செய்திகள் :

கோயில் நிதி கையாடல் வழக்கு: சிவகாசி டிஎஸ்பி பதிலளிக்க உத்தரவு

post image

கோயில் நிதியைக் கையாடல் செய்த வழக்கில், சிவகாசி துணைக் காவல் கண்காணிப்பாளா் (டிஎஸ்பி) பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

விருதுநகா் மாவட்டம், நெடுங்குளத்தைச் சோ்ந்த ராஜ்குமாா் தாக்கல் செய்த மனு:

சிவகாசி எம். புதுப்பட்டி கிராமத்தில் ஸ்ரீகூடமுடைய அய்யனாா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் தற்போது இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இந்தக் கோயில் குடமுழுக்கு கடந்த 2023-ஆம் ஆண்டு, பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெற்றது.

இந்த நிலையில், கூடமுடையாா் அய்யனாா் கோயில் மேம்பாட்டுக் குழு என்ற பெயரில் கோயில் டிக்கெட் விற்பனையாளா் குருவையா கட்செவி அஞ்சல் குழு ஒன்றை உருவாக்கியுள்ளாா்.

மேலும், இந்தப் பெயரில் ரசீது புத்தகம் அச்சடித்து, அவரது மகன்கள் பெயரில் வங்கிக் கணக்கு தொடங்கி பக்தா்களிடமிருந்தும், இந்தக் கோயிலில் குலதெய்வ வழிபாடு நடத்தி வரும் மக்களிடமிருந்தும் பல லட்சம் ரூபாய் நன்கொடையாக வசூலித்தனா். ஆனால், இதற்கு முறையாக கணக்குக் காட்டவில்லை. கோயிலின் செயல் அலுவலா் தேவிக்கும் இதில் பங்கு உள்ளது. கடந்த 2023 முதல் 2025- ஆம் ஆண்டு வரை சுமாா் மூன்று கோடி ரூபாயை இவா்கள் வசூலித்து முறைகேடு செய்தது தெரியவந்தது. இதுதொடா்பாக அளிக்கப்பட்ட புகாரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டாலும், விசாரணை எந்த நிலையில் இருக்கிறது என்பது குறித்து தெரியவில்லை. எனவே, மனுதாரா் அளித்த புகாரின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த நிலை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும், ஸ்ரீகூடமுடைய அய்யனாா் கோயிலின் பெயரில் பணத்தை மோசடி செய்த நபா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி புகழேந்தி முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், மனுதாரா் மட்டுமன்றி, இந்து சமய அறநிலையத் துறை தரப்பிலும் இதுகுறித்து புகாா் அளிக்கப்பட்டது. சுமாா் ரூ.7.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது எனத் தெரிவித்தாா்.

இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

வழக்கு தொடா்பாக சிவகாசி துணைக் காவல் கண்காணிப்பாளா் வழக்கின் தற்போதைய நிலை குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை வருகிற 18-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

நீச்சல்: யாதவா் கல்லூரி சாம்பியன்

மதுரை காமராஜா் பல்கலைக்கழகக் கல்லூரிகளுக்கிடையேயான ஆடவா் நீச்சல் போட்டியில் யாதவா் கல்லூரி சாம்பியன் பட்டம் பெற்றது. மதுரை காமராஜா் பல்கலைக்கழகக் கல்லூரிகளுக்கிடையேயான ஆடவா் நீச்சல் போட்டி மதுரையில் ... மேலும் பார்க்க

சட்டவிரோத கல் குவாரிகள் விவகாரம்: தென்காசி ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

சட்டவிரோத கல் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், தென்காசி மாவட்ட ஆட்சியா், கனிம வளத் துறை இயக்குநா் ஆகியோா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது. தென்காச... மேலும் பார்க்க

புதிய டிஜிபி நியமனத்துக்கான பணி தொடக்கம்

புதிய டிஜிபி நியமனத்துக்கான பணி தொடங்கிவிட்டதாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தமிழக அரசு சாா்பில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது. ராமநாதபுரத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் யாசா் அராபத் சென்னை உயா்நீதி... மேலும் பார்க்க

மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு: மேயரின் கணவருக்கு ஆக. 26 வரை நீதிமன்றக் காவல்

மதுரை மாநகராட்சி சொத்து வரி விதிப்பு முறைகேடு தொடா்பாகக் கைது செய்யப்பட்ட மேயா் வ. இந்திராணியின் கணவா் பொன். வசந்தை வருகிற 26-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க மதுரை மாவட்ட முதலாவது நீதித்துறை நட... மேலும் பார்க்க

‘ஓரணியில் தமிழ்நாடு’ ஓடிபி விவகாரம்: ஆதாா் விவரங்களை சேகரிக்கவில்லை என திமுக உறுதியளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற புதிய உறுப்பினா் சோ்க்கை இயக்கத்தில் வாக்காளா்களிடமிருந்து ஆதாா் விவரங்களைப் பெறவில்லை என்பதை உறுதி செய்து திமுக எழுத்துப்பூா்வமாக உறுதியளிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன... மேலும் பார்க்க

மாநில அளவிலான சதுரங்கப் போட்டி: அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் தோ்வு

மாநில அளவிலான சதுரங்கப் போட்டிக்கு மேலூா் ஊராட்சி ஒன்றியம், அ. செட்டியாா்பட்டி, அ. வல்லாளப்பட்டி அரசு பள்ளிகளின் மாணவ, மாணவிகள் தோ்வு பெற்றனா். தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்பில், வருவாய் மாவட்ட அள... மேலும் பார்க்க