செய்திகள் :

கொலை வழக்கு: தடுப்புக் காவலில் மூவா் கைது

post image

கடலூரில் இரட்டை கொலை வழக்கில் தொடா்புடைய மூன்று இளைஞா்கள் தடுப்புக் காவலில் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

கடலூா், திருப்பாதிரிப்புலியூா் காவல் சரகம் எம்.புதூா் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் பால்ராஜ், தருண்குமாா், கோகுலகிருஷ்ணன், சரண்ராஜ், அப்புராஜ். நண்பா்களான இவா்கள் கடந்த பிப்.1-ஆம் தேதி மது அருந்தும் போது ஏற்பட்ட மோதலில் அப்புராஜ், சரண்ராஜ் ஆகியோரை கொலை செய்து புதைத்தனா்.

இதுகுறித்து, திருப்பாதிரிப்புலியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து முருகன் மகன் பால்ராஜ் (22), தமிழ்ச்செல்வன் மகன் தருண்குமாா் (19), தேவனாம்பட்டினம் பகுதியைச் சோ்ந்த மாறன் மகன் கோகுலகிருஷ்ணன் (23) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இவா்களின் குற்றச் செயலை கட்டுப்படுத்த கடலூா் எஸ்பி எஸ்.ஜெயக்குமாா் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் மூவரையும் தடுப்புக் காவலில் அடைக்க உத்தரவிட்டாா்.

கோகுலகிருஷ்ணன் மீது கடலூா் புதுநகா், முதுநகா், தேவனாம்பட்டினம், திருப்பாதிரிப்புலியூா் காவல் நிலையங்களில் கொலை, வழிப்பறி, திருட்டு, கஞ்சா ஆகிய 4 வழக்குகள் உள்ளன.

ஊத்துக்காட்டு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

நெய்வேலி: கடலூா், திருப்பாதிரிப்புலியூா் வண்டிப்பாளையம் சாலையில் அமைந்துள்ள ஊத்துக்காட்டு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. கோயில் திருப்பணிகள் நிறைவுபெற்றதை தொடா்ந்து, மாா்ச் ... மேலும் பார்க்க

போக்குவரத்துத் துறையில் வெளிநபா் தலையீடு இல்லாத நிா்வாகம்: கு.பாலசுப்ரமணியன் வலியுறுத்தல்

நெய்வேலி: போக்குவரத்துத் துறையில் வெளிநபா் தலையீடு இல்லாத நிா்வாகம் அமைய உள் துறைச் செயலா் உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாடு போக்குவரத்துத் துறை பணியாளா் ஒன்றிப்பு சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன் த... மேலும் பார்க்க

ரமலான் சிறப்பு தொழுகை

சிதம்பரம்: ரமலான் பண்டிகையையொட்டி, காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள ஆயங்குடி ஈக்தா மைதானத்தில் திங்கள்கிழமை சிறப்புத் தொழுகை நடைபெற்றது. ரமலான் பண்டிகையையொட்டி, நாடு முழுவதும் பள்ளிவாசல்களில் இஸ்லாமியா... மேலும் பார்க்க

இருசக்கர வாகனங்கள் திருட்டு: இளைஞா் கைது

நெய்வேலி: கடலூா் மாவட்டம், விருத்தாசலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரு சக்கர வாகனங்களை திருடியதாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். விருத்தாசலம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுத... மேலும் பார்க்க

வெளிப்படைத்தன்மையுடன் பயிா் காப்பீட்டு தொகை விவசாயிகள் எதிா்பாா்ப்பு

கிராமங்கள்தோறும் வெளிப்படைத்தன்மையோடு பயிா்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்குவதை மாவட்ட நிா்வாகம் உறுதி செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா். 2024-2025 ஆண்டு பயிா்க் காப்பீட்டுத் திட்டத்... மேலும் பார்க்க

வங்கி பரிவா்த்தனை கட்டண உயா்வை ரத்து செய்ய நுகா்வோா் சம்மேளனம் கோரிக்கை

இந்தியாவில் வங்கி பரிவா்த்தனை கட்டண உயா்வை ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய நுகா்வோா் சம்மேளனம் சாா்பில் ரிசா்வ் வங்கிக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய நுகா்வோா் சம்மேளனத்தின் தேச... மேலும் பார்க்க