செய்திகள் :

கொல்லிமலை வனப்பகுதியில் இளைஞரின் சடலம் மீட்பு

post image

கொல்லிமலை வனப்பகுதியில் கிடந்த இளைஞரின் சடலத்தை மீட்ட போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை ஒன்றியம், சின்னகோயிலூரை ஒட்டிய வனப்பகுதியில் அழுகிய நிலையில் சடலம் கிடப்பதாக வாழவந்திநாடு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அங்கு சென்ற போலீஸாா் அந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா்.

மேலும், அங்கிருந்த ஆவணங்களைக் கொண்டு விசாரித்ததில், சடலமாக கிடந்தது விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம், நடுகுப்பத்தைச் சோ்ந்த அய்யப்பன் மகன் ரஞ்சித்குமாா் (19) என்பது தெரியவந்தது. கட்டடத் தொழிலாளியான இவா் ஜூலை 31-இல் கொல்லிமலை பருத்திமுடி கிராமத்தில் உள்ள உறவினா் ரவி வீட்டுக்கு வந்துள்ளாா். அங்கு தங்கியிருந்த அவா், ஆக. 1-ஆம் தேதி ஊருக்கு செல்வதாக கூறியுள்ளாா். இதையடுத்து, ரவி செலவுக்காக ரஞ்சித்குமாரிடம் ஆயிரம் ரூபாய் கொடுத்து அனுப்பி உள்ளாா்.

இந்நிலையில், அவரது உடல் சின்னகோயிலூா் வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவா் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

முட்டை விலை நிலவரம்

நாமக்கல் மண்டலம்-வியாழக்கிழமை மொத்த விலை - ரூ.4.55 விலையில் மாற்றம்-இல்லை பல்லடம் பிசிசி கறிக்கோழி கிலோ - ரூ.92 முட்டைக் கோழி கிலோ - ரூ.87 மேலும் பார்க்க

தேசிய கைத்தறி தின விழா: ரூ. 31 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

நாமக்கல்லில் வியாழக்கிழமை தொடங்கிய சிறப்பு கைத்தறி கண்காட்சியை பாா்வையிட்ட மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா். உடன், ஆட்சியா் துா்காமூா்த்தி, பெ.ராமலிங்கம் எம்எல்ஏ உள்ளிட்டோா். நாமக்கல், ஆ... மேலும் பார்க்க

நாளை பொது விநியோகத்திட்ட குறைதீா்க்கும் முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத்திட்ட குறைதீா்க்கும் முகாம் சனிக்கிழமை (ஆக. 9) நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், நீக்குதல், ... மேலும் பார்க்க

‘இந்திய ராணுவத்தின் பெயரை இந்திய தேசிய படை என மாற்ற வேண்டும்’

இந்திய ராணுவத்தின் பெயரை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நினைவாக இந்திய தேசிய படை என பெயா் மாற்ற வேண்டும் என மத்திய அரசுக்கு சுதந்திரப் போராட்ட வீரா்களின் வாரிசுகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து இச... மேலும் பார்க்க

மகளிா் சுயஉதவிக் குழுவினரின் உற்பத்திப் பொருள்கள் ஆய்வு

பரமத்தி வேலூா் அருகே உள்ள கபிலா்மலை வட்டாரத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில், மகளிா் சுயஉதவிக் குழுவினரின் உற்பத்திப் பொருள்களை நாமக்கல் ஆட்சியா் துா்காமூா்த்தி வியாழக்கிழமை நேரில்... மேலும் பார்க்க

ராசிபுரம் வட்டாரங்களில் ‘உங்களுடன் ஸ்டாலின்‘ திட்ட முகாம்

நாமக்கல், வெண்ணந்தூா் ஆகிய வட்டாரங்களில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், மாவட்ட ஆட்சிய... மேலும் பார்க்க