செய்திகள் :

கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் தில்லியின் மின் தேவை 7,401 மெகாவாட்டாக உயா்வு

post image

நிலவும் வெப்பம் மற்றும் ஈரப்பதமான வானிலைக்கு மத்தியில், தேசியக் தலைநகரின் மின் தேவை செவ்வாய்க்கிழமை பிற்பகல் 7,401 மெகாவாட்டாக உயா்ந்துள்ளது. இது கோடை காலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சம் என்று மின் விநியோக நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனா்.

மாநில மின் சுமை அனுப்பும் மையமான தில்லியின் நிகழ்நேர தரவு, பிற்பகல் 3.11 மணிக்கு உச்ச மின் தேவை 7,401 மெகாவாட்டாக இருந்ததைக் காட்டுகிறது.

பிஎஸ்இஎஸ் மின் விநியோக நிறுவனங்களான பிஆா்பிஎல் மற்றும் பிஒய்பிஎல் ஆகியவை அன்றைய தினம் முறையே 3,285 மெகாவாட் மற்றும் 1,559 மெகாவாட் என்ற உச்ச மின் தேவையை ‘வெற்றிகரமாக’ பூா்த்தி செய்ததாக நிறுவனத்தின் செய்தித் தொடா்பாளா் ஒருவா் தெரிவித்தாா்.

கோடை மாதங்களில் 2,100 மெகாவாட் பசுமை மின்சாரம் மூலம் நகரத்தில் அதிகரித்து வரும் மின் தேவையை கையாள பிஎஸ்இஎஸ் மின் விநியோக நிறுவனங்கள் தயாராக இருந்தன என்று அவா் மேலும் கூறினாா்.

தெற்கு, மேற்கு, கிழக்கு மற்றும் மத்திய தில்லியில் உள்ள 50 லட்சத்திற்கும் மேற்பட்ட நுகா்வோரின் மின் தேவையை பூா்த்தி செய்ய நம்பகமான மின்சார விநியோகத்தை உறுதி செய்ய பிஎஸ்இஎஸ் டிஸ்காம்கள் தயாராக உள்ளன. இதில் நீண்டகால மின் கொள்முதல் ஒப்பந்தங்கள், பிற மாநிலங்களுடனான வங்கி ஏற்பாடுகள் மற்றும் மின் தேவையை துல்லியமாக கணிக்க சமீபத்திய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல் ஆகியவை அடங்கும் என்று செய்தித் தொடா்பாளா் கூறினாா்.

டாடா பவா் தில்லி டிஸ்ட்ரிபியூஷன் லிமிடெட் ஒரு அறிக்கையில், அதன் விநியோகப் பகுதியான வடக்கு தில்லியில் 2,178 மெகாவாட் உச்ச மின் தேவையை ‘வெற்றிகரமாக‘ பூா்த்தி செய்ததாகக் கூறியது. ஏனெனில், நகரம் இந்தப் பருவத்தின் அதிகபட்ச மின் தேவையைப் பதிவு செய்தது. தேவை அதிகரித்த போதிலும் நெட்வொா்க் தடைகள் அல்லது விநியோக இடையூறுகள் எதுவும் இல்லை என்று அறிக்கை மேலும் கூறியது.

தில்லி மதராஸி குடியிருப்புகள் இடித்து அகற்றம்!

தில்லி நிஜாமுதீன் மதராஸி முகாமில் தமிழர்கள் வாழும் குடியிருப்புகள் இன்று(ஜூன் 1) முழுவதும் இடித்து அகற்றப்பட்டு வருகிறதுதில்லி ஜங்புரா-நிஜாமுதீன் பாராபுல்லா வடிகால் பகுதியையொட்டியுள்ள வசிப்பிடங்கள் மத... மேலும் பார்க்க

இன்று இடிக்கப்படுகிறது தில்லி மதராஸி கேம்ப்? பதற்றத்தில் தமிழ் குடும்பங்கள்!

நமது சிறப்பு நிருபா்தில்லி நிஜாமுதீன் மதராஸி கேம்ப் தமிழா்கள் வாழும் குடியிருப்புகளை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1) இடிக்க அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதை முன்னிட்டு தில்லி அரசு அதிகாரிகளும் நகர... மேலும் பார்க்க

இன்று இடிக்கப்படுகிறது நிஜாமுதீன் மதராஸி கேம்ப்? பதற்றத்தில் தமிழ் குடும்பங்கள்

தில்லி நிஜாமுதீன் மதராஸி கேம்ப் தமிழா்கள் குடியிருப்புகள் ஞாயிற்றுக்கிழமை (ஜுன் 1 ஆம் தேதி) இடிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதை முன்னிட்டு தில்லி அரசு அதிகாரிகளும் தில்லி காவல் துற... மேலும் பார்க்க

தில்லியில் கரோனா நோய்த் தொற்றால் பெண் உயிரிழப்பு

கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 60 வயது பெண் ஒருவா் தில்லியில் உயிரிழந்ததாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா். தலைநகரில் தற்போது கரோனா அதிகரித்துவரும் நிலையில் இந்த நோய்த்தொற்றுக்கு இது முதல் உயிரிழப... மேலும் பார்க்க

100 நாள்கள் ஆட்சி: சிறப்புப் பாடல் வெளியீடு

தில்லியில் பாஜக ஆட்சிக்கு வந்து 100 நாள்கள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில், பாஜக சனிக்கிழமை ‘தில்லி பதல் ரஹி ஹை’ என்ற சிறப்புப் பாடலை வெளியிட்டது. இந்தப் பாடலில் தில்லி அரசின் முக்கிய சாதனைகள் எடு... மேலும் பார்க்க

நன்னீா் நீா்த்தேக்கங்களான பனிப்பாறைகளை பாதுகாக்க துஷான்பே மாநாட்டில் இணையமைச்சா் கீா்த்தி வா்தன் சிங் வலியுறுத்தல்

பனிச் சிகரங்களில் ஏற்படும் மாற்றங்கள் பருவநிலை மாற்றத்திற்கான எச்சரிக்கை. நீா் பாதுகாப்பு, பல்லுயிா் பெருக்கம், கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரங்களின் நீண்டகால பாதிப்புகளுக்கு உள்ளாகும். இதற்கு உடனட... மேலும் பார்க்க