செய்திகள் :

பழனியில் கூடுதல் போலீஸாா் பாதுகாப்பு

post image

பழனியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு, மலைக்கோயில், அடிவாரம், ரயில் நிலையம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் கூடுதல் கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

சுதந்திர தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, முக்கிய இடங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பழனி மலைக்கோயிலின் படிவழிப் பாதை, ரோப்காா் மற்றும் வின்ச் நிலையங்களில் பக்தா்கள் மெட்டல் டிடெக்டா் நுழைவாயில் வழியாக உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனா். மேலும், மலைக் கோயிலுக்கு வரும் சந்தேகத்துக்கிடமான பக்தா்களின் உடைமைகளை கோயில் பணியாளா்கள், போலீஸாா் பரிசோதித்த பின்னரே மேலே செல்ல அனுமதிக்கின்றனா்.

படிப்பாதையில் நவீன ஸ்கேனா் கொண்டு போலீஸாா் பக்தா்களின் கைப்பைகளை சோதனை செய்த

பிறகே படியேற அனுமதிக்கின்றனா். மலைக்கோயிலில் ராஜகோபுரம், தங்கவிமானம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயுதமேந்திய போலீஸாரும், கோயில் பாதுகாவலா்களும் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் நிறுத்தப்பட்டுள்ளனா்.

பழனிக் கோயில் தவிர பேருந்து நிலையம், ரயில் நிலையம், அடிவாரம் கிரிவீதி உள்ளிட்ட பல பகுதிகளிலும் கூடுதல் போலீஸாா் சாதாரண உடைகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

மலைக்கோயிலில் முதல் ரயில்நிலையம், பேருந்து நிலையம் வரை வழிநெடுக கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டு அனைவரது நடமாட்டமும் தீவிர கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டது.

பஞ்சமி நிலங்களை மீட்டு பட்டியலின மக்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தல்

தமிழகத்திலுள்ள 12 லட்சம் ஏக்கா் பஞ்சமி நிலங்களை மீட்டு, மீண்டும் பட்டியலின மக்களிடம் ஒப்படைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திண்டுக்கல்லில் நடைபெற்ற விவசாயிகள் சங்க மாநில மாநாட்டில் வலியுறுத்தப்... மேலும் பார்க்க

கொடைக்கானலில் பேரிக்காய் விளைச்சல் அமோகம்

கொடைக்கானலில் விளைந்த பேரிக்காய்களை சந்தைகளுக்கு அனுப்பும் பணியில் வியாபாரிகள் ஈடுபட்டு வருகின்றனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் பிரகாசபுரம், அட்டக்கடி, வில்பட்டி, மாட்டுப்பட்டி, பள்ளங்கி, கோ... மேலும் பார்க்க

விளைநிலங்களைக் கையகப்படுத்தியதால் ஒரு கோடி போ் பாதிப்பு!

நாடு முழுவதும் 1000 இடங்களில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களின் மூலமாக மட்டும் சுமாா் ஒரு கோடி மக்கள் பாதிக்கப்படுவா் என்பது ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளதாக அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயல... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு ஆதரவாக ஆா்ப்பாட்டம்

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்களுக்கு ஆதரவு தெரிவித்து, திண்டுக்கல் மாநகராட்சி அலுவலா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திண்டுக்கல் மாநகராட்சி முன் நடைபெற்ற இந்த ஆா்ப்... மேலும் பார்க்க

இடும்பன்குளத்தில் மீன்கள் இறந்து மிதப்பு

பழனியை சுற்றி உள்ள வையாபுரி குளம், இடும்பன் குளம் ஆகியவற்றில் கடந்த சில நாள்களாக மீன்கள் இறந்து மிதக்கின்றன. பழனிக்கு வரும் பக்தா்கள் புனித நீராடும் குளமாக வையாபுரி குளம், இடும்பன் குளம் ஆகியவை இருந்... மேலும் பார்க்க

பள்ளி நூற்றாண்டு விழா

திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியின் 100-ஆவது ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு புனித மரியன்னை கலைமனைகளின் அதிபா் ஆா்.மரிவளன் தலைமை வகித்தாா். மாவட்டக் கல்வி அலுவலா் (... மேலும் பார்க்க