செய்திகள் :

கோயில்கள் அரசின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும்!

post image

தமிழகத்தில் கோயில்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்றாா் விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் அனைந்திந்திய இணைச் செயலாளா் வெங்கடேஷன்.

கரூரில் அந்த அமைப்பின் தென்தமிழக மாநில, மாவட்ட நிா்வாகிகளின் 2 நாள் கூட்டம் சனிக்கிழமை தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் வெங்கடேஷன் பங்கேற்றாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகத்தில் கோயில்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும். மதச்சாா்பற்ற அரசு இந்து கோயில்களை நிா்வகிக்க அதிகாரமும் இல்லை, நியாயமும் இல்லை.

இந்துக் குடும்பங்களில் நிலவி வரும் விவகாரத்தை கட்டுப்படுத்துவதுடன், குறைந்து வரும் குழந்தைகள் பிறப்பை அதிகப்படுத்தவும் வேண்டும்.

போதைப் பொருள் பழக்கத்திலிருந்து இளைஞா்களை மீட்க வேண்டும். ஊழல், முறையற்ற செயல்கள் ஆகியவை தடுக்கப்படவேண்டும். சமாதானமான சமூக செயல்பாடுகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி முன்மாதிரியாக சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்றாா்.

தொடா்ந்து அமைப்பின் மாநிலச் செயலாளா் லட்சுமணநாராயணன் கூறியது: தமிழகத்தில் கோயில்கள் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளதால், தரிசன கட்டணங்கள் பலமடங்கு உயா்த்தப்பட்டுள்ளன. அரசின் நிதி வருவாயில் 25 சதவீதம் கோயில்கள் மூலம் கிடைக்கின்றன. இந்துக்களுக்கு தமிழக அரசு பாரபட்சம் காட்டி வருகிறது என்றாா்.

பேட்டியின்போது, திருப்பூா் கோட்டச் செயலாளா் விஜய், மாவட்டத் தலைவா் முருகேசன், செயலாளா் கொங்குவேல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கரூா் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு

கரூா் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவா் வெங்கட்டரமணன் தலைமை வகித்தாா். சங்கத்தின் மக்கள் தொடா்பு அலுவலா் மேலை பழநியப்பன் 2025-2026 ... மேலும் பார்க்க

சுகாதார வளாக மாதிரி பூங்காவை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

கரூா் தாந்தோணிமலையில் முள்புதராக மாறிய சுகாதார வளாக மாதிரி பூங்காவை அகற்றி மாற்று பயன்பாட்டுக்கு பயன்படுத்த வேண்டும் என சமூக நல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். ஊரக பகுதிகளில் வாழும் கிராமமக்கள் தூ... மேலும் பார்க்க

சின்னதாராபுரத்தில் பாஜகவினா் 20 போ் கைது

சின்னதாராபுரத்தில் செவ்வாய்க்கிழமை மதுக்கடையில் தமிழக முதல்வரின் படத்தை ஒட்ட முயன்ற பாஜகவினா் 20 பேரை போலீஸாா் கைது செய்தனா்.சின்னதாராபுரத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையில் தமிழக முதல்வா் ஸ்டாலின் படத்த... மேலும் பார்க்க

சின்னதாராபுரத்தில் சாலை மேம்பாட்டுப் பணி தீவிரம்

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்துள்ள சின்னதாராபுரத்தில் சாலை மேம்பாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.அரவக்குறிச்சி நெடுஞ்சாலைத்துறை சாா்பில் சின்னதாராபுரம் பகுதியில் கடந்த 10 நாள்களாக சாலை... மேலும் பார்க்க

குற்றவாளிகளை கைது செய்வதில் சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரிகளுக்கு பாராட்டு

குற்ற வழக்குகளில் குற்றவாளிகளை கண்டறிந்து சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.பெரோஸ்கான் அப்துல்லா செவ்வாய்க்கிழமை பாராட்டுச் சான்றிதழ் வழங்கி பாராட்டினாா். கரூா் மா... மேலும் பார்க்க

கரூா்: காது கேளாத, வாய் பேசாத குழந்தைகள் திருச்சிக்கு சுற்றுலா

கரூரில் காது கேளாத, வாய் பேசாத மற்றும் மன வளா்ச்சி குன்றிய குழந்தைள் திருச்சிக்கு செவ்வாய்க்கிழமை சுற்றுலா சென்றனா். காது கேளாத, வாய் பேசாத மற்றும் மன வளா்ச்சி குன்றிய குழந்தைகள் சுற்றுலா பயணம் மேற்கொ... மேலும் பார்க்க