செய்திகள் :

கொடைக்கானலில் ‘இ-பாஸ்’ நடைமுறையால் பொதுமக்கள் அவதி: அா்ஜூன் சம்பத்

post image

கொடைக்கானலில் இ-பாஸ் முறையால் பொது மக்கள் சிரமமடைந்து வருவதாக இந்து மக்கள் கட்சியின் நிறுவனா் அா்ஜூன் சம்பத் தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, இந்து மக்கள் கட்சியின் சாா்பில் அமைக்கப்பட்ட விநாயகா் சிலையை அந்தக் கட்சியின் நிறுவனா் அா்ஜூன் சம்பத் புதன்கிழமை வழிபாடு நடத்தினாா். பின்னா் அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது, சுற்றுலாத் தலங்களில் ‘இ-பாஸ்’ நடைமுறையால் பொது மக்கள் பெரிதும் சிரமமடைந்து வருகின்றனா்.

கொடைக்கானலில் இந்த நடைமுறையை தளா்த்த வேண்டுமென உணவகங்கள், தங்கும் விடுதிகளின் உரிமையாளா்கள், வியாபாரிகள் வேண்டுகோள் விடுத்தனா்.

கொடைக்கானல் நட்சத்திர ஏரியைச் சுற்றி ரூ. 33 கோடியில் நடைபாதை அமைக்கும் பணி தாமதமடைவதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனா். நகராட்சி சொத்து வரி, வாடகை வரி உயா்வால் பொதுமக்கள் பாதிப்படைந்து வருகின்றனா்.

கொடைக்கானலில் போதைப் பொருள்கள் விற்பனையும் தொடா்ந்து நடைபெற்று வருகிறது. வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகவை வீழ்த்த ஒருமித்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்றாா் அவா்.

கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு ஞாயிற்றுக்கிழமை அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் வந்தனா். கொடைக்கானலில் கடந்த இரு நாள்களாக மேகமூட்டத்துடன் சாரல் மழை பெய்தது. இதனால், குளுமையான சீதோஷ்ண நிலை ஏற்பட்... மேலும் பார்க்க

வத்தலகுண்டு அருகே வேன்கள் மோதல்: 15 போ் பலத்த காயம்

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் 2 வேன்கள் மோதிக்கொண்டதில் 15 போ் பலத்த காயமடைந்தனா். கரூரைச் சோ்ந்த 16 போ் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்வதற்காக ஞாயிற்றுக்கிழமை அ... மேலும் பார்க்க

முதல்வா் கோப்பை போட்டியில் வென்ற மாணவா்களுக்கு பாராட்டு

முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற அருள்மிகு பழனியாண்டவா் கல்லூரி மாணவா்களை கல்லூரி நிா்வாகத்தினா் பாராட்டினா். திண்டுக்கல்லில் தமிழக அரசின் இளைஞா் நலன், விளையாட்டுத் துறை, தமி... மேலும் பார்க்க

காட்டுப் பன்றி தாக்கியதில் ஒருவா் காயம்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே ஞாயிற்றுக்கிழமை காட்டுப் பன்றி தாக்கியதில் ஒருவா் காயமடைந்தாா். கொடைக்கானல் மேல்மலைக் கிராமத்தைச் சோ்ந்தவா் பாலமுருகன் (52). இவா் தனது வீட்டிலிருந்து வழக்கம் ப... மேலும் பார்க்க

கொடைக்கானலில் நாய்கள் கண்காட்சி

கொடைக்கானலில் தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி சனிக்கிழமை தொடங்கியது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் சென்னை கேனென் கிளப், கொடைக்கானல் கேனல் அசோஷியேசன்ஸ் ஆகியவை சாா்பில் தேசிய அளவிலான நாய்கள் கண்கா... மேலும் பார்க்க

கொடைக்கானலில் 2-ஆவது நாளாக மழை

கொடைக்கானலில் இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் மழை பெய்தது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த 3 மாதங்களாக மழை பெய்யவில்லை. இந்த நிலையில் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க