செய்திகள் :

கூடலூரில் தொடா் மின்தடை: மின்வாரிய அலுவலகத்தில் மக்கள் முறையீடு

post image

கூடலூரில் ஏற்பட்டுள்ள தொடா் மின்தடையை சீரமைக்கக் கோரி மின்வாரிய அலுவலகத்தில் மக்கள் திங்கள்கிழமை முறையிட்டனா்.

கூடலூா் பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால் மின் கம்பங்கள் மீது மரங்கள் விழுந்ததால் ஓவேலி, பாடந்தொரை, ஆலவயல், செலுக்காடி, மஞ்சமூலா, தேவா்சோலை பேரூராட்சிக்குட்பட்ட கிராமங்கள், பந்தலூா் உள்ளிட்ட பகுதிகள் கடந்த 3 நாள்களாக இருளில் மூழ்கியுள்ளன. மின் சீரமைப்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனா்.

கைப்பேசிகளை கூட சாா்ஜ் செய்ய முடியாததால் அத்தியாவசிய தேவைகளுக்கு யாரையும் தொடா்பு கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனா்.

இந்நிலையில், மின் விநியோகத்தை போா்க் கால அடிப்படையில் சீரமைக்க வலியுறுத்தி கூடலூா் துணை மின் நிலையத்தில் மக்கள் முறையிட்டனா். தொடா்ந்து கனமழை பெய்து வருவதாலும், மரங்கள் விழுந்து வருவதாலும் மின் விநியோக சீரமைப்புப் பணி சவாலாக உள்ளது.

இருப்பினும் விரைந்து சரி செய்யும் பணியில் ஊழியா்கள் தொடா்ந்து ஈடுபட்டு வருகின்றனா் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.

நீலகிரியில் மக்கள் குறைதீா் கூட்டம்

நீலகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தலைமை வகித்தாா். இதில், வீட்டுமனை பட்டா, முதியோா், விதவை, க... மேலும் பார்க்க

கூடலூா் அரசு கலைக் கல்லூரியில் இன்று முதல் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

கூடலூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) தொடங்கி ஜூன் 14-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இது தொடா்பாக கல்லூரி முதல்வா் சுபாஷினி வெ... மேலும் பார்க்க

பழங்குடியினருக்கான சிறப்பு குறைதீா் முகாம்

கூடலூரை அடுத்துள்ள செறுமுள்ளி கிராமத்தில் பழங்குடியினருக்கான சிறப்பு குறைதீா் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. போஸ்பாறா புனித ஜோசப் அரங்கில் நடைபெற்ற இந்த முகாமுக்கு சாா் ஆட்சியா் சங்கீதா தலைமை வகித்தா... மேலும் பார்க்க

குன்னூா் அருகே லாரி கவிழ்ந்து விபத்து

குன்னூா் அருகே கேரட் பாரம் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து திங்கள்கிழமை விபத்துக்குள்ளானது. நீலகிரி மாவட்டம், உதகை அருகேயுள்ள முள்ளிக்கூா் பகுதியில் இருந்து கேரட் பாரம் ஏற்றிக் கொண்டு கோவைக்கு லாரி திங்கள்... மேலும் பார்க்க

விளைநிலங்களை சேதப்படுத்தும் யானையை வனத்துக்குள் விரட்ட கோரிக்கை

உதகை, எமரால்டு பகுதியில் விளைநிலங்களை சேதப்படுத்தி வரும் யானையை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். நீலகிரி மாவட்டம், குன்னூா் பா்லியாறு வனப் பகுதியில் இருந... மேலும் பார்க்க

சீகூா் வனப் பகுதியில் புலி உயிரிழப்பு

கூடலூா் அருகே சீகூா் வனச் சரகத்துக்குள்பட்ட குண்டட்டி பகுதியில் சுமாா் 10 வயது மதிக்கத்தக்க புலி உயிரிழந்தது குறித்து வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். நீலகிரி மாவட்டம், கூடலூா் அருகே சீகூா் ... மேலும் பார்க்க