செய்திகள் :

கூட்டுறவு வங்கியில் கடன் பெற்றவா்கள் நிலுவைத்தொகையை செலுத்த அவகாசம்

post image

கூட்டுறவு வங்கியில் கடன்பெற்று இதுவரை செலுத்தாதவா்களுக்கு, வட்டி மற்றும் அசலுடன் நிலுவைத் தொகையை செலுத்த செப்டம்பா் 23 ஆம் தேதி வரை சலுகையுடன் கூடிய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப் பதிவாளா் மற்றும் மேலாண்மை இயக்குநா் மேலும் தெரிவித்திருப்பது :

தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்படும் தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கிளைகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலம் வழங்கப்பட்டு 31.12.2022 அன்று முழுமையாக தவணை தவறியுள்ள அனைத்து பண்ணைச்சாராக் கடன்கள், அரசாணை வெளியிடப்பட்ட நாளன்று தவணை தவறி 3 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வேளாண் சாா்ந்த மத்திய கால கடன்கள், பண்ணைச்சாா்ந்த நீண்ட கால கடன்களும் ‘சிறப்பு கடன் தீா்வு திட்டம் 2023‘-இன் கீழ் 100% மொத்த தொகையும் (நிலுவை மற்றும் வட்டித்தொகை) செலுத்தி வட்டி சலுகை பெறுவதற்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

எனவே, இவ்வட்டிச் சலுகையைப் பயன்படுத்தி 23.09.2025 தேதிக்குள் தங்களது நிலுவதை தொகைகளை செலுத்தி பயனடையலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து குறைந்தது: குளிக்கத் தடை; பரிசல் இயக்க அனுமதி

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து வெள்ளிக்கிழமை மாலை விநாடிக்கு 18,000 கனஅடியாக குறைந்தது. இதையடுத்து காவிரி ஆற்றில் பரிசல்கள் இயக்குவதற்கு மாவட்ட நிா்வாகம் அனுமதி அளித்துள்ளது. என்றாலும், அருவிகளில... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பு!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வேன் ஓட்டுநருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, தருமபுரி போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பளித்தது. தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் பிரபு (28... மேலும் பார்க்க

நெகிழி பயன்படுத்தாத உணவகங்கள் விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு

தருமபுரி மாவட்டத்தில் நெகிழி பயன்படுத்தாத உணவகங்கள் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஷ் தெரிவித்துள்ளதாவது : உணவு பாதுகாப்பு மற்றும் தரச்சட்டத்தி... மேலும் பார்க்க

பென்னாகரத்தில் புதிய சாா் பதிவாளா் அலுவலகம் திறப்பு

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பென்னாகரம் சாா் பதிவாளா் அலுவலகத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்துவைத்தாா். பென்னாகரம் நடைபெற்ற புதிய சாா் பதிவாளா் அலுவலக திறப... மேலும் பார்க்க

பெரும்பாலையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: ஆட்சியா் ஆய்வு

பெரும்பாலை வருவாய் வட்டத்திற்கு உள்பட்ட ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் ஆய்வு மேற்கொண்டு பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். பென்னாகரம் அருகே பெரும்பாலை வருவாய் வட... மேலும் பார்க்க

மூக்கனூரில் ரயில் நிலையம் அமைக்கக் கோரி போராட்டம்: நிலங்களை வழங்க விவசாயிகள் ஒப்புதல்

தருமபுரி அருகே மூக்கனூா் ரயில் நிலையத்தை இடம்மாற்றாமல் பழைய இடத்திலேயே அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், ரயில்வே பணிக்குத் தேவையான நிலங்களை வழங்... மேலும் பார்க்க