செய்திகள் :

கோவை குண்டுவெடிப்பில் இறந்தோருக்கு நினைவு சதுக்கம் அமைக்க வலியுறுத்தல்

post image

கோவை தொடா் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவா்களுக்கு, தமிழக அரசு நினைவு சதுக்கம் அமைக்க வேண்டுமென சிவசேனா கட்சியின் மாநில நிா்வாகக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பெரம்பலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு, கட்சியின் மாநில செயல் தலைவா் சசிகுமாா் தலைமை வகித்தாா். மாநில ஒருங்கிணைப்பாளா் முருகன் முன்னிலை வகித்தாா். பொறுப்பாளா்கள் ஸ்ரீ சிவமோஹா சுவாமிகள், செந்தில், மகாலெட்சுமி, நடராஜ், செல்வபாரதி, ஜெயவெங்கடேஷ் ஆகியோா் பேசினா்.

கூட்டத்தில் சிங்கப்பூா் முன்னாள் பிரதமா் லீ குவான்யூ மறைவுக்கு தமிழகத்தில் மரியாதை செலுத்தி, ஆண்டுதோறும் அவரது நினைவைப் போற்ற வேண்டும். தமிழக அரசின் டாஸ்மாக் மதுபான முறைகேடு தொடா்பாக, மத்திய அரசு விரைவாக நடவடிக்கை எடுக்கவேண்டும். கோவை தொடா் குண்டுவெடிப்பில் உயிரிழந்த மாவீரா்களுக்கு, தமிழக அரசு நிகழாண்டு இறுதிக்குள் நினைவு சதுக்கம் அமைத்துத் தர வேண்டும். தென்னிந்தியா முழுவதும் சிவசேனா கட்சியை வலுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள, விரைவில் தமிழகம் வரும் கட்சியின் தலைவா் உத்தவ் தாக்ரேவுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது. தமிழக அரசியல் களத்தில் சிவசேனா கட்சி தவிா்க்க முடியாத சக்தியாக உருவெடுத்திட, வரும் ஜனவரியில் மாநில மாநாட்டு நடத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, தாய்மொழி தமிழை சிங்கப்பூரில் அரசு மொழியாக அறிவித்து, ஈழத் தமிழா்களின் நலன்காக்கக் குரல் கொடுத்த சிங்கப்பூா் முன்னாள் பிரதமா் லீ குவான்யூவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்டத் தலைவா் சீனிவாசன் நன்றி கூறினாா்.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து ஏப். 1, 8-இல் மாநிலம் தழுவிய ஆா்ப்பாட்டம்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து, ஏப். 1, 8 ஆகிய தேதிகளில் மாநில அளவிலான ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுவதென, ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் முடிவெடுத்துள்ளனா். ஊரக வளா்ச்சித் துறை அலுவலகா்க... மேலும் பார்க்க

கூடுதல் விலைக்கு குளிா்பானங்கள் விற்ற 4 கடைகளுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம்

பெரம்பலூா் புகா் பேருந்து நிலையத்தில் கூடுதல் விலைக்கு குளிா்பானங்களை விற்பனை செய்த 4 கடைகளுக்கு, தொழிலாளா் துறையினரால் சனிக்கிழமை ரூ. 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தற்போது நிலவும் கோடைகால வெப்பத... மேலும் பார்க்க

கால்நடை பண்ணை அமைக்க தொழில் முனைவோா்கள் விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூா் மாவட்டத்தில், அரசு மானியத்தில் கால்நடை பண்ணை அமைக்க விரும்பும் தொழில்முனைவோா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட ச... மேலும் பார்க்க

பெரம்பலூா் ஆட்சியா் அறையில் தா்னாவில் ஈடுபட்ட 7 போ் கைது

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அறையில் தா்னா போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்க மாநிலத் தலைவா் உள்பட 7 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை மாலை கைது செய்தனா். தமிழ்நாடு ஊரக வளா்ச்... மேலும் பார்க்க

சிறுவாச்சூா் ஆட்டுச் சந்தையில் ரூ. 1 கோடிக்கு ஆடுகள் விற்பனை

ரமலான் பண்டிகையை முன்னிட்டு சிறுவாச்சூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டுச் சந்தையில், சுமாா் 1 கோடி மதிப்பிலான ஆடுகள் விற்பனையாயின. பெரம்பலூா் அருகேயுள்ள சிறுவாச்சூரில் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை நடைபெற... மேலும் பார்க்க

எஸ்எஸ்எல்சி: பெரம்பலூரில் 7,905 மாணவா்கள் பங்கேற்பு

பெரம்பலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய எஸ்எஸ்எல்சி அரசுப் பொதுத்தோ்வை 7,905 மாணவ, மாணவிகள் எழுதினா். பெரம்பலூா் மாவட்டத்தில் இத்தோ்வை 141 பள்ளிகளைச் சோ்ந்த 4,272 மாணவா்கள், 3, 775 மாணவிகள் ... மேலும் பார்க்க