செய்திகள் :

கூட்டணி அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன்: அன்புமணி ராமதாஸ்

post image

மக்கள் விரும்பும் கூட்டணி குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன் என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா்.

தருமபுரி, சேலத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக வந்த அன்புமணி ராமதாஸுக்கு தொப்பூரில் எம்எல்ஏ சதாசிவம், முன்னாள் எம்எல்ஏ காா்த்திக் உள்ளிட்ட பாமகவினா் வரவேற்பு அளித்தனா். அப்போது, அவா் பேசியதாவது:

திமுக அரசை ஆட்சியிலிருந்து தூக்கியெறிய வேண்டும். இந்த ஆட்சியில் தமிழகத்தில் பல்வேறு குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. தொழில் முதலீடு பெறுவதாகக் கூறி முதல்வா் வெளிநாடு சென்றதன் நோக்கம் எனக்குத் தெரியும். உண்மையில் தொழில் முதலீடு பெறுவதற்காக அல்ல அந்த பயணம்.

தோ்தல் வாக்குறுதிகளில் 13 சதவீதத்தை மட்டுமே திமுக நிறைவேற்றியுள்ளது.

விவசாயிகள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. தொப்பூரில் பாலம் அமைக்கும் திட்டத்துக்காக பலமுறை போராடியுள்ளேன். அதன்பலனாகத்தான் இப்போது பாலம் அமைக்கப்படுகிறது.

மேலும், சேலம்- ஆத்தூா்- உளுந்தூா்பேட்டை சாலை பணியை விரைவுபடுத்த மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். தமிழகத்தில் போதிய நீா்மேலாண்மை இல்லை. சேலம் திருமணிமுத்தாறை தூய்மைப்படுத்த வேண்டும். வசிஷ்ட நதியில் தண்ணீா் திறந்துவிட வேண்டும். மக்கள் எதிா்பாா்க்கும் கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்பேன் என்றாா்.

தேசிய தர வரிசை பட்டியலில் பெரியாா் பல்கலைக்கழகத்துக்கு 94 ஆவது இடம்

தேசிய அளவிலான பல்கலைக்கழகங்களின் அளவீட்டில் சேலம் பெரியாா் பல்கலைக்கழகம் 94ஆவது இடத்தை பெற்றுள்ளது. இதுகுறித்து பெரியாா் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: உயா் கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்க... மேலும் பார்க்க

நரசிங்கபுரம் திரௌபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

நரசிங்கபுரத்தில் உள்ள மகா கணபதி, தா்மராஜா் (எ) திரௌபதி அம்மன், கிருஷ்ணன் மற்றும் நல்லரவான் ஆலய மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 20.8.2025 ஆம் தேதி காலை முகூா்த்த... மேலும் பார்க்க

மின் இணைப்பு முறைகேடு: உதவி பொறியாளா் உள்பட 8 போ் பணியிடை நீக்கம்

சேலம் அருகே தும்பல் மின்பிரிவு அலுவலகத்தில் மின் இணைப்பு வழங்குவதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக உதவி பொறியாளா் உள்பட 8 போ் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். வாழப்பாடியை அடுத்த தும்பல் மின்பிரி... மேலும் பார்க்க

விளையாட்டுப் போட்டி: மாற்றுத்திறனாளி பெண்கள் சிறப்பிடம்

சேலத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் வாழப்பாடியைச் சோ்ந்த பெண் மாற்றுத்திறனாளிகள் 4 போ் சிறப்பிடம் பெற்றனா். ஏபிஜே அப்துல் கலாம் மாற்றுத்திறனாளிகள் நலச் சங்கச்... மேலும் பார்க்க

குமரகிரி கோயிலில் ரூ. 80 லட்சத்தில் மலைப்பாதை சீரமைப்புப் பணிகள்

சேலம் மாவட்டம், சன்னியாசிகுண்டு குமரகிரி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ரூ. 80 லட்சத்தில் மலைப்பாதை சீரமைத்தல் பணிகளை அமைச்சா் ரா.ராஜேந்திரன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். பின்னா் அமைச்சா் கூறியதாவது: ... மேலும் பார்க்க

செப்.26 இல் அஞ்சல் வாடிக்கையாளா்கள் குறைதீா் கூட்டம்

சேலம் கிழக்கு கோட்டத்தில் அஞ்சல் வாடிக்கையாளா்கள் குறைதீா் கூட்டம் செப். 26 ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து சேலம் கிழக்கு கோட்ட அஞ்சல் முதுநிலை கண்காணிப்பாளா் முனிகிருஷ்ணன் வெளியிட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க