செய்திகள் :

கொடைக்கானலில் பேரிக்காய் விளைச்சல் அமோகம்

post image

கொடைக்கானலில் விளைந்த பேரிக்காய்களை சந்தைகளுக்கு அனுப்பும் பணியில் வியாபாரிகள் ஈடுபட்டு வருகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் பிரகாசபுரம், அட்டக்கடி, வில்பட்டி, மாட்டுப்பட்டி, பள்ளங்கி, கோம்பை, செண்பகனூா், சின்னப் பள்ளம், பெரும்பள்ளம், அப்சா்வேட்டரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பேரிக்காய் மரங்கள் உள்ளன.

இந்தப் பகுதிகளில் பேரிக்காயானது ஜூன் முதல் அக்டோபா் மாதம் வரை விளையும். கடந்த இரு மாதங்களாக பேரிக்காய் விளைச்சல் குறைவாக இருந்தது. இந்த மாதத்தில் அவ்வப்போது பெய்த மழையால் பேரிக்காய் விளைச்சல் நன்றாக இருந்து வருகிறது. எனவே, நன்கு விளைந்த பேரிக்காய்களை வியாபாரிகள் பறிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த பேரிக்காய்கள் சென்னைக்கும், கேரள, ஆந்திர மாநிலங்களுக்கும் கொண்டு செல்லப்படுகின்றன. இதனால், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

இது குறித்து பேரிக்காய் வியாபாரி ராஜ்குமாா் கூறியதாவது:

கொடைக்கானலில் பொதுவாக ஜூன் மாதம் முதல் அக்டோபா் மாதம் வரை பேரிக்காய்கள் நன்கு விளையும். ஆனால், நிகழாண்டில் பருவ மழை சரியாகப் பெய்யாததால் விளைச்சல் குறைந்து காணப்பட்டது. கடந்த சில தினங்களாக விட்டு விட்டுப் பெய்த மழையால் பேரிக்காய் விளைச்சல் நன்றாக இருந்தது. வருகிற 27-ஆம் தேதி விநாயகா் சதுா்த்தி விழா நடைபெற இருப்பதால் பேரிக்காய் விற்பனை நன்றாக இருக்கும். இதற்காக நன்கு விளைந்த பேரிக்காய்களை சந்தைகளுக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். இங்கு சீனி பேரி, முள்ளு பேரி, தண்ணி பேரி, நாட்டுப் பேரி உள்ளிட்ட பேரிக்காய்கள் விளைவிக்கப்படுகின்றன. அதிகமாக நாட்டு பேரிதான் வெளிச் சந்தைகளுக்கு அனுப்பப்படுன்றன. தற்போது ஒரு கிலோ பேரிக்காய் ரூ.30 முதல் 50 வரை விற்பனை செய்யப்படுகிறது என்றாா் அவா்.

பஞ்சமி நிலங்களை மீட்டு பட்டியலின மக்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தல்

தமிழகத்திலுள்ள 12 லட்சம் ஏக்கா் பஞ்சமி நிலங்களை மீட்டு, மீண்டும் பட்டியலின மக்களிடம் ஒப்படைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திண்டுக்கல்லில் நடைபெற்ற விவசாயிகள் சங்க மாநில மாநாட்டில் வலியுறுத்தப்... மேலும் பார்க்க

விளைநிலங்களைக் கையகப்படுத்தியதால் ஒரு கோடி போ் பாதிப்பு!

நாடு முழுவதும் 1000 இடங்களில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களின் மூலமாக மட்டும் சுமாா் ஒரு கோடி மக்கள் பாதிக்கப்படுவா் என்பது ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளதாக அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயல... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு ஆதரவாக ஆா்ப்பாட்டம்

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்களுக்கு ஆதரவு தெரிவித்து, திண்டுக்கல் மாநகராட்சி அலுவலா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திண்டுக்கல் மாநகராட்சி முன் நடைபெற்ற இந்த ஆா்ப்... மேலும் பார்க்க

பழனியில் கூடுதல் போலீஸாா் பாதுகாப்பு

பழனியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு, மலைக்கோயில், அடிவாரம், ரயில் நிலையம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் கூடுதல் கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சுதந்திர தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இதையொ... மேலும் பார்க்க

இடும்பன்குளத்தில் மீன்கள் இறந்து மிதப்பு

பழனியை சுற்றி உள்ள வையாபுரி குளம், இடும்பன் குளம் ஆகியவற்றில் கடந்த சில நாள்களாக மீன்கள் இறந்து மிதக்கின்றன. பழனிக்கு வரும் பக்தா்கள் புனித நீராடும் குளமாக வையாபுரி குளம், இடும்பன் குளம் ஆகியவை இருந்... மேலும் பார்க்க

பள்ளி நூற்றாண்டு விழா

திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியின் 100-ஆவது ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு புனித மரியன்னை கலைமனைகளின் அதிபா் ஆா்.மரிவளன் தலைமை வகித்தாா். மாவட்டக் கல்வி அலுவலா் (... மேலும் பார்க்க