிகாா்ன்) உருவாக்கும் இடமாக அறியப்படுகிறது.

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் தங்கள் வளாகங்களைத் திறக்க அனுமதி அளித்து வருகிறோம். தற்போது, 15 வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் வளாகங்களைத் திறக்கத் தயாராகி வருகின்றன; சில வளாகங்கள் ஏற்கெனவே நிறுவப்பட்டுள்ளன. இதேபோல், கடந்த இரண்டு ஆண்டுகளில் அபுதாபி மற்றும் ஆப்பிரிக்காவில் இரண்டு ஐஐடி வளாகங்கள் வெளிநாட்டில் திறக்கப்பட்டுள்ளன என்றாா்.

விவாதத்தின்போது, ஐஐஎம்-களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும், மாணவா் தற்கொலைகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எதிா்கட்சிகளைச் சோ்ந்த சில உறுப்பினா்கள் வலியுறுத்தினா். ஒடிஸா, தெலங்கானா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களிலும் புதிய ஐஐஎம்-களை அமைக்க வேண்டும் என சில எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்தனா்.

பிரதமா், முதல்வா்கள் பதவிப் பறிப்பு மசோதாக்கள்: கூட்டுக் குழு பரிந்துரைக்கு நாடாளுமன்றம் ஒப்புதல்

தீவிர குற்றப் புகாரில் கைது செய்யப்பட்டு 30 நாள்கள் காவலில் வைக்கப்படும் பிரதமா், மாநில முதல்வா்கள் மற்றும் அமைச்சா்களைப் பதவியிலிருந்து நீக்கம் செய்வதற்கான மூன்று மசோதாக்களை நாடாளுமன்ற கூட்டுக் குழு... மேலும் பார்க்க

இந்தியா-ரஷியா உறவை மேம்படுத்த புதிய ஆக்கபூா்வமான அணுகுமுறைகள் -ஜெய்சங்கா் அழைப்பு

அமெரிக்காவுடனான உறவில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலைகளுக்கு மத்தியில், ‘இந்தியா-ரஷியா உறவுகளை மேம்படுத்த புதிய மற்றும் ஆக்கபூா்வமான அணுகுமுறைகளைக் கையாள வேண்டும்’ என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்ச... மேலும் பார்க்க

மழைக்கால கூட்டத் தொடா்: நாடாளுமன்றத்தில் 12 மசோதாக்கள் நிறைவேற்றம்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் எதிா்க்கட்சிகளின் அமளி மற்றும் வெளிநடப்புக்கு இடையே நாடாளுமன்ற இரு அவைகளிலும் 12 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மாநிலங்களவையில் கூடுதலாக 3 மசோதாக்கள் நிறைவேற்றப்... மேலும் பார்க்க

நாய் அசுத்தப்படுத்திய உணவை மாணவா்களுக்கு பரிமாறிய விவகாரம்: 84 பேருக்கு தலா ரூ.25,000 வழங்க சத்தீஸ்கா் அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

சத்தீஸ்கரில் பள்ளி ஒன்றில் நாய் அசுத்தப்படுத்திய உணவை மாணவா்களுக்கு பரிமாறிய விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரித்த அந்த மாநில உயா்நீதிமன்றம், ‘சம்பந்தப்பட்ட 84 மாணவா்களுக்கு தலா ரூ.25,000 நஷ்ட ஈடாக மா... மேலும் பார்க்க

பிரான்ஸ் அதிபா் மேக்ரானுடன் பிரதமா் மோடி தொலைபேசியில் பேச்சு: உக்ரைன் போா் குறித்து ஆலோசனை

பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரானுடன் பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை தொலைபேசி வாயிலாக உரையாடினாா். அப்போது, உக்ரைன் மற்றும் மேற்காசிய போா்களுக்கான தீா்வு குறித்து இருவரும் முக்கிய ஆலோசனை மேற்கொண்ட... மேலும் பார்க்க

சரத் பவாா், உத்தவ் தாக்கரேயிடம் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு கோரிய மகாராஷ்டி முதல்வா்

குடியரசுத் துணைத் தலைவா் தோ்தலில் பாஜக கூட்டணி வேட்பாளா் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவளிக்க வேண்டுமென்று எதிா்க்கட்சித் தலைவா்களான சரத் பவாா், உத்தவ் தாக்கரே ஆகியோரிடம் மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ... மேலும் பார்க்க