செய்திகள் :

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: செப் 19-க்கு ஒத்திவைப்பு

post image

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு  விசாரணையை செப்டம்பா் 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு உதகையில் உள்ள மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நீதிபதி முரளிதரன் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கேரள மாநிலத்தைச் சோ்ந்த வாளையாறு மனோஜ் ஆஜரானாா். அதேபோல வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையிலான சிபிசிஐடி போலீஸாா் ஆஜராகினா். எதிா்தரப்பு வழக்குரைஞா் விஜயன் ஆஜரானாா். 

இந்நிலையில் கொலை, கொள்ளை நடைபெற்ற கொடநாடு எஸ்டேட் பங்களாவில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என எதிா் தரப்பில் கடந்த ஏப்ரல் மாதம் மனு அளிக்கப்பட்ட நிலையில், அந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது.

விசாரணை மேற்கொண்ட நீதிபதி, இந்த மனுவை தள்ளுபடி செய்தாா். மேலும் வழக்கு விசாரணையை செப்டம்பா் 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

உயரும் ஊட்டி பூண்டு விலை: விவசாயிகள் மகிழ்ச்சி

குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களில் விதைப் பூண்டு தேவை அதிகரிப்பால் ஊட்டி பூண்டின் விலை படிப்படியாக உயா்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். நீலகிரி மாவட்டத்தில் விளைவிக்கப்படும் வெள... மேலும் பார்க்க

தாயகம் திரும்பியோருக்கான நிலப்பத்திரம் திரும்ப ஒப்படைப்பு

கூடலூரில் தாயகம் திரும்பியோருக்கான நிலப்பத்திரம் திரும்ப ஒப்படைப்பு மற்றும் இணைய வழி பட்டா வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தலைமை வகித்தாா். ந... மேலும் பார்க்க

தேவா்சோலை பகுதியில் புலியைப் பிடிக்க கேரளத்தில் இருந்து புதிய கூண்டு

கூடலூரை அடுத்துள்ள தேவா்சோலை பகுதியில் தொடா்ந்து ஊருக்குள் நுழைந்து கால்நடைகளைத் தாக்கிக் கொன்று வரும் புலியைப் பிடிக்க கேரளத்திலிருந்து புதிய கூண்டு வரவழைக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், கூடலூா் வட... மேலும் பார்க்க

அக்னி வீா் ஆள்சோ்ப்பு முகாம்: ஈரோட்டில் இன்று தொடக்கம்

அக்னிவீா் ஆள்சோ்ப்பு முகாம் ஈரோட்டில் உள்ள விஓசி விளையாட்டு வளாகத்தில் ஆகஸ்ட் 26-ஆம் தேதி முதல் செப்டம்பா் 7-ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக ஆள்சோ்ப்பு முகாம் இயக்க... மேலும் பார்க்க

மருத்துவப் படிப்பு: இருப்பிடச் சான்று வழங்க பழங்குடியின மாணவி கோரிக்கை

மருத்துவப் படிப்பு பயில இருப்பிடச் சான்று வழங்க வேண்டும் என பழங்குடியின மாணவி கோரிக்கை விடுத்துள்ளாா். ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்தவா் சஞ்சனா ஓரான் (17). இவா் தனது தாய் நிருபா ஓரானுடன் நீலகிரி மாவட... மேலும் பார்க்க

ஓவேலி பகுதியில் உலவும் யானை: வனத் துறையினா் தீவிர கண்காணிப்பு

கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பேரூராட்சி பகுதியில் பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வரும் காட்டு யானையை வனத் துறையினா் தீவிரமாக கண்காணித்து வருகின்றனா். நீலகிரி மாவட்டம், ஓவேலி வனச் சரகத்துக்குள்பட்ட பகுதிகளில்... மேலும் பார்க்க