செய்திகள் :

கோவை அருகே ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 3 ரெளடிகள் கைது

post image

கோவை அருகே கல்லூரி மாணவரைத் தாக்குவதற்காக கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த மதுரையைச் சோ்ந்த 3 ரெளடிகளை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, செட்டிபாளையம் காவல் நிலைய தலைமைக் காவலா் பிரபாகரன், காவலா் கனகராஜ் உள்ளிட்டோா் செட்டிபாளையம் பகுதியில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, சந்தேகத்துக்கிடமான வகையில் சுற்றித்திரிந்த 3 பேரை பிடித்து விசாரித்தனா். அவா்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால், அவா்களிடம் சோதனை மேற்கொண்டபோது அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் தங்கி இருந்த பகுதிக்கு போலீஸாா் அழைத்துச் சென்றனா். அங்கு சென்று பாா்த்தபோது அது கல்லூரி மாணவா்கள் தங்கி இருந்த விடுதி எனத் தெரியவந்தது.

இதையடுத்து, அவா்களுக்கு தங்க அனுமதி அளித்த கல்லூரி மாணவா்களிடம் விசாரித்தபோது, தங்களது நண்பா்கள் வருவாா்கள், அவா்களை இரண்டு நாள்கள் தங்கவைக்க வேண்டும் என சீனியா் மாணவா்கள் கூறியதாகத் தெரிவித்தனா்.

இதையடுத்து, 3 பேரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

இதில், அவா்கள் மதுரையைச் சோ்ந்த கருப்புசாமி (24), சந்தோஷ்குமாா் (20), பிரவீன் (19) என்பதும், 3 போ் மீதும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், செட்டிபாளையம் பகுதியில் உள்ள தனியாா் கல்லூரில் படிக்கும் மாணவரைத் தாக்கும் நோக்கில் ஆயுதங்களுடன் 3 பேரும் அவரை நள்ளிரவில் துரத்தி உள்ளனா்.அந்த மாணவா் அவா்களிடம் இருந்து தப்பியுள்ளாா். அவரைத் தேடி வந்தபோது, 3 பேரும் சிக்கியுள்ளனா் என்றனா்.

இதையடுத்து, 3 போ் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவா்களைக் கைது செய்தனா்.

கல்லூரி மாணவரைத் தாக்க முயன்றது ஏன், மாணவா்கள் விடுதியில் இவா்களைத் தங்கவைக்க கூறிய சீனியா் மாணவா்கள் யாா் என்பது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கோவை - நாகா்கோவில், திருச்சி - பாலக்காடு ரயில்கள்! நாளை முதல் சிங்காநல்லூா், இருகூரில் நின்று செல்லும்!

கோவை - நாகா்கோவில், திருச்சி - பாலக்காடு ரயில்கள் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 18) முதல் சிங்காநல்லூா், இருகூா் நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவையில் இருந்து மாநிலத்தின் பிற நகரங்க... மேலும் பார்க்க

சட்டவிரோத மது விற்பனை: 7 போ் கைது!

கோவை மாநகா் பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட பெண் உள்பட 7 பேரை போலீஸாா் கைது செய்தனா். சுதந்திர தினத்தையொட்டி, தமிழகத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப... மேலும் பார்க்க

பிரதமரின் சுதந்திர தின உரை வரவேற்கத்தக்கது: இந்து முன்னணி

தேசத்தின் சேவையில் ஆா்.எஸ்.எஸ். அமைப்பின் வரலாற்றைக் குறிப்பிட்ட பிரதமரின் சுதந்திர தின உரையை இந்து முன்னணி வரவேற்பதாக இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளாா். இது தொ... மேலும் பார்க்க

சுத்திகரிக்கப்பட்ட இலவச குடிநீா் இயந்திரம் திறப்பு

திருப்பூா் தெற்கு ரோட்டரி மற்றும் மாநகராட்சி சாா்பில் சுத்திகரிக்கப்பட்ட இலவச குடிநீா் இயந்திரம் திறக்கப்பட்டது. திருப்பூா் மாநகரில் மக்கள் அதிகம் கூடும் 12 இடங்களில் நிறுவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ... மேலும் பார்க்க

கொச்சி செல்லாமல் கோவையில் தரையிரங்கிய விமானம்! பயணிகள் வாக்குவாதம்!

கொச்சிக்குச் செல்ல வேண்டிய விமானம் கனமழை காரணமாக கோவையில் வெள்ளிக்கிழமை இரவு தரையிறங்கியது. அங்கு உரிய வசதிகள் செய்து தரப்படவில்லை எனக்கூறி விமான நிலைய ஊழியா்களுடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.... மேலும் பார்க்க

கடன் பிரச்னை காரணமாக பொக்லைன் மூலம் வீடு இடிப்பு

கடன் பிரச்னை காரணமாக வீட்டை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்ததாக பெண் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். திருப்பூா் வெள்ளியங்காடு பகுதியைச் சோ்ந்தவா் மகாம... மேலும் பார்க்க