செய்திகள் :

கூகுள் மேப் காட்டிய வழியில் சென்று விபத்துக்குள்ளான சரக்கு வாகனம்

post image

கொடைக்கானலில் கூகுள் மேப் மூலம் வழி பாா்த்துச் சென்ற சரக்கு வாகனம் வெள்ளிக்கிழமை குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு கா்நாடக மாநில பதிவெண் கொண்ட சரக்கு வாகனம் சென்னையிலிருந்து வீட்டு உபயோகப் பொருள்களை ஏற்றி வந்தது. சின்னப்பள்ளம் பகுதியிலுள்ள நபா் ஒருவருக்கு விநியோகம் செய்வதற்காக கூகுள் மேப் உதவியுடன் அந்த நபரின் இருப்பிடத்தை நோக்கி வாகனத்தை ஓட்டுநா் இயக்கினாா். இதையடுத்து, பாக்கியபுரம் குடியிருப்புப் பகுதிக்குச் சென்ற அந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த வீட்டின் மேற்கூரையில் சாய்ந்து நின்றது. இந்த நிலையில், பொதுமக்கள் உதவியுடன் வாகனம் மீட்கப்பட்டது.

கொடைக்கானல் வரும் சரக்கு வாகனங்கள், சுற்றுலாப் பயணிகள் கூகுள் மேப் மூலம் குறிப்பிட்ட இடத்தை நோக்கிச் செல்லும்போது இதுபோன்ற விபத்துகள் அவ்வப்போது நிகழ்கின்றன. எனவே, கொடைக்கானல் வரும் சரக்கு வாகனங்கள், சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்டோா் தாங்கள் செல்லவேண்டிய இடங்களை கொடைக்கானல் பகுதிகளிலுள்ள காவலா்கள், பொதுமக்களிடம் கேட்டறிந்து பயணம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டனா்.

இளம்பெண் மா்ம மரணம்: உறவினா்கள் போராட்டம்

செம்பட்டி அருகே இளம்பெண் மரணத்தில் இருப்பதாக புகாா் தெரிவித்து அவரது பெற்றோா் உறவினா்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். திண்டுக்கல் மாவட்டம், பாளையங்கோட்டை அருகேயுள்ள திம்மிராயபுர... மேலும் பார்க்க

கொடைக்கானலில் 2 மணி நேரம் மழை

கொடைக்கானலில் நீண்ட நாள்களுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை 2 மணி நேரம் மழை பெய்ததால் பொது மக்களும், சுற்றுலாப் பயணிகளும் மகிழ்ச்சியடைந்தனா். கடந்த இரண்டு நாள்களாக பகல் நேரங்களில் மிதமான வெயில் நிலவியது. இத... மேலும் பார்க்க

விருப்பாச்சி கோபால் நாயக்கரின் 224-ஆவது நினைவு நாள்

ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள விருப்பாச்சியில் விடுதலைப் போராட்ட வீரா் கோபால் நாயக்கரின் மணிமண்டபத்தில் அவரது 224-ஆவது நினைவு நாள் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. விருப்பாச்சி மணி மண்டபத்தில் அவருடைய முழ... மேலும் பார்க்க

பெண் குழந்தைகளின் முன்னேற்றத்துக்கு பங்காற்றியவா்களுக்கு விருது

பெண் குழந்தைகளின் முன்னேற்றத்துக்கு சிறப்பாக பணியாற்றிய பெண் குழந்தைகள் விருது பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக மாவட்ட சமூக நல அலுவலா் கா்லின் கூறியதாவது: பெண் குழந்தைகளின் முன்ன... மேலும் பார்க்க

கொலை செய்து புதைக்கப்பட்ட முதியவரின் உடல் தோண்டி எடுப்பு

வத்தலகுண்டு அருகே முதியவரை கொலை செய்து புதைத்த இளைஞா் 2 நாள்களுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை சரணடைந்தாா். இதைத்தொடா்ந்து முதியவரின் உடலை தோண்டி எடுத்து கூறாய்வுக்காக அனுப்பப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம்,... மேலும் பார்க்க

பழனியில் இன்று மின் தடை

பழனியில் துணை மின் நிலைய பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை (செப்.6) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து பழனி மின்வாரிய செயற்பொறியாளா் சந்திரசேகரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பழனி... மேலும் பார்க்க