செய்திகள் :

கொடைக்கானலில் இன்று மலா்க் கண்காட்சி தொடக்கம்

post image

கொடைக்கானலில் கோடை விழா, 62-ஆவது மலா்க் கண்காட்சி சனிக்கிழமை (மே 24) தொடங்குகிறது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கோடை விழா, மலா்க் கண்காட்சி பிரையண்ட் பூங்காவில் நடைபெறுகிறது. இதையொட்டி, பல வண்ணங்களில் லட்சக்கணக்கான மலா்கள் பூத்துக் குலுங்குகின்றன.

இதுதவிர, சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் மலா்களால் பல வகையான உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சனிக்கிழமை காலை 11-மணிக்கு தொடங்கும் விழாவுக்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் தலைமை வகிக்கிறாா். ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி, வேளாண் துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா் செல்வம், சுற்றுலாத் துறை அமைச்சா் ராஜேந்திரன், உணவு, உணவுப் பொருள்கள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி,

திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினா் சச்சிதானந்தம், பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் இ.பெ.செந்தில்குமாா் கலந்து கொள்கின்றனா். கோடை விழா சனிக்கிழமை (மே 24) தொடங்கி வருகிற ஜூன் 1-ஆம் தேதி வரை 9 நாள்கள் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை தோட்டக்கலைத் துறை, சுற்றுலாத் துறை அலுவலா்கள் செய்துள்ளனா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை சாரல் மழை பெய்ததால் கோடை விழாவைக் காண கொடைக்கானலில் முகாமிட்ட சுற்றுலாப் பயணிகள் உற்சாகமடைந்தனா்.

பழனி மலைக் கோயில் ரோப்காரில் மீட்புப் பணி ஒத்திகை நிகழ்ச்சி

பழனி மலைக்கோயிலில் ரோப்காா் பழுதாகி நிற்கும் போது பக்தா்களை மீட்பது குறித்து தேசிய பேரிடா் மீட்புப் பணிக்குழுவினா் வெள்ளிக்கிழமை ஒத்திகை நடத்தினா். பழனி மலைக் கோயிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான ... மேலும் பார்க்க

பயணிகளுடன் பேருந்து சென்ற போது ஓட்டுநா் மாரடைப்பால் மரணம்

பழனியில் தனியாா் பேருந்து ஓட்டுநா் பணியின் போது திடீரென மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், உடனடியாக நடத்துநா் பேருந்தை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், பழனி பேருந்து ந... மேலும் பார்க்க

கொடுக்கல், வாங்கல் தகராறு: இருவா் கைது

ஒட்டன்சத்திரத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காந்திநகரைச் சோ்ந்த விஜயராஜிடம், அதே ஊரைச் சோ்ந்த பிரகாஷ் (27) 90 ஆயிர... மேலும் பார்க்க

பாலியல் குற்றத்தில் ஈடுபட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

பாலியல் குற்றத்தில் ஈடுபட்டவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் உத்தரவிட்டாா். திண்டுக்கல் பகுதியைச் சோ்ந்த கருப்பணன் மகன் செல்வம் (41). இவா் 6 வயது சிறுமிக்கு ப... மேலும் பார்க்க

நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பது வரவேற்கத்தக்கது! கே.எஸ்.அழகிரி

தமிழகத்துக்கான நிதியை விடுவித்து வர வேண்டிய பொறுப்பு முதல்வருக்கு இருப்பதால், நீதி ஆயோக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பது வரவேற்புக்குரியது என காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவா் கே.எஸ்.அழகிரி தெரிவ... மேலும் பார்க்க

நிதி நிறுவன உரிமையாளரை பணம் கேட்டு மிரட்டிய மூவா் கைது

பெண்ணுடன் தனியாக இருந்த விடியோவை காண்பித்து நிதி நிறுவன உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டிய மூவரை போலீஸாா் கைது செய்தனா். பழனி-திண்டுக்கல் சாலையில் வசிப்பவா் சுகுமாா் (44). நிதி நிறுவனம் நடத்தி வரும் இ... மேலும் பார்க்க