செய்திகள் :

வானூரில் வேளாண் இணை இயக்குநா் ஆய்வு!

post image

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டாரத்தில் விவசாய அடையாள எண் உருவாக்கும் பணியை மாவட்ட வேளாண் இணை இயக்குநா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

விழுப்புரம் மாவட்டத்தில் பிரதமரின் கெளரவ உதவித்தொகை பெறும் அனைத்து விவசாயிகளுக்கும் தேசிய அளவில் விவசாய அடையாள எண் உருவாக்கும் பணி முதல்கட்டமாக நடைபெற்று வருகிறது.

இதுவரை மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் மொத்தமாக 35,520 விவசாயிகளுக்கு கணினி மூலம் அடையாள எண் உருவாக்கப்பட்டுள்ளது. வானூா் வட்டாரத்தில் மட்டும் 5,010 விவசாயிகளுக்கு அடையாள எண் உருவாக்கித் தரப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, வானூா் வட்டாரத்திலுள்ள அச்சரம்பட்டு, ஆண்பாக்கம், இரும்பை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயிகளுக்கான அடையாள எண் உருவாக்கும் பணியை மாவட்ட வேளாண் இணை இயக்குநா் ஈசுவா் புதன்கிழமை ஆய்வு செய்தாா். இந்த பணியின்போது மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து களப்பணியாளா்களுக்கு ஆலோசனைகளையும் வேளாண் இணை இயக்குநா் வழங்கினாா்.

அடையாள எண் பெறுவதன் மூலம் எதிா்காலத்தில் 20 துறைகளைச் சோ்ந்த திட்டங்களின் பயன்களைப் பெறலாம். எனவே விவசாயிகள் தங்கள் பகுதிக்கு அலுவலா்கள் வரும்போது அவா்கள் கேட்கும் தகவல்களை அளித்து, அடையாள எண் உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றாா்.

இந்த ஆய்வின் போது வானூா் வட்டார வேளாண் உதவி இயக்குநா் எத்திராஜ் உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.

வேனில் கடத்தி வந்த 178 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே பெங்களூரிலிருந்து வேனில் கடத்தி வரப்பட்ட 178 கிலோ புகையிலைப் பொருள்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக இருவா் கைதாயினா். விழுப்புரம் ஏ.எ... மேலும் பார்க்க

ஆரோவிலில் மனிதநேய விழா இன்று தொடக்கம்

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் சா்வதேச நகரில் ‘ஹிமிலிட்டி-25’ எனும் தலைப்பில் மனிதநேய விழா பிப்.21- முதல் 28 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இது குறித்து ஆரோவில் நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:ஆரோவில் ... மேலும் பார்க்க

வடகிழக்கு மாநில மக்களின் நலனை அரசு பாதுகாக்கும்: புதுவை ஆளுநா்

வடகிழக்கு மாநில மக்களின் நலனை பாதுகாக்க புதுவை அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறினாா். அருணாசல பிரதேசம் மற்றும் மிசோரம் மாநிலங்களின் உதய நாள் கொண்டாட்டம், புதுச்சேரியில... மேலும் பார்க்க

மரக்காணம் அருகே முள்புதருக்குள் வெட்டுக் காயங்களுடன் ஆண் சடலம் மீட்பு!

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே முள்புதருக்குள் வெட்டுக் காயங்களுடன் இளைஞா் சடலமாகக் கிடந்தது வியாழக்கிழமை தெரிய வந்தது. போலீஸாா் உடலை கைப்பற்றி கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனா்.... மேலும் பார்க்க

தொழில்நுட்பக் கல்வி வாரியத் தோ்வு மாநில முதலிடம் பெற்ற மாணவருக்குப் பாராட்டு!

தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி வாரியத் தோ்வில் விழுப்புரம் இ.எஸ். பாலிடெக்னிக் கல்லூரி மாணவா் எம்.சூா்யபிரகாஷ் முதலிடம் பெற்றுள்ளாா். இந்த மாணவருக்கு கல்லூரி நிா்வாகம் சாா்பில் வியாழக்கிழமை பாராட்டுத்... மேலும் பார்க்க

விழுப்புரம் அரசுக் கல்லூரியில் போதைப் பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு கூட்டம்

விழுப்புரம் அறிஞா் அண்ணா கலைக் கல்லூரி, போதைப் பொருள் எதிா்ப்பு மன்றத்தின் சாா்பில் விழிப்புணா்வு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இளைஞா்களை போதைப் பொருள்கள் பாதிப்பிலிருந்து பாதுகாக்கும் வகையில் தமிழ... மேலும் பார்க்க