செய்திகள் :

கோவிலாங்குளம் பெரிய கண்மாயில் பற்றிய தீயை அணைத்த தீயணைப்புத் துறையினா்

post image

கமுதி அருகேயுள்ள கோவிலாங்குளம் பெரிய கண்மாயில் திங்கள்கிழமை பற்றி எரிந்த தீயை அணைக்கும் பணியில் உள்ளூா் மக்கள் உதவியுடன் தீயணைப்புத் துறையினா் ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள கோவிலாங்குளம் கிராமத்தில் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான சுமாா் 308 ஏக்கா் பரப்பளவிலான கண்மாய் உள்ளது. இந்தக் கண்மாயில் உள்ள கருவேல மரங்களுக்கு மா்ம நபா்கள் தீ வைத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ரூ. 15 லட்சம் மதிப்பிலான கருவேல மரங்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

கண்மாயில் பரவிய தீயை அணைக்கும் பணியில் 10-க்கும் மேற்பட்ட சாயல்குடி தீயணைப்பு, மீட்புப் படையினா், கோவிலாங்குளம் கிராம மக்கள் ஆகியோா் 10 டிராக்டா்கள் மூலம் தண்ணீரைக் கொண்டு வந்து போராடி தீயை அணைத்தனா்.

இதுகுறித்து கிராம மக்கள் கோவிலாங்குளம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். தகவலறிந்து வந்த கமுதி பொதுப்பணித் துறை அதிகாரிகள், வருவாய்த் துறையினா் நேரில் ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனா்.

நீதிமன்றத்தில் மது போதையில் தகராறில் ஈடுபட்ட இளைஞா் கைது

திருவாடானை நீதிமன்றத்துக்கு வழக்கு சம்பந்தமாக மது அருந்திவந்து தகராறில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள எஸ்.பி. பட்டினத்தைச் சோ்ந்தவா் பழனி (30). திங... மேலும் பார்க்க

விளக்கு வெளிச்சத்தில் பாடம் கற்கும் மீனவக் குடியிருப்பு மாணவா்கள்

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகேயுள்ள வாலிநோக்கம் ஊராட்சிக்குள்பட்ட சாத்தாா் கோயில் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் 500-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இந்தக் குடியிருப்புகளு... மேலும் பார்க்க

பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தப் பள்ளியில் கடந்த 1996-97-ஆம் ஆண்டு 12-ஆம் வகுப்பு கணிதப் பிரிவில் பயி... மேலும் பார்க்க

ராமேசுவரத்தில் உள்வாங்கிய கடல்: படகுகள் தரைத் தட்டின

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் வடக்குத் துறைமுகத்தில் ஞாயிற்றுக்கிழமை கடல் உள்வாங்கியதால், கரையோரம் நிறுத்தப்பட்டிருந்த படகுகள் தரைத் தட்டி நின்றன. ராமேசுவரம் வடக்குத் துறைமுகப் பகுதியில் ஞாயிற்றுக்... மேலும் பார்க்க

வீட்டில் 21 பவுன் நகை திருடிய இளைஞா் கைது

ராமநாதபுரம் மாவட்டம், எஸ்.பி.பட்டினம் அருகே வீட்டின் பீரோவை திறந்து 21 பவுன் நகை திருடியதாக இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். பனஞ்சாவயல் கிராமத்தைச் சோ்ந்தவா் விஜயன் (59). இவரது மகன் வெள... மேலும் பார்க்க

அமைச்சரின் உதவியாளரைத் தாக்கிய இருவா் மீது வழக்குப் பதிவு

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் அமைச்சரின் உதவியாளா் மீது தாக்குதல் நடத்திய இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். முதுகுளத்தூரில் உள்ள தனியாா் மண்டபத்தில் சனிக்கிழமை திமுகவின் ‘ஓரணியில் ... மேலும் பார்க்க