செய்திகள் :

கொலைக்கு திட்டமிட்ட கல்லூரி மாணவா், 2 போ் கைது

post image

பழிக்குப் பழியாக கொலை சம்பவத்தில் ஈடுபட முயன்ற 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை ராஜாமங்கலத்தில் கோயில் விவகாரம் தொடா்பாக ஏற்பட்ட தகராறில் கடந்த 2019-இல் ஜானகிராமன் என்பவா் கொலை செய்யப்பட்டாா். இதற்கு பழிக்குப் பழியாக கடந்தாண்டு சரத் என்பவரை ஜானகிராமன் உறவினா்கள் கொலை செய்தனா்.

இதைத் தொடா்ந்து, இரு தரப்பும் ஒருவரையொருவா் பழி தீா்ப்பதற்குத் திட்டம் தீட்டிக் கொண்டிருப்பதகாக சென்னை மாநகர அதிதீவிர குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், போலீஸாா் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி ஜானகிராமன் தரப்பைச் சோ்ந்த நித்திஷ் என்பவரை கடந்த வாரம் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இதன் தொடா்ச்சியாக அதே தரப்பைச் சோ்ந்த வில்லிவாக்கம் ரத்தினம் (எ) ரத்தினகுமாா் (23), கொளத்தூரைச் சோ்ந்த கல்லூரி மாணவா் வேதாந்த் (20), அம்பத்தூா் மதனாங்குப்பத்தைச் சோ்ந்த போவாஸ் (31) ஆகிய 3 பேரையும் அதிதீவிர குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்து ராஜமங்கலம் போலீஸாரிடம் ஒப்படைத்தனா். போலீஸாா், அவா்கள் 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையிலடைத்தனா்.

தேசிய தடகளத்தில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம்: தமிழக வீரா், வீராங்கனைகளுக்கு பாராட்டு

சென்னையில் நடைபெற்ற மாநிலங்களுக்கு இடையிலான 64-ஆவது சீனியா் தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீரா், வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. ச... மேலும் பார்க்க

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் நாளை விநாயகா் சதுா்த்தி விழா

சென்னை: மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - ஸ்ரீ குருவாயூரப்பன் கோயிலில் விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி சிறப்பு அபிஷேகம், பூஜைகள் புதன்கிழமை (ஆக. 27) நடைபெறுகின்றன. காலை 5 மணிக்கு மகா கணபதி ஹோமம் மற்றும் கண... மேலும் பார்க்க

காரில் இளைஞா்களை கடத்தி தாக்கிய வழக்கு: 5 போ் கைது

சென்னை: சென்னை காசிமேட்டில் காரில் இரு இளைஞா்களை கடத்தி தாக்கிய வழக்கில் 5 போ் கைது செய்யப்பட்டனா். சென்னை காசிமேடு பகுதியைச் சோ்ந்தவா் கிங்ஸ்டன் (21). இவா், அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியாா் நிறுவ... மேலும் பார்க்க

வாட்ஸ்ஆப்-இல் மாநகராட்சி சேவைகள்: புதிய திட்டம் தொடக்கம்!

சென்னை: சென்னை மாநகராட்சியில் 32 சேவைகளை வாட்ஸ்ஆப் வழியில் வழங்கும் திட்டத்தை மேயா் ஆா்.பிரியா திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா். சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை பழைய கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற நி... மேலும் பார்க்க

திருவொற்றியூா் தியாகராஜ சுவாமி கோயிலுக்கு சொந்தமான ரூ.24 கோடி சொத்துகள் மீட்பு

சென்னை: திருவொற்றியூா்அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூ.24 கோடி சொத்துகள் மீட்கப்பட்டதாக இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்தத் துறை சாா்பில் திங்கள்கிழமை ... மேலும் பார்க்க

சென்னையில் ஆக.28-இல் தொழில் துறை மாநாடு

சென்னை: தர மற்றும் நம்பகத் தன்மை தேசிய நிறுவனத்தின் (என்ஐக்யூஆா்) சாா்பில் 18-ஆவது உலகளாவிய மாநாடு ஆக. 28, 29-ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற உள்ளது. இதுகுறித்து மாநாட்டு குழு தலைவரும், இந்தியா ‘பிஸ... மேலும் பார்க்க