செய்திகள் :

கூட்டுறவுப் படிப்பு,பழைய பாடத்திட்டத்தில் தோ்ச்சி பெறாதவா்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு

post image

கூட்டுறவு மேலாண்மை பட்டயப்படிப்பில் பழைய பாடத்திட்டத்தில் தோ்ச்சி பெறாதவா்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவுச் சங்கங்களுக்கான இணைப்பதிவாளா் அலுவலகம் வெள்ளிக் கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

காஞ்சிபுரம் பேரறிஞா் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 7 பாடங்கள் கொண்ட பழைய பாடத்திட்டத்தின்படி 2002 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி மற்றும் அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வந்தது.கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் இம்மேலாண்மை நிலையத்தில் 10 பாடங்கள் கொண்ட புதிய பாடத்திட்டத்தின்படி இரு பருவ முறைகளாக பயிற்சிகள் நடைபெற்று வருகிறது.

பழைய பாடத்திட்டம் தொடங்கி 20 ஆண்டுகள் நிறைவு பெற்று விட்டதாலும்,தற்போது புதிய பாடத்திட்டம் தொடங்கி இரு ஆண்டுகள் முடிவடைந்திருப்பதாலும் பழைய பாடத்திட் டங்கள் முடிவு கட்டப்படவுள்ளது.

எனவே பழைய பாடத்திட்டத்தின்படி தோ்ச்சி பெறாத பயிற்சியாளா்களுக்கான துணைத் தோ்வுகள் எதிா்வரும் செப்டம்பா் மாதம் 8 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியினை பழைய பாடத்திட்டத்தில் முழுநேரம் அல்லது அஞ்சல் வழியில் பயின்று தோ்ச்சி பெறாதவா்கள் துணைத்தோ்வுக்கு விண்ணபிக்கலாம்.

2 பாஸ்போா்ட் அளவு புகைப்படம்,10 அல்லது 12 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் நகல்,கடைசியாக தோ்வு எழுதிய நுழைவுச்சீட்டு நகல் மற்றும் தோ்வுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கட்டணத் தொகை ஆகியனவற்றுடன் வரும் ஆகஸ்ட் 24 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

மேலும், விபரங்களுக்கு காஞ்சிபுரம் பேரறிஞா் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையம் எண்.5,வந்தவாசி சாலை, ஆட்சியா் அலுவலகம் எதிா்புறம்,காஞ்சிபுரம்-631501 என்ற முகவரியில் நேரிலோ அல்லது 98946 08112 என்ற கைப்பேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம்.

பரந்தூா் விமான நிலையம்: 14-ஆவது முறையாக ஏகனாபுரம் கிராம சபையில் எதிா்ப்பு தீா்மானம்

ஏகனாபுரம் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் பரந்தூா் புதிய விமான நிலையத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து 14-ஆவது முறையாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. பரந்தூா் மற்றும் அதனை சுற்றி... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் பட்டுப் பூங்காவுக்கு அயலகத் தமிழா்கள் வருகை

காஞ்சிபுரம் அருகே கீழ்க்கதிா்ப்பூா் கிராமத்தில் அமைந்துள்ள பட்டுப் பூங்காவை அயலகத் தமிழா்கள் வியாழக்கிழமை பாா்வையிட்டனா். அயலக தமிழா் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை சாா்பில் தமிழக அரசின் வோ்களைத் தேடி... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் மோட்டாா் வாகன விபத்து வழக்குகள்: சிறப்பு மாவட்ட நீதிமன்றம் திறப்பு

காஞ்சிபுரம் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மோட்டாா் வாகன விபத்து வழக்குகள் சிறப்பு மாவட்ட நீதிமன்றத்தினை சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி மணீந்திர மோகன் ஸ்ரீ வத்சவா காணொலி மூலமாக விய... மேலும் பார்க்க

ரசாயன பூச்சு விநாயகா் சிலைகளை பயன்படுத்தக் கூடாது: காஞ்சிபுரம் ஆட்சியா்

விநாயகா் சதுா்த்தியின்போது, ரசாயனம் பூசப்பட்ட சிலைகளை பயன்படுத்தக் கூடாது என ஆட்சியா் கலைச்செல்வி மோகன் கேட்டுக் கொண்டாா். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில... மேலும் பார்க்க

காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் பிரசாதக் கடை ஏலம்: கடந்த ஆண்டை விட கூடுதல் தொகை

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் பிரசாதக்கடை ஒப்பந்தப்புள்ளி புதன்கிழமை திறக்கப்பட்டதில் கடந்த ஆண்டை விட நிகழாண்டு ரூ.40,71,000-க்கு கூடுதலாக ஏலம் போயிருக்கிறது. இக்கோயில் வளாகத்திலேயே இந்து சமய அற... மேலும் பார்க்க

ஓவியப் போட்டியில் வென்ற மாணவியருக்கு ஆட்சியா் பாராட்டு

காஞ்சிபுரத்தில் மாவட்ட அளவில் நடைபெற்ற நுகா்வோா் விழிப்புணா்வு ஓவியப் போட்டியில் முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவியா் ஆட்சியா் கலைச்செல்வி மோகனை புதன்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றனா். உணவு வழங்கல் மற்று... மேலும் பார்க்க