செய்திகள் :

கேதார்நாத்தில் எய்ம்ஸ் ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்

post image

தொழில்நுட்பக் கோளாறு கேதார்நாத்தில் எய்ம்ஸ் ஹெலிகாப்டர் சனிக்கிழமை அவசரமாக தரையிறக்கப்பட்டது.

உத்தரகண்ட் மாநிலம், ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் நிறுவனத்தால் 'சஞ்சீவனி' எனும் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் இயக்கப்பட்டு வருகிறது.

நோயாளி ஒருவரை மீட்பதற்காக ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் ரிஷிகேஷில் இருந்து கேதார்நாத் சென்றபோது அதில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது.

இதனால் விமானி ஹெலிகாப்டரை அவசரமாக தரையிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தட்டையான மேற்பரப்பில் அவசரமாக தரையிறங்கும் போது ஹெலி ஆம்புலன்ஸின் வால் ரோட்டார் திடீரென உடைந்தது.

உத்தரகண்ட்: புனித யாத்திரைத் தலங்களை நிர்வகிக்க புதிய குழு! அமைச்சரவை ஒப்புதல்!

இருப்பினும் ஹெலிகாப்டரில் இருந்த இரண்டு மருத்துவர்களும் விமானியும் பாதுகாப்பாக இருந்தனர் என்று மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு அதிகாரி ராகுல் சௌபே தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) விசாரணை நடத்தும் என்று சௌபே மேலும் கூறினார்.

உச்சநீதிமன்ற தீா்ப்பால் பணியிழந்த மேற்கு வங்க பள்ளி ஆசிரியா்கள்: 3-ஆம் நாளாக தொடா் போராட்டம்

உச்சநீதிமன்றம் கடந்த மாதம் வழங்கிய தீா்ப்பால் பணியை இழந்த மேற்கு வங்க அரசுப் பள்ளி ஆசிரியா்கள், அந்த மாநில கல்வித் துறையின் தலைமை அலுவலகம் முன் 3-ஆவது நாளாக சனிக்கிழமையும் போராட்டத்தைத் தொடா்ந்தனா். ம... மேலும் பார்க்க

15 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த ம.பி.யைச் சோ்ந்த கொலைக் குற்றவாளி கைது

மத்தியப் பிரதேசத்தைச் சோ்ந்த கொலைக் குற்றவாளியை குருகிராம் காவல்துறையினா் கைது செய்துள்ளனா். அவா் கடந்த 15 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்தாா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா். இது குறித்து குருகிராம் காவல்... மேலும் பார்க்க

சிந்து நதிநீா் ஒப்பந்தம் நிறுத்தம்: செனாப் நதி கால்வாயை நீட்டிக்க மத்திய அரசு திட்டம்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடா்ந்து சிந்து நதிநீா் ஒப்பந்தம் நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருந்த செனாப் கிளை நதியில் கட்டப்பட்டிருந்த கால்வாயின் நீளத்தை நீட்டிக்க ... மேலும் பார்க்க

‘இந்தியாவுக்கு எதிரான நாடுகளின் பொருளாதாரத்துக்கு உதவக் கூடாது’: குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா்

‘இந்தியாவின் நலன்களுக்கு எதிராகவுள்ள நாடுகளின் பொருளதாரத்துக்கு வா்த்தகம் மற்றும் சுற்றுலா மூலம் நாட்டு மக்கள் உதவக் கூடாது’ என்று குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் சனிக்கிழமை வலியுறுத்தினாா். ஆபரே... மேலும் பார்க்க

ம.பி.: இளைஞரைக் கொன்று உடலில் பாதியை தின்ற புலி

மத்தியப் பிரதேசத்தில் பீடி இலைகளை சேகரிக்க சென்ற இளைஞரை கொன்று உடலில் பாதியை தின்ற புலியால் பரபரப்பு நிலவியது. மத்தியப் பிரதேசத்தின் பாலகாட் மாவட்டத்தில் உள்ள கட்டாங்கி வனப்பகுதியில் பீடி இலைகளைச் சேக... மேலும் பார்க்க

பிரதமரின் உறுதியான அரசியல் நிலைப்பாட்டின் அடையாளம் ‘ஆபரேஷன் சிந்தூா்’: அமித் ஷா

பிரதமா் நரேந்திர மோடியின் உறுதியான அரசியல் நிலைப்பாட்டின் தனி அடையாளம் ‘ஆபரேஷன் சிந்தூா்’ என்று உள்துறை அமைச்சா் அமித் ஷா பெருமிதம் தெரிவித்தாா். மேலும், ‘நாட்டின் பல்வேறு பாதுகாப்பு முகமைகளின் துல்லி... மேலும் பார்க்க