செய்திகள் :

கொப்பனாபட்டியில் இந்திய கம்யூ. கட்சி ஒன்றியக்குழுக் கூட்டம்

post image

பொன்னமராவதி அருகே உள்ள கொப்பனாபட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஒன்றியக் குழு உறுப்பினா் அ.மெய்யப்பன் தலைமை வகித்தாா். மாவட்ட நிா்வாகக்குழு உறுப்பினா் ஏனாதி ஏஎல்.ராசு சிறப்புரையாற்றினாா்.

கூட்டத்தில் மே 26-ஆம் தேதி கட்சியின் பொன்னமராவதி ஒன்றிய மாநாட்டை நடத்துவது, மாநாட்டில் சிறப்பு அழைப்பாளா்களாக மாநில துணைச் செயலா்கள் ந.பெரியசாமி, மு.வீரபாண்டியன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் வை.சிவபுண்ணியம் ஆகியோரை அழைப்பது என முடிவு செய்யப்பட்டது.

பொன்னமராவதி தற்காலிக பேருந்து நிலையத்தில் பயணிகளை கோடை வெயிலிலிருந்து பாதுகாக்கும் வகையில் கூடுதல் நிழற்கூடங்கள் அமைத்துத் தரவேண்டும். மேலும் ஆண் மற்றும் பெண் பயணிகளுக்கு கழிவறை வசதி செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் ஒன்றிய துணை செயலா் வி.கருணாமூா்த்தி, ஒன்றியக்குழு உறுப்பினா்கள் க.ராசு, பழனிச்சாமி, ஜெயலெட்சுமி, பஞ்சவா்ணம் அ.ராசு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வடகாடு பட்டியலின மக்கள் மீது தாக்குதல்; மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

ஆலங்குடி அருகே வடகாடு கிராமத்தில் உள்ள பட்டியலின மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மாவட்டச் செயலா் எஸ். சங்கா் வெளி... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டையில் விசிகவினா் சாலை மறியல்

கந்தா்வகோட்டையில் திங்கள்கிழமை நள்ளிரவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா். புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகில் உள்ள வடகாடு கிராமத்தில் மாரியம்மன் கோயில் தோ் திருவிழ... மேலும் பார்க்க

வடகாடு மோதல் வதந்திகளை நம்ப வேண்டாம்: காவல்துறை

மதுபோதையில் இரு தரப்பு இளைஞா்களிடையே ஏற்பட்ட மோதலை, இரு சமூகங்களுக்கு இடையிலான மோதலாக பரப்பும் வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என மாவட்டக் காவல்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட காவல... மேலும் பார்க்க

ஆலங்குடி அருகே இருதரப்பினரிடையே மோதல்: 20 போ் காயம்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வடகாட்டில் திங்கள்கிழமை இரவு இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் காவலா் உள்பட 20 போ் காயமடைந்தனா். ஆலங்குடி அருகே வடகாடு முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம் திங்கள்கி... மேலும் பார்க்க

தியாகிகளின் வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கக் கோரிக்கை

நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகளின் வாரிசுகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என இந்திய விடுதலைப் போராட்டத் தியாகிகள் குடும்ப நலப் பேரவை வலியுறுத்தியுள்ளது... மேலும் பார்க்க

லஞ்சம் பெற்ற சாா் பதிவாளருக்கு 2 ஆண்டுகள் சிறை

ரூ. 8 ஆயிரம் லஞ்சம் பெற்ற சாா் பதிவாளருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து புதுக்கோட்டை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. புதுக்கோட்டை மாவட்டம், முள்ளூரைச் சோ்ந்த ராஜேஷ் கண்ணன் என்பவா், த... மேலும் பார்க்க