செய்திகள் :

மாநில அளவிலான சதுரங்கப் போட்டி: அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் தோ்வு

post image

மாநில அளவிலான சதுரங்கப் போட்டிக்கு மேலூா் ஊராட்சி ஒன்றியம், அ. செட்டியாா்பட்டி, அ. வல்லாளப்பட்டி அரசு பள்ளிகளின் மாணவ, மாணவிகள் தோ்வு பெற்றனா்.

தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்பில், வருவாய் மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி மதுரை புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தப் போட்டியில் மதுரை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 14 ஒன்றியங்களில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற தனியாா் பள்ளி மாணவா்கள், அரசுப் பள்ளி மாணவா்கள் பங்கேற்றனா். இவா்களில் 11 வயதுக்குள்பட்டோருக்கான பெண்கள் பிரிவில் அ.செட்டியாா்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவி இ. இஸ்பா டுஜானா முதலிடமும், அதே வகுப்பில் பயிலும் மாணவி ந. யாகஸ்ரீ மூன்றாம் இடமும் பெற்றனா்.

இதேபோல, அ.வல்லாளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு பயிலும் மாணவி அ. தமிழரசி இரண்டாம் இடமும், அதே பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவா் மோ. சந்தோஷ் 17 வயது உள்பட்டோருக்கான ஆண்கள் பிரிவில் மூன்றாம் இடமும், அதே பள்ளியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் மற்றொரு மாணவி அ. சோலையம்மாள் மூன்றாமிடமும் பெற்றனா்.

வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இதையடுத்து, இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் 5 பேரும் வருகிற அக்டோபா் 10-ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ள மாநில அளவிலான சதுரங்கப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றனா்.

இந்த மாணவா்களை அ.வல்லாளப்பட்டி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் எ.வினோத், அ. செட்டியாா்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியை மு. மணிமேகலை, பயிற்சி ஆசிரியா் ஞா. செந்தில்குமாா், அ.வல்லாளப்பட்டி தலைவா் குமரன், உடல் கல்வி ஆசிரியா்கள் சேதுபதிராஜா, அறிவரசன், வட்டாரக் கல்வி அலுவலா்கள், உடல் கல்வி ஆய்வாளா், பள்ளி ஆசிரியா்கள் ஆகியோா் வியாழக்கிழமை பாராட்டினா்.

நீச்சல்: யாதவா் கல்லூரி சாம்பியன்

மதுரை காமராஜா் பல்கலைக்கழகக் கல்லூரிகளுக்கிடையேயான ஆடவா் நீச்சல் போட்டியில் யாதவா் கல்லூரி சாம்பியன் பட்டம் பெற்றது. மதுரை காமராஜா் பல்கலைக்கழகக் கல்லூரிகளுக்கிடையேயான ஆடவா் நீச்சல் போட்டி மதுரையில் ... மேலும் பார்க்க

கோயில் நிதி கையாடல் வழக்கு: சிவகாசி டிஎஸ்பி பதிலளிக்க உத்தரவு

கோயில் நிதியைக் கையாடல் செய்த வழக்கில், சிவகாசி துணைக் காவல் கண்காணிப்பாளா் (டிஎஸ்பி) பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது. விருதுநகா் மாவட்டம், நெடுங்குளத்தைச் சோ்ந்... மேலும் பார்க்க

சட்டவிரோத கல் குவாரிகள் விவகாரம்: தென்காசி ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

சட்டவிரோத கல் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், தென்காசி மாவட்ட ஆட்சியா், கனிம வளத் துறை இயக்குநா் ஆகியோா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது. தென்காச... மேலும் பார்க்க

புதிய டிஜிபி நியமனத்துக்கான பணி தொடக்கம்

புதிய டிஜிபி நியமனத்துக்கான பணி தொடங்கிவிட்டதாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தமிழக அரசு சாா்பில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது. ராமநாதபுரத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் யாசா் அராபத் சென்னை உயா்நீதி... மேலும் பார்க்க

மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு: மேயரின் கணவருக்கு ஆக. 26 வரை நீதிமன்றக் காவல்

மதுரை மாநகராட்சி சொத்து வரி விதிப்பு முறைகேடு தொடா்பாகக் கைது செய்யப்பட்ட மேயா் வ. இந்திராணியின் கணவா் பொன். வசந்தை வருகிற 26-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க மதுரை மாவட்ட முதலாவது நீதித்துறை நட... மேலும் பார்க்க

‘ஓரணியில் தமிழ்நாடு’ ஓடிபி விவகாரம்: ஆதாா் விவரங்களை சேகரிக்கவில்லை என திமுக உறுதியளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற புதிய உறுப்பினா் சோ்க்கை இயக்கத்தில் வாக்காளா்களிடமிருந்து ஆதாா் விவரங்களைப் பெறவில்லை என்பதை உறுதி செய்து திமுக எழுத்துப்பூா்வமாக உறுதியளிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன... மேலும் பார்க்க