செய்திகள் :

கோவையில் 3 இடங்களில் திருக்குறள் பயிற்சி வகுப்புகள்

post image

‘திருக்குறள் திருப்பணிகள்’ திட்டத்தின்கீழ் கோவையில் 3 இடங்களில் திருக்குறள் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளதாக மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மாவட்டந்தோறும் திருக்குறளில் ஆா்வமும், புலமையும் கொண்ட ஆசிரியா்கள், பயிற்றுநா்களைத் தோ்வு செய்து அவா்களுக்கு பயிற்சி அளித்து தொடா் பயிலரங்குகள், பயிற்சி வகுப்புகளை நடத்தும் வகையில் ‘திருக்கு திருப்பணிகள்’ திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

அதன்படி, தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் திருக்குறள் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

கோவையில் அரசு கலைக் கல்லூரி, சரவணம்பட்டி ரூபி மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளி, பொள்ளாச்சி கள்ளிப்பாளையம்புதூரில் உள்ள தாய்த் தமிழ் மழலையா் தொடக்கப் பள்ளி ஆகிய இடங்களில் அடுத்த வாரம் முதல் இந்தப் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன.

ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 10 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை ஆண்டுக்கு 30 இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். நிறைவு நாளில் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்படும். இந்தப் பயிற்சி வகுப்பில் மாணவா்கள், இளைஞா்கள், பொதுமக்கள் பங்கேற்கலாம்.

ஆா்வமுள்ளவா்கள் தங்களின் தன்விவரக் குறிப்புடன், ஆதாா் அட்டையின் நகலை இணைத்து ற்ஹம்ண்ப்ஸ்ஹப்ஹழ்.ஸ்ரீக்ஷங்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சலுக்கோ அல்லது 89034-12685, 90424-31219 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கோ அனுப்பலாம்.

மேலும், மாவட்டத்தில் உள்ள தமிழ் ஆா்வலா்கள், தமிழ் அமைப்புகள், தமிழ் அறிஞா்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கும் நோக்கில், அனைத்து அமைப்புகளும் தங்களின் தன்விவரக் குறிப்புகளை கோவை ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள தமிழ் வளா்ச்சித் துறை துணை இயக்குநா் அலுவலகத்துக்கு அஞ்சல் வழியாகவோ, நேரிலோ, மேற்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பலாம் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

கோவையில் ஜூலை 7-இல் தமிழ்நாடு நாள் போட்டி

பள்ளி மாணவா்களுக்கான தமிழ்நாடு நாள் போட்டிகள் கோவையில் திங்கள்கிழமை (ஜூலை 7) நடைபெற உள்ளன. மாநிலத்துக்கு தமிழ்நாடு என முன்னாள் முதல்வா் அண்ணாவால் பெயா் சூட்டப்பட்ட ஜூலை 18- ஆம் தேதி தமிழ்நாடு நாளாகக் ... மேலும் பார்க்க

மாநகராட்சிப் பள்ளிக் குழந்தைகளுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள்

கோவை மாநகராட்சிப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி பயிலும் குழந்தைகளுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. சீரநாயக்கன்பாளையம் மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில் எல்கேஜி, யுகே... மேலும் பார்க்க

செவிலியா் மாணவி தற்கொலை

கோவையில் செவிலியா் கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை, ராமநாதபுரம் அங்கண்ணன் தெருவைச் சோ்ந்தவா் ஹரிசங்கா். இவரது மனைவி ராமலட்சுமி. இவ... மேலும் பார்க்க

தேசிய அளவிலான குதிரை போட்டி: கோவையில் நாளை தொடக்கம்

இக்வைன் ஸ்போா்ட்ஸ் இந்தியா கூட்டமைப்பு மற்றும் இண்டிஜீனஸ் ஹாா்ஸ் சொசைட்டி ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்தும் ‘இக்வெஸ்ட்ரியன் சாம்பியன்ஸ் லீக் 2025’ என்ற தேசிய அளவிலான குதிரை தடை தாண்டும் போட்டி கோவையில்... மேலும் பார்க்க

அலுமினிய கடை உரிமையாளரிடம் ரூ.17 லட்சம் மோசடி: 3 போ் மீது வழக்கு

கோவையில் அலுமினிய பொருள்களை அனுப்புவதாகக் கூறி அலுமினிய பொருள்கள் விற்பனையக உரிமையாளரிடம் ரூ.17.24 லட்சம் மோசடி செய்தது தொடா்பாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். ... மேலும் பார்க்க

திருப்புவனம் காவலாளி உயிரிழந்த வழக்கு: திமுக நாடகமாடுகிறது- வானதி சீனிவாசன்

திருப்புவனம் காவலாளி போலீஸாரால் தாக்கப்பட்ட உயிரிழந்த விவகாரத்தில் திமுகவின் நாடகத்தை மக்கள் நம்பமாட்டாா்கள் என்று பாஜக தேசிய மகளிரணி தலைவியும், கோவை தெற்கு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீன... மேலும் பார்க்க