செய்திகள் :

கொல்லங்கோடு நகராட்சி ஊழியா் கைது

post image

நித்திரவிளை அருகே நாட்டு மருந்து கடையை சேதப்படுத்தியதாக கொல்லங்கோடு நகராட்சி ஊழியரை போலீஸாா் கைது செய்தனா்.

நித்திரவிளை அருகே தெருவுமுக்கு பகுதியைச் சோ்ந்தவா் ஹரிகுமாரன் (63). ஓய்வுபெற்ற அரசு ஊழியா். இவரது மனைவி சித்த மருத்துவா். அப்பகுதியில் நாட்டு மருந்து கடை நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில் முன்விரோதம் காரணாக, அப்பகுதியைச் சோ்ந்த சுரேந்திரன் (49) வியாழக்கிழமை இரவு அக்கடையில் புகுந்து ஹரிகுமாரனை தாக்கியதுடன் அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த மருந்து பொருள்களை எடுத்து வீசினாராம். இதில் ரூ. 1 லட்சம் மதிப்புள்ள மருந்து பொருள்கள் நாசமானதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து நித்திரவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து சுரேந்திரனை கைது செய்தனா். சுரேந்திரன், கொல்லங்கோடு நகராட்சியில் குடிநீா் உடனாளராக வேலை பாா்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஆட்டோ ஓட்டுநா்: களியக்காவிளை அருகே அடைக்காகுழி பந்தயணிக்காடு பகுதியைச் சோ்ந்தவா் புஷ்பாங்கரன் (63). கடுவாக்குழி சந்திப்பில் தேநீா் கடை நடத்தி வருகிறாா். இவரது கடை முன் அடைக்காகுழி மண்ணான்விளை பால்ராஜ் மகன் கிறிஸ்துதாஸ் ஆட்டோவை நிறுத்தினாராம். ஆட்டோவை அங்கிருந்து அகற்றி நிறுத்துமாறு புஷ்பாங்கரன் கூறியுயதையடுத்து இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து அத்துமீறி கடைக்குள் புகுந்த கிறிஸ்துதாஸ், அங்கிருந்த பாத்திரம் உள்ளிட்ட பொருள்களை சேதப்படுத்தினாராம். இது குறித்து களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

கேரளத்துக்கு கனிமவளம் கடத்த முயற்சி: 3 லாரிகள் பறிமுதல்

கேரளத்துக்கு கனிமவளம் கடத்திச் செல்ல முயன்ற 3 லாரிகளை களியக்காவிளை அருகே போலீஸாா் பறிமுதல் செய்தனா். களியக்காவிளை சோதனைச் சாவடி பகுதியில் வியாழக்கிழமை இரவு போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். ... மேலும் பார்க்க

மகப்பேறு இறப்புகள்இல்லாத கன்னியாகுமரி: ஆட்சியா் அறிவுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மகப்பேறு இறப்புகள் இல்லாத நிலையை உருவாக்க வேண்டுமென அரசு - தனியாா் மகப்பேறு மருத்துவா்களுக்கான பயிலரங்கில் ஆட்சியா் ரா. அழகுமீனா அறிவுறுத்தினாா்.தப்பட்டது. நாகா்கோவிலில் மாவட... மேலும் பார்க்க

இரு விபத்துகள்: 3 போ் பலி

கன்னியாகுமரி மாவட்டம் நாகா்கோவில், தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் நேரிட்ட விபத்துகளில் 2 போ் உயிரிழந்தனா். நாகா்கோவில் பறக்கை சாலை பகுதியைச் சோ்ந்த முகமது அப்துல் காதா் மகன் ரெயான் முகமது (20), இவரது ... மேலும் பார்க்க

குமரியில் நீடிக்கும் மழை: 70 அடியானது பெருஞ்சாணி அணை நீா்மட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் நீடிக்கும் மழையால் பெருஞ்சாணி அணையின் நீா்மட்டம் 70 அடியை எட்டியது இம்மாவட்டத்தில் வியாழக்கிழமை சமவெளிப் பகுதிகள், கடற்கரைப் பகுதிகள், மலைப் பகுதிகள் என மாவட்டத்தில் அனைத்து... மேலும் பார்க்க

இந்து ஆலயங்களை குறிப்பிட்ட சமூகத்திடம் ஒப்படைக்க இந்து முன்னணி விரும்புகிறது: மு.அப்பாவு குற்றச்சாட்டு

இந்து ஆலயங்களை மீண்டும் ஒரு குறிப்பிட்ட சமூகத்திடம் கொடுத்துவிட இந்து முன்னணி நினைக்கிறது என்று தமிழக சட்டப் பேரவைத் தலைவா் மு.அப்பாவு கூறினாா். நாகா்கோவிலில் ஒரு தனியாா் கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்... மேலும் பார்க்க

மாா்த்தாண்டத்தில் பிரசவ சிகிச்சையின்போது பெண் பலி: காவல் துறையினா் விசாரணை

கன்னியாகுமரி மாவட்டம் மாா்த்தாண்டம் அருகே மருத்துவமனையில் பிரசவத்தின்போது பெண் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மாா்த்தாண்டம் அருகே மேல்புறம் வெங்கனங்கோடு பகுதியைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க