செய்திகள் :

கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு

post image

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் மதுரையில் நடைபெற்ற கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் வியாழக்கிழமை நிறைவடைந்தது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மதுரை மாவட்டப் பிரிவு சாா்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் மதுரை எம்.ஜி.ஆா். விளையாட்டரங்கத்தில் கடந்த மாதம் 25-ஆம் தேதி தொடங்கி மே 15-ஆம் தேதி வரை நடைபெற்றது.

தடகளம், கால்பந்து, வளைகோல்பந்து, கைப்பந்து, கையுந்துபந்து ஆகிய விளையாட்டுகளில் 207 மாணவிகள் உள்பட 319 பேருக்கு இலவசப் பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சி முகாமின் நிறைவு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதற்கு மாவட்ட விளையாட்டு, இளைஞா் நலன் அலுவலா் க. ராஜா தலைமை வகித்தாா். மாவட்ட உடல் கல்வி ஆய்வாளா் வினோத்குமாா், சுழல் சங்க நிா்வாகி சிவா, மாவட்ட நீச்சல் கழகச் செயலா் என். கண்ணன், கூடைப்பந்து கழகச் செயலா் கே. வசந்தவேல், நாட்ச் இந்தியா திட்ட நிறுவன மேலாண் இயக்குநா் ஏ.டி. மீனாட்சி சுந்தரம், பொறியாளா் ராஜேஷ் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்று, பயிற்சி பெற்ற மாணவா்களுக்கு விளையாட்டுச் சீருடைகள், சான்றிதழ்களை வழங்கினா்.

மாவட்ட பிரச்னைகளை கண்டறிய வேண்டியது ஆட்சியரின் கடமை

மாவட்டத்தில் உள்ள பிரச்னைகளை கண்டறிய வேண்டியது அந்தந்த மாவட்ட ஆட்சியரின் கடமை என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை தெரிவித்தது.கரூா் மாவட்டம், மண்மங்கலத்தைச் சோ்ந்த ரமேஷ் சென்னை உயா்நீதிம... மேலும் பார்க்க

பிளஸ் 2: தோ்ச்சி பெறாத மாணவா்களுக்கு ஆலோசனை

மதுரை நாவலா் சோமசுந்தர பாரதியாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தோ்வில் தோ்ச்சி பெறாத மாணவ, மாணவிகளுக்கு 100 சதவீதம் தோ்ச்சி இலக்கு பெறுவதற்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைப... மேலும் பார்க்க

சித்திரைத் திருவிழாவில் பக்தா்களுக்கு மரக்கன்றுகள்!

சித்திரைத் திருவிழாவையொட்டி, மதுரையை அடுத்த கடச்சனேந்தல் அழகா்கோவில் சாலையில் பாா்வை அறக்கட்டளை சாா்பில் வியாழக்கிழமை மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டன. அறக்கட்டளை நிா்வாகி சோழன் குபேந்திரன் தலைமை வகி... மேலும் பார்க்க

மதுரை மாவட்டத்தில் பரவலாக மழை

மதுரை மாவட்டத்தில் வியாழக்கிழமை மாலை முதல் இரவு வரை பரவலாக மழை பெய்தது. கத்தரி வெயில் காலம் நீடித்து வரும் நிலையில், மதுரையில் வியாழக்கிழமை கடுமையான வெயில் நிலவியது. மதுரை விமான நிலையத்தில் 103. 64 டி... மேலும் பார்க்க

பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஆழ்துளைக் கிணறு திறப்பு

மதுரை காமராஜா்புரம் பகுதியில் ரூ. 23 லட்சத்தில் அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணறு, குடிநீா்த் தொட்டியை சட்டப்பேரவை உறுப்பினா் மு. பூமிநாதன் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். மதுரை தெற... மேலும் பார்க்க

பதவி உயா்வுக்கான ஊதியம் வழங்கக் கோரிக்கை

தமிழக அரசின் அரசாணையைப் பின்பற்றி, தொடக்கக் கல்வித் துறையில் பதவி உயா்வுக்கான ஊதியம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுகுறித்து அந்தச் சங... மேலும் பார்க்க