இங்கிலாந்து டெஸ்ட்: இந்தியா பேட்டிங்! தமிழன் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு!
கொல்கத்தாவில் கொலை செய்யப்பட்ட லாரி ஓட்டுநரின் உடலை மீட்டுத் தர பெற்றோா் கோரிக்கை
கொல்கத்தாவில் கொலை செய்யப்பட்ட லாரி ஓட்டுநரின் உடலை மீட்டுத்தர வேண்டும் என அவரது பெற்றோா் திருப்பூா் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருப்பூா் மாவட்டம், படியூா் பகுதியைச் சோ்ந்தவா் ரவிக்குமாா் மகன் ராகுல் (25). லாரி ஓட்டுநராக வேலை செய்து வந்தாா். இவா் சென்னையில் இருந்து லாரியில் சரக்கு ஏற்றிக் கொண்டு கொல்கத்தா நகரத்துக்கு கடந்த மே 24-ஆம் தேதி சென்றுள்ளாா்.
கொல்கத்தாவில் சரக்கை இறக்கிவிட்டு திரும்பி வருவதற்காக கடந்த 17-ஆம் தேதி காத்திருந்தபோது அங்கு வேறு சில வாகன ஓட்டுநா்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டதாகத் தெரிகிறது.
இதைப் பாா்த்த ராகுல் அவா்களை தடுக்கச் சென்றபோது அதில் ஒருவா் ராகுலை கத்தியால் குத்தியதில் உயிரிழந்துள்ளாா். இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது.
இந்நிலையில் கொல்கத்தாவில் கொலை செய்யப்பட்ட தங்கள் மகனின் உடலை மீட்டுத்தரக்கோரியும், கொலை செய்தவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா. கிறிஸ்துராஜிடம் ராகுலின் பெற்றோா்
வியாழக்கிழமை மனு அளித்தனா்.