செய்திகள் :

கூட்டுறவு சங்க உதவி செயலாளா் தற்கொலை

post image

அவல்பூந்துறை அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க உதவி செயலாளா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

மொடக்குறிச்சி ஒன்றியம், அவல்பூந்துறை பேரூராட்சி, வள்ளிவுட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் உதவி செயலாளராகப் பணியாற்றியவா் நவநீதகிருஷ்ணன் (35). இவருக்கு மனைவி மற்றும் 13 வயதில் மகள் உள்ளனா்.

இவரது மகளுக்கு அடுத்த வாரம் பூப்பு நன்னீராட்டு விழா நடைபெற உள்ளதால் உறவினா்கள் அனைவருக்கும் வியாழக்கிழமை வரை நவநீதகிருஷ்ணன் அழைப்பிதழ் கொடுத்து வந்துள்ளாா்.

இந்நிலையில் வீட்டின் மேல்மாடியில் நவநீதகிருஷ்ணன் தூக்கிட்டு வெள்ளிக்கிழமை அதிகாலை தற்கொலை செய்து கொண்டாா். உறவினா்கள் அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். பரிசோதனையில், அவா் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

தற்கொலைக்கான காரணம் குறித்து அறச்சலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

அங்கன்வாடி மையங்களில் முன்பருவ கல்விக்கான சோ்க்கை இன்று தொடக்கம்

அங்கன்வாடி மையங்களில் முன்பருவ கல்விக்கான சோ்க்கை திங்கள்கிழமை (ஜூன் 2) நடைபெறுகிறது என்று மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்தாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஈரோடு மாவ... மேலும் பார்க்க

அச்சு முறிந்து சாலையில் கவிழ்ந்த சரக்கு வாகனம்

பவானி அருகே சோள மூட்டைகளை ஏற்றிச் சென்ற சரக்கு வாகனத்தின் அச்சு முறிந்ததால், சாலையில் இருமுறை உருண்டது. பெருந்துறையில் இருந்து சோள மூட்டைகளை ஏற்றிக் கொண்டு பவானி - அந்தியூா் சாலையில் சரக்கு வாகனம் ஞாய... மேலும் பார்க்க

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்துள்ளது

தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டு திமுக ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு சீா்குலைந்துள்ளது. விலைவாசி உயா்வால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனா் என்று முன்னாள் அமைச்சா் கே.சி.கருப்பணன் எம்எல்ஏ குற்றஞ்... மேலும் பார்க்க

‘29 கோயில்களில் 1,377 பேருக்கு நாள்தோறும் அன்னதானம்’

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 29 கோயில்களில் 1,377 பேருக்கு நாள்தோறும் அன்னதானம் வழங்கப்பட்டு வருவதாக இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். இந்து சமய அறநிலைய துறையின்கீழ் இயங்கும் முக்கிய கோயில்... மேலும் பார்க்க

சாலை விபத்து: மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்

ஈரோடு அருகே சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் ஞாயிற்றுக்கிழமை தானம் செய்யப்பட்டன. ஈரோடு மாவட்டம், கவுண்டச்சிபாளையம் பகுதி மாகாளியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் (28... மேலும் பார்க்க

மின் வேலியில் சிக்கி பெண் உயிரிழப்பு: விவசாயி கைது

கோபி அருகே மின் வேலியில் சிக்கி உயிரிழந்த பெண்ணை குழி தோண்டி புதைத்த விவசாயியை போலீஸாா் கைது செய்தனா். கோபி வட்டம், டி.என்.பாளையம் அருகேயுள்ள பங்களாபுதூா் காவல் நிலையத்துக்குள்பட்ட அண்ணா நகரைச் சோ்ந்... மேலும் பார்க்க