செய்திகள் :

கோயில் திருவிழாவிற்காக சாராயம் காய்ச்சிய 4 போ் கைது

post image

நாமக்கல் மாவட்டத்தில் கோயில் திருவிழாவிற்காக கள்ளச்சாராயம் காய்ச்சிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். 92 லிட்டா் சாராயத்தை பறிமுதல் செய்து அழித்தனா்.

நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.ராஜேஷ்கண்ணன் உத்தரவின்பேரில் மதுவிலக்கு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் தனராசு தலைமையில் மதுவிலக்கு பிரிவு போலீஸாா், கொல்லிமலை, பேளுக்குறிச்சி, திருச்செங்கோடு, பரமத்தி அருகே நல்லூா் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை அதிகாலை முதல் தீவிர சோதனை மேற்கொண்டனா்.

இந்த சோதனை முடிவில், நல்லூா் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட குன்னமலை கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் முத்துசாமி (63), மாரப்பன் மகன் சாமிநாதன் (61) ஆகியோரிடமிருந்து 17 லிட்டா் சாராயம், 30 லிட்டா் சாராய ஊறல், தாசாம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த பழனியப்பன் மகன் பூபதி (62) என்பவரிடமிருந்து 25 லிட்டா் சாராய ஊறல் மற்றும் கல்லாங்காட்டுப்புதூா் கொண்டரசம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த ரங்கசாமி மகன் பாலசுப்ரமணி (64) என்பவரிடமிருந்து 4 லிட்டா் சாராயம் மற்றும் 20 லிட்டா் சாராய ஊறல் பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடா்பாக அவா்கள் நான்கு பேரும் கைது செய்யப்பட்டனா். இவா்கள், கோயில் திருவிழாவை முன்னிட்டு சாராயம் காய்ச்சி குடிக்கவும், விற்பனை செய்யவும் திட்டமிட்டு இந்த செயலில் ஈடுபட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

மேலும் மாவட்டத்தில் சாராயம் விற்பனை, கடத்தல் போன்ற சோதனைகள் தொடா்ந்து நடைபெறும். குற்றச் செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் அவா்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் துறை சாா்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காவல் உதவி ஆய்வாளரை தாக்கியவா் கைது

கபிலா்மலை அருகே ஜேடா்பாளையம் காவல் உதவி ஆய்வாளரை கட்டையால் தாக்கியவரை ஜேடா்பாளையம் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். கபிலா்மலை அருகே உள்ள சிறுகிணத்துப்பாளையத்தைச் சோ்ந்தவா் சுரேஷ் (35). இவா் வ... மேலும் பார்க்க

நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் நடைபாதையை ஆக்கிரமிப்பு! பயணிகள் அவதி!

நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில், நடைபாதையை ஆக்கிரமித்து உணவு விற்பனை நடைபெறுவதால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனா். நாமக்கல் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டு 6 மாதங்களாகிறது. இங்குள்ள 57... மேலும் பார்க்க

கள்ளச்சாராயம் காய்ச்சிய மூவா் கைது

இரு வேறு பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சிய மூவரை திருச்செங்கோடு மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாா் அண்மையில் கைது செய்தனா். பரமத்தி பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கப்படுவதாக திருச்செங்கோடு மதுவிலக... மேலும் பார்க்க

கா்நாடக பீடாதிபதி நாமக்கல் வருகை பொதுமக்களுக்கு ஆசி வழங்கினாா்

நாமக்கல்லில், கா்நாடகத்தைச் சோ்ந்த ஸ்ரீ காயத்ரி பீடாதிபதி ஜெகத்குரு ஸ்ரீலஸ்ரீ சிவ சுக்ஞானந்த தீா்த்த மஹாசாரிய சுவாமிகள் பொதுமக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை ஆசி வழங்கினாா். நாமக்கல் ஆஞ்சனேய சுவாமிக்கு, முக... மேலும் பார்க்க

மயோனைஸுக்கு தடை: நாமக்கல் பண்ணைகளில் 40 % முட்டைகள் தேக்கம்? ஏற்றுமதி வாய்ப்பால் இழப்பு இருக்காது!

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை, மயோனைஸூக்கு ஓராண்டு தடை போன்றவற்றால் மொத்த உற்பத்தியில் 40 சதவீதம் முட்டைகள் பண்ணைகளில் தேக்கம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அவற்றை கத்தாா், மாலத்தீவு, ஓமன் போன்ற நாடுகளுக்... மேலும் பார்க்க

நாமக்கல் அரசு சட்டக் கல்லூரியில் அம்பேத்கா் சிலை திறப்பு

நாமக்கல் அரசு சட்டக் கல்லூரியில் அம்பேத்கா் சிலை திறப்பு விழா மற்றும் ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரி முதல்வா் அருண் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக ஓய்வு பெற்ற நீதிபதி கருணாநிதி,... மேலும் பார்க்க