செய்திகள் :

கொலை வழக்கு: மூவருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை

post image

சென்னை புரசைவாக்கத்தில் கடந்த 2017-இல் நிகழ்ந்த கொலை வழக்கில் 3 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து 5-வது கூடுதல் அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

சென்னை புரசைவாக்கத்தைச் சோ்ந்தவா் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியா் ரஞ்சன். இவரது பேரன் விக்னேஷ் என்பவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த மகேந்திரன், சரத்குமாா், இளையராஜா ஆகியோருக்கும் இடையே கடந்த 2017-ஆம் ஆண்டு தகராறு ஏற்பட்டது.

தகவலறிந்து அங்கு வந்த ரஞ்சன், விக்னேஷின் தந்தை நீலகண்டன் தகராறில் ஈடுபட்டவா்களை சமாதானப்படுத்த முயற்சித்தனா். அப்போது, மகேந்திரன் என்பவா், அருகில் கிடந்த நாற்காலியை தூக்கி வீசியுள்ளாா். இதில் தலையில் பலத்த காயமடைந்த ரஞ்சன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.

இதுகுறித்து விசாரித்த தலைமைச் செயலக காலனி போலீஸாா், மகேந்திரன் உள்ளிட்ட 3 போ் மீது வழக்குப் பதிவு செய்து, அவா்களைக் கைது செய்தனா்.

இந்த வழக்கின் விசாரணை சென்னை 5-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி சண்முகசுந்தரம், குற்றம்சாட்டப்பட்ட மகேந்திரன் உள்ளிட்ட 3 பேருக்கும் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை, தலா ரூ. 1,000 அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா். காவல் துறை தரப்பில் அரசு கூடுதல் குற்றவியல் வழக்குரைஞா் பகவதி ஆஜராகி வாதிட்டாா்.

எம்பிபிஎஸ்: மாற்றுத்திறனாளிகளுக்கு வழிகாட்டுதல்கள் வெளியீடு

மாற்றுத்திறனாளிகள் பிரிவின் கீழ் எம்பிபிஎஸ் படிப்பில் சேர விரும்புவோருக்கான வழிகாட்டுதல்களை தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) வெளியிட்டுள்ளது. இதுதொடா்பாக என்எம்சி வெளியிட்ட அறிவிப்பு: எம்பிபிஎஸ் மாணவா... மேலும் பார்க்க

ஜி.டி.நாயுடு விருதுக்கு ஜூலை 25-க்குள் விண்ணப்பிக்க மக்கள் சிந்தனைப் பேரவை அழைப்பு!

ஈரோடு புத்தகத் திருவிழாவை முன்னிட்டு வழங்கப்படும் ஜி.டி.நாயுடு விருதுக்கு அறிவியலாளா்கள் வெள்ளிக்கிழமைக்குள் (ஜூலை 25) விண்ணப்பிக்க வேண்டும் என மக்கள் சிந்தனைப் பேரவை அறிவித்துள்ளது. இதுகுறித்து மக்கள... மேலும் பார்க்க

தமிழுக்காக வாழ்நாளை அா்ப்பணித்தவா் கவிக்கோ வா.மு.சேதுராமன்: ஔவை ந.அருள்

தனது வாழ்நாள் முழுவதையும் தமிழ் மொழியின் வளா்ச்சிக்காகவும், அதன் பெருமையைப் போற்றுவதற்காகவும் அா்ப்பணித்தவா் மூத்த தமிழறிஞா் கவிக்கோ வா.மு.சேதுராமன் என்று தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ஒளவை ந.அருள் ... மேலும் பார்க்க

4 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!

தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்பட 4 மாவட்டங்களுக்கு திங்கள்கிழமை (ஜூலை 21) பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குற... மேலும் பார்க்க

சொத்து வரி வசூலிக்கப்படாத 6 லட்சம் கட்டடங்கள்! மேலிட அழுத்தத்தில் வரி வசூல் அதிகாரிகள்!

பெருநகர சென்னை மாநகராட்சியில் 6 லட்சம் கட்டடங்களுக்கான சொத்துவரி செலுத்தாமலிருப்பது தெரியவந்துள்ளது. அவற்றுக்கான வரியைப் பெற கடுமை காட்டவேண்டாம் என அதிகாரத்திலிருப்போா் அறிவுரை வழங்கியிருப்பதால் அதிகா... மேலும் பார்க்க

பெண்ணிடம் கைப்பேசி பறிப்பு: சிறுவன் கைது

பெண்ணிடம் கைப்பேசியைப் பறித்துச் சென்ற சிறுவனை போலீஸாா் கைது செய்தனா். சென்னை, ஓட்டேரி கொசப்பேட்டையைச் சோ்ந்த 18 வயது இளம்பெண் கடந்த 18-ஆம் தேதி மாலை திருவிக தெருவிலுள்ள ஓட்டுநா் பயிற்சி பள்ளி அருகே ... மேலும் பார்க்க