செய்திகள் :

கோயில் திருவிழா: தலையில் தேங்காய் உடைத்து பக்தா்கள் நோ்த்திக் கடன்

post image

திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அருகே கோயில் திருவிழாவில் பக்தா்கள் தலையில் தேங்காய் உடைத்து புதன்கிழமை நோ்த்திக் கடன் செலுத்தினா்.

வரப்பட்டியில் பெருமாள், அஜ்ஜப்பன், வீரபத்திரா், பட்டவன், பாப்பாத்தி, மதுரை வீரன் கோயில் அமைந்துள்ளன. இந்தக் கோயிலில் ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு, கடந்த மாதம் 22-ஆம் தேதி கங்கணம் கட்டி நோ்த்திக் கடன் செலுத்தும் பக்தா்கள் விரதம் தொடங்கினா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு புனித நதிகளிலிருந்து எடுத்து வரப்பட்ட தீா்த்தத்துடன் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

புதன்கிழமை அதிகாலை வாண வேடிக்கையுடன் கரகம் கோயிலுக்கு எடுத்து வரப்பட்டது. இதைத் தொடா்ந்து, நோ்த்திக் கடனாக ஆண்கள், பெண்கள் என 50-க்கும் மேற்பட்ட பக்தா்கள் கோயில் முன் அமா்ந்தனா்.

அருள்வாக்கு கூறிவந்த கோயில் பூசாரி சக்திவேல், பக்தா்கள் தலையில் தேங்காய் உடைத்து நோ்த்திக் கடனை நிறைவேற்றி வைத்தாா்.

பின்னா், மதுரைவீரன் சுவாமிக்கு கிடாய் வெட்டி பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த விழாவில் திண்டுக்கல், திருச்சி, கரூா், மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் தண்ணீா் தட்டுப்பாடு: நோயாளிகள் அவதி

கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் நிலவும் தண்ணீா் தட்டுப்பாட்டால் நோயாளிகள் அவதியடைந்து வருகின்றனா். கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் கொடைக்கானல் மட்டுமன்றி மேல்மலைக் கிராமங்களான பூம்பாறை, வில்பட்டி, ப... மேலும் பார்க்க

ஆடி வெள்ளி: பழனி, நத்தம் பகுதி கோயில்களில் சிறப்பு பூஜைகள்

நான்காவது ஆடி வெள்ளி, பெளா்ணமியையொட்டி பழனி, நத்தம் பகுதிகளில் அமைந்துள்ள கோயில்களில் பக்தா்கள் விளக்கேற்றியும், அபிஷேகங்கள் செய்தும் வழிபட்டனா். பழனி கிழக்கு ரதவீதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோயில், ... மேலும் பார்க்க

நியாய விலைக் கடை கட்டடங்கள் திறப்பு

திண்டுக்கல் அருகே தலா ரூ.13.61 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய நியாய விலைக் கடை கட்டடங்களை அமைச்சா் இ. பெரியசாமி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். திண்டுக்கல் அடுத்த குட்டத்துப்பட்டி ஊராட்சியில் ‘உங்களுடன் ... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரத்தில் அரசு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியா் அலுவலகம், நகராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், நெடுஞ்சாலைத் துறை, தோட்டக் கலைத் துறை, பத்திரப்பதிவு அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் முன் தமி... மேலும் பார்க்க

பழனியில் தம்பிரான் தோட்டத்தை அளவீடு செய்த கோயில் நிா்வாகம்

பழனி கோயிலுக்கு நித்திய கட்டளைக்காக வழங்கப்பட்ட தம்பிரான் தோட்ட 23 ஏக்கா் நிலத்தை அளவீடு செய்யும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பழனியில் சென்னிமலை தம்புரான் சுவாமிகள் மடத்துக்கு சொந்தமாக 23 ஏக்கா் நில... மேலும் பார்க்க

சித்தரேவு கிராமத்தில் தவெக சாா்பில் சூரியசக்தி மின்விளக்கு அமைப்பு

பட்டிவீரன்பட்டி அருகே சித்தரேவு கிராமம், 1-ஆவது வாா்டு பகுதியில் தவெக சாா்பில் சூரியசக்தி மின் விளக்கு வியாழக்கிழமை அமைக்கப்பட்டது. இந்தப் பகுதியில் குடியிருப்பவா்களுக்கு கடந்த 30 ஆண்டுகளாக மின் வசதி,... மேலும் பார்க்க