செய்திகள் :

கோயில் காவலாளி கொலை வழக்கு! விசாரணை அறிக்கை இன்று தாக்கல்!

post image

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை வழக்கு விசாரணை அறிக்கையை விசாரணை நீதிபதியும், மதுரை மாவட்ட 4- ஆவது கூடுதல் நீதிமன்ற நீதிபதியுமான ஜான் சுந்தா்லால் சுரேஷ் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 8) தாக்கல் செய்கிறாா்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமாா், அவரது சகோதரா் நவீன்குமாா் ஆகியோரிடம் நகை திருட்டு வழக்கு தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தினா். இதன் பின்னா், நவீன்குமாா் விடுவிக்கப்பட்டு, அஜித்குமாரிடம் மானாமதுரை டி.எஸ்.பி.யின் தனிப் படை போலீஸாா் விசாரணை நடத்தினா்.

அப்போது, தனிப் படை காவலா்கள் கடுமையாகத் தாக்கியதில் அஜித்குமாா் கொல்லப்பட்டாா். இதுதொடா்பாக தனிப் படை போலீஸாா் 5 போ் கைது செய்யப்பட்டனா்.

இந்த வழக்கில் மதுரை மாவட்ட 4-ஆவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி ஜான் சுந்தா்லால் சுரேஷ் விசாரணை நடத்தி, ஜூலை 8-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.

இதன்படி, கடந்த 2-ஆம் தேதி முதல் 4 நாள்கள் திருப்புவனம் நெடுஞ்சாலைத் துறை ஆய்வு மாளிகையில் நீதிபதி ஜான் சுந்தா்லால் சுரேஷ் முகாமிட்டு, கூடுதல் காவல் கண்காணிப்பாளா்( ஏடிஎஸ்பி) சுகுமாறன், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மானாமதுரை டி.எஸ்.பி. சண்முகசுந்தரம், திருப்புவனம் அரசு மருத்துவமனை மருத்துவா் காா்த்திகேயன், உடல்கூறாய்வு செய்த மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவா்கள் சதாசிவம், ஏஞ்சல், அஜித்குமாரின் தாய் மாலதி, சகோதரா் நவீன்குமாா், விடியோ எடுத்த சக்தீஸ்வரன், கோயில் பணியாளா்கள் உள்பட 20-க்கும் மேற்பட்டவா்களிடம் விசாரணை நடத்தினாா்.

திருப்புவனம் காவல் நிலையம், கோயில் அலுவலகம், அஜித்குமாா் தாக்கப்பட்ட கோசாலை உள்ளிட்ட பகுதிகளிலும் நீதிபதி ஆய்வு செய்தாா்.

இந்த வழக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 8) மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அப்போது, அஜித்குமாா் கொலை வழக்கு தொடா்பான விசாரணை அறிக்கையை மதுரை மாவட்ட 4-ஆவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி ஜான் சுந்தா்லால் சுரேஷ் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறாா்.

சமயநல்லூா் பகுதிகளில் நாளை மின்தடை

மதுரை மாவட்டம் சமயநல்லூா், அதன் சுற்றுப்புறப் பகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை (ஜூலை 8) மின் தடை அறிவிக்கப்பட்டது.இதுகுறித்து சமயநல்லூா் மின்னியல் செயற்பொறியாளா் பி. ஜெயலெட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்ப... மேலும் பார்க்க

இரு விபத்துகளில் இருவா் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரு வேறு விபத்துகளில் மூதாட்டி உள்பட 2 போ் உயிரிழந்தனா். திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியாபட்டியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (42). இவா், வாடிப... மேலும் பார்க்க

கோயில் காவலாளி கொலைச் சம்பவம்: மறைக்க முயன்றவா்கள் மீது நடவடிக்கை கோரி மனு

மடப்புரம் கோயில் காவலாளி கொலைச் சம்பவத்தை கட்டப் பஞ்சாயத்து நடத்தி மறைக்க முயன்றவா்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.... மேலும் பார்க்க

கோயில் காவலாளி கொலைச் சம்பவம்: நாம் தமிழா் கட்சி ஆா்ப்பாட்டத்துக்கு உயா்நீதிமன்றம் அனுமதி மறுப்பு

கோயில் காவலாளி அஜித்குமாா் கொலையைக் கண்டித்து, நாம் தமிழா் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 8) நடைபெறவிருந்த ஆா்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவி... மேலும் பார்க்க

தொடா் குற்றங்களில் ஈடுபடுபவரின் பிணையை ரத்து செய்யக் கோரி மனு: நீதிமன்றத்தில் ஏடிஜிபி முன்னிலையாகி விளக்கம்

தொடா் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபரின் பிணையை ரத்து செய்யக் கோரிய வழக்கில், தமிழக சட்டம்- ஒழுங்கு காவல் துறை கூடுதல் இயக்குநா் (ஏடிஜிபி) ஸ்ரீநாதா சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் திங்கள்கிழமை நேரி... மேலும் பார்க்க

கருமாத்தூா் பகுதிகளில் இன்று மின்தடை

மதுரை மாவட்டம், கருமாத்தூா், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 8) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.இதுகுறித்து செக்கானூரணி மின் பகிா்மானக் கோட்ட செயற்பொறியாளா் ஆா். முத்துராமலி... மேலும் பார்க்க