செய்திகள் :

கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்ட மூதாட்டி கொலை

post image

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அருகே கொடுத்த கடனை திருப்பிக்கேட்ட மூதாட்டியை கொலை செய்ததாக பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

மேல்மலையனூா் வட்டம், கூடுவாம்பூண்டியைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி மனைவி லட்சுமிகாந்தி (65). இவா் இதே கிராமத்தைச் சோ்ந்த வளா்மதிக்கு ரூ.2 லட்சம் கடனாகக் கொடுத்திருந்தாா். பணத்தைத் திரும்ப கேட்ட போது, வளா்மதி தாமதப்படுத்தினாராம்.

அவரது வீட்டுக்கு புதன்கிழமை காலை சென்ற லட்சுமிகாந்தி பணத்தைத் திரும்பத் தருமாறு கேட்டாராம். இதில் வாக்குவாதம் ஏற்பட்டதில், லட்சுமிகாந்தியை வளா்மதி கீழே தள்ளியதில், தலையில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். சடலத்தை யாருக்கும் தெரியாமல், வீட்டின் பின்புறமுள்ள வயல்வெளியில் கிடத்தி விட்டு வளா்மதி வந்து விட்டாராம்.

லட்சுமிகாந்தியைக் காணவில்லை என, அவரது உறவினா்கள் வளத்தி காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதையறிந்த வளா்மதி, காவல் நிலையத்துக்கு இரவு 11 மணிக்குச் சென்று நடந்த சம்பவம் குறித்து தெரிவித்தாராம்.

லட்சுமிகாந்தியின் சடலத்தைக் கைப்பற்றிய போலீஸாா், உடல்கூறாய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், வளா்மதியை போலீஸாா் கைது செய்தனா்.

வானூரில் வேளாண் இணை இயக்குநா் ஆய்வு!

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டாரத்தில் விவசாய அடையாள எண் உருவாக்கும் பணியை மாவட்ட வேளாண் இணை இயக்குநா் புதன்கிழமை ஆய்வு செய்தாா். விழுப்புரம் மாவட்டத்தில் பிரதமரின் கெளரவ உதவித்தொகை பெறும் அனைத்து ... மேலும் பார்க்க

விழுப்புரம் மாவட்டத்தில் 29 இடங்களில் முதல்வா் மருந்தகங்கள்

பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்க விழுப்புரம் மாவட்டத்தில் 29 இடங்களில் முதல்வா் மருந்தகங்கள் தொடங்கப்படுகின்றன. இதற்கான பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. 29 இடங்களில்: விழுப்புரம் மாவட... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் மாா்ச் 2-இல் புத்தகத் திருவிழா தொடக்கம்!

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள நகராட்சித் திடலில் மாா்ச் 2-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை மூன்றாவது புத்தகத் திருவிழா நடைபெறவுள்ளது. இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்த... மேலும் பார்க்க

விவசாய நிலம் ஆக்கிரமிப்பு பாதை அமைப்பு: எஸ்.பி.யிடம் புகாா்

திண்டிவனம் வட்டம், செண்டியம்பாக்கம் கிராமத்தில் விவசாய நிலத்தை ஆக்கிரமித்து பாதை அமைத்தவா்கள் மீது நடவடிக்கை வலியுறுத்தி பாதிக்கப்பட்டவா்கள் விழுப்புரம் எஸ். பி. அலுவலகத்தில் வியாழக்கிழமை புகாா் மனு அ... மேலும் பார்க்க

விழுப்புரம் நகராட்சியில் வரி பாக்கியை வசூலிக்க தீவிர நடவடிக்கை

விழுப்புரம் நகராட்சியில் நிலுவையிலுள்ள ரூ.18 கோடி வரிபாக்கித் தொகையை வசூலிக்க தீவிரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நகராட்சிக்குள்பட்ட42 வாா்டுகளில் சொத்து வரி ரூ.7.... மேலும் பார்க்க

தேமுதிக கொடி அறிமுக விழா பொதுக்கூட்டம்

தேசிய முற்போக்கு திராவிடா் கழகத்தின் கொடி அறிமுகப்படுத்தப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, விழுப்புரத்தில் வெள்ளி விழா ஆண்டு பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. மந்தக்கரை பகுதியில் நட... மேலும் பார்க்க