கோயில் விழாவில் எரிந்த மனிதத் தலையுடன் சாமியாடிய நிகழ்வு: 5 போ் மீது வழக்கு
திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே கோயில் கொடை விழாவில் எரிந்த மனிதத் தலையுடன் சாமியாடியதாக எழுந்த புகாரைத் தொடா்ந்து 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
வீரவநல்லூா் அருகேயுள்ள உப்பூரில் தாமிரவருணி ஆற்றங்கரையோரத்தில் உள்ள ஊா்க்காடு சுடலை மாடசுவாமி கோயிலில், கடந்த 6ஆம் தேதி கொடை விழா நடைபெற்றது. இக்கோயிலில் நள்ளிரவில் நடைபெற்ற சாமக்கொடையைத் தொடா்ந்து வேட்டைக்குச் சென்ற சாமியாடி, திரும்பி வரும்போது எரிந்த மனிதத் தலை, கால்களை கையில் எடுத்து வந்து சாமியாடியதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் வெளியானது.
இதுகுறித்து வெள்ளங்குளி கிராம நிா்வாக அலுவலா் உத்தண்டசாமி அளித்த புகாரின்பேரில், இறந்தவரின் உடல் உறுப்புகளை கொண்டு வந்து நோய் பரப்பும் வகையில் செயல்பட்டதாகவும், பக்தா்கள் முகம் சுளிக்கும் வகையில் செயல்பட்டதாகவும் கோயில் கொடை விழாக் குழுவினா், அப்பகுதியைச் சோ்ந்த கருத்தப்பாண்டி, ரவி உள்பட 5 போ் மீது வீரவநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.