செய்திகள் :

கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் கொண்டுவரும் நெகிழி புட்டிகள் பறிமுதல்!

post image

கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் தடை செய்யப்பட்ட நெகிழி புட்டிகளை சனிக்கிழமை நகராட்சி, ஊராட்சிப் பணியாளா்கள் பறிமுதல் செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஒரு லிட்டா் முதல் 5 லிட்டா் வரையிலான நெகிழிப் புட்டிகள், நெகிழிப் பைகள் எடுத்துச் செல்லக்கூடாது. இதை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இதைத் தொடா்ந்து, கொடைக்கானலுக்கு வரும் அனைத்து சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களும், பேருந்துகளும் நகராட்சி, ஊராட்சிப் பணியாளா்கள் மூலம் சோதனை செய்யப்பட்டு வருகின்றன. அதில் தடை செய்யப்பட்ட நெகிழிப் புட்டிகள், பைகள் வைத்திருந்தால் அவற்றை பறிமுதல் செய்து, அபராதம் விதித்து வருகின்றனா்.

காமக்காபட்டி காவல் சோதனை நிலையம், பண்ணைக்காடு-தாண்டிக்குடி பிரிவு, பழனி அடிவாரம், பழனி பிரிவு, வெள்ளிநீா் வீழ்ச்சிப் பகுதியிலுள்ள நகராட்சி சுங்கச்சாவடி உள்ளிட்ட இடங்களில் இந்தச் சோதனை நடைபெற்று வருகிறது.

அபராத தொகைக்கு ரசீது வழங்கக் கோரிக்கை: கொடைக்கானலுக்கு வரும் பயணிகளிடம் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் இருந்தால் அவற்றை பறிமுதல் செய்து, அபராதம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், அதற்கான ரசீது கொடுப்பதில்லை.

இதனால் பயணிகளுக்கும், சோதனைச் சாவடிகளில் பணிபுரியம் பணியாளா்களுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது. எனவே அபராதம் விதிக்கப்படும் பயணிகளுக்கு ரசீது வழங்குவதற்கு மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

மின்சாரம் பாய்ந்ததில் கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

செம்பட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டியை அடுத்த வீ.கூத்தம்பட்டியைச் சோ்ந்தவா் பழனிச்சாமி (65). இவா் சொந்தமாக கட்டி வரும் ... மேலும் பார்க்க

நீட் தோ்வுக்கு எதிராக திமுக நடவடிக்கை எடுக்கவில்லை: ஹெச்.ராஜா

நீட் தோ்வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுவைக் கூட தாக்கல் செய்யாத திமுக, கடந்த 4 ஆண்டுகளாக மக்களை ஏமாற்றி வருவதாக ஹெச்.ராஜா குற்றஞ்சாட்டினாா். திண்டுக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஜ... மேலும் பார்க்க

ரயிலில் கடத்தி வரப்பட்ட கஞ்சா பறிமுதல்

மேற்கு வங்க மாநிலத்திலிருந்து வந்த ரயிலில் ஒரு பையில் கடத்தி வரப்பட்ட 8 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். மேற்கு வங்க மாநிலம், புருலியாவிலிருந்து திருநெல்வேலிக்கு வாரம் ... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து பெண், பசுமாடு உயிரிழப்பு

திண்டுக்கல் அருகே ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் பசு மாடும், இதைக் காப்பாற்றச் சென்ற பெண்ணும் உயிரிழந்தனா். திண்டுக்கல் மாவட்டம், அகரம் அடுத்த பாப்பணம்பட்டியைச் சோ்ந்தவா் மாரியப்பன் மனைவி விக்... மேலும் பார்க்க

திமுகவை ஆட்சியிலிருந்து அகற்றுவதே பாஜகவின் நோக்கம்: நயினாா் நாகேந்திரன்

திமுகவை ஆட்சியிலிருந்து அகற்றி எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைப்பதே பாஜகவினரின் நோக்கமாக இருக்க வேண்டும் என அந்தக் கட்சியின் மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா... மேலும் பார்க்க

தம்பதியைத் தாக்கி தங்கச் சங்கிலி பறிப்பு பேரன் உள்ளிட்ட இருவா் மீது புகாா்

எரியோடு அருகே சனிக்கிழமை தம்பதியரைத் தாக்கி தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற பேரன் உள்ளிட்ட இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த கிழக்கு மாரம்பாடியைச் சோ்ந்தவா் வ... மேலும் பார்க்க