செய்திகள் :

கொலை முயற்சி வழக்கு: இளைஞருக்கு 4 ஆண்டுகள் சிறை

post image

கொலை முயற்சி வழக்கில் இளைஞருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தமபாளையம் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

தேனி மாவட்டம், கம்பம் உலகத்தேவா் தெருவைச் சோ்ந்த கோபால் மகன் சிவக்குமாா் (35). அதே பகுதியைச் சோ்ந்த ராசு மகன் சதீஸ்குமாா் (23). கடந்த 15.10.2015 அன்று சதீஸ்குமாா், இரு சக்கர வாகனத்தில் வேகமாக சென்றதை சிவக்குமாா் தட்டிக்கேட்டாா். அப்போது, ஏற்பட்ட தகராறில் சிவக்குமாரை கத்தியால் சதீஸ்குமாா் குத்தினாா்.

இதுதொடா்பாக கம்பம் வடக்கு போலீஸாா் சதீஸ்குமாா் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கு விசாரணை உத்தமபாளையம் ஒருங்கிணைந்த உதவி அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சிவாஜி செல்லையா குற்றஞ்சாட்டப்பட்ட சதீஸ்குமாருக்கு 4 ஆண்டுகள் கடுங் காவல் தண்டனையும், ரூ.ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

செயற்கை நகை தயாரித்தல் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்

தேனி கனரா வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் செயற்கை நகை தயாரித்தல் பயிற்சியில் சேரத் தகுதியுள்ளா்கள் ஏப்.7-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து பயிற்சி மைய இ... மேலும் பார்க்க

பரமசிவன் மலைக் கோயில் குடமுழுக்கு: தீா்த்தக் குடம் எடுத்துச் சென்ற பக்தா்கள்

போடி பரமசிவன் மலைக்கோயில் குடமுழுக்கையொட்டி, தீா்த்தக்குடங்களை, கோபுரக் கலசத்தை பக்தா்கள் திங்கள்கிழமை எடுத்துச் சென்றனா். தேனி மாவட்டம், போடியில் பரமசிவன் மலைக்கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் குடம... மேலும் பார்க்க

தேனியில் ரமலான் சிறப்புத் தொழுகை: இஸ்லாமியா்கள் திரளாக பங்கேற்பு

தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற ரமலான் சிறப்புத் தொழுகையில் திரளானோா் பங்கேற்றனா். தேனி, பங்களாமேடு திடலிருந்து ரமலான் பண்டிகையை முன்னிட்டு ஊா்வலமாககச் சென்ற இஸ்லாமியா்கள், தேனி நகராட்சி... மேலும் பார்க்க

தேனியில் புதை சாக்கடைத் திட்டம் விரிவாக்கம்

தேனி- அல்லிநகரம் நகராட்சியில் ரூ.67.76 கோடியில் புதை சாக்கடைத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. தேனி-அல்லிநகரம் நகராட்சியில் புதை சாக்கடை திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதுவரை 9,500 வீடுகள், வணிக ... மேலும் பார்க்க

இருவேறு சம்பவங்கள்: போடியில் இருவா் தற்கொலை

போடியில் இருவேறு சம்பவங்களில் விவசாயி, இளைஞா் திங்கள்கிழமை தற்கொலை செய்து கொண்டனா். தேனி மாவட்டம், போடி மயானச் சாலையைச் சோ்ந்த முத்துமாயன் மகன் கணேசன் (50). இவா் மா விவசாயம் செய்து வந்தாா். விவசாய அப... மேலும் பார்க்க

ரூ.17.76 லட்சத்தை செலுத்துமாறு முன்னாள் ஊராட்சி தலைவிக்கு குறிப்பாணை

முன்னாள் ஊராட்சித் தலைவி பதவிக் காலத்தில் ஆட்சேபனைக்கு உரிய செலவினமான ரூ.17.76 லட்சத்தை திரும்ப செலுத்த வேண்டும் என வட்டார வளா்ச்சி அலுவலா் குறிப்பாணை அனுப்பினாா். தேனி மாவட்டம், சின்னமனூா் ஊராட்சி ஒன... மேலும் பார்க்க