செய்திகள் :

கோவை - திருப்பூர் எல்லை வெடிமருந்து ஆலையில் பயங்கர விபத்து

post image

கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட எல்லைப் பகுதியான சுல்தான்பேட்டை அருகே மல்லேகவுண்டம்பாளையத்தில் இயங்கி வரும் வெடிமருந்து ஆலையில் இன்று (மே 5) பிற்பகல் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

உத்தரகாண்டைச் சேர்ந்த ராஜ் என்பவருக்குச் சொந்தமான இந்த ஆலை, ராணுவத்திற்கு தோட்டா தயாரிக்கும் வெடிமருந்து உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. இன்று பிற்பகல் 1 மணியளவில், ஆலையில் வெடிமருந்து இருப்பு வைக்கப்பட்டிருந்த குடோனில் திடீரென ஏற்பட்ட வெடிப்பு, அந்த கிடங்கை முற்றிலுமாக தரைமட்டமாக்கியது.

இந்த வெடிப்பின் சத்தம் சுமார் 5 கிலோமீட்டர் தொலைவுக்கு கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவத்தை அடுத்து, காமநாயக்கன்பாளையம் மற்றும் சுல்தான்பேட்டை காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

தீயணைப்புத் துறையினரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆலைக்குள் காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் தவிர வேறு யாருக்கும் நுழைய அனுமதி இல்லை. அதிருஷ்டவசமாக, விபத்து நடந்தபோது ஆலையில் பணியில் இருந்த தொழிலாளர்கள் அனைவரும் உயிர் தப்பியுள்ளனர்.

இருப்பினும், உயிரிழப்பு ஏற்பட்டதா?, எவ்வளவு அளவு வெடிமருந்து வெடித்தது? என்பது குறித்த விவரங்கள் காவல்துறை விசாரணைக்கு பிறகே தெரியவரும்.

இந்த வெடி விபத்து அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஆலையின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன.

இதுகுறித்து சுல்தான் பேட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த 3 மணிநேரத்தில் 15 மாவட்டங்களில் மழை!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள... மேலும் பார்க்க

மே 5 வணிகர் நாளாக அறிவிக்கப்படும்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டில் மே 5 ஆம் தேதி வணிகர் நாளாக விரைவில் அறிவிக்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். வணிகர் சங்க கோரிக்கை பிரகடன மாநாடு மதுராந்தகத்தில் இன்று (மே 5) நடைபெற்றது. இதில், முதல்வர... மேலும் பார்க்க

நம்முடைய களம் பெரிது - பெறவுள்ள பரிசு அதனினும் பெரிது! - முதல்வர்

நம்முடைய களம் பெரிது - அதில் நாம் பெறவுள்ள பரிசு அதனினும் பெரிது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.முதல்வர் மு. க. ஸ்டாலின் சென்னையில், பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற “தம... மேலும் பார்க்க

இதனால்தான் தேசியக் கல்விக் கொள்கை எங்களுக்கு வேண்டாம்: அன்பில் மகேஸ்

சமஸ்கிருதத்தை அடிப்படையாக கொண்ட தேசியக் கல்விக் கொள்கை எங்களுக்கு வேண்டாம் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பதிவிட்டுள்ளார். தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 1,008 சம்ஸ்கிருத உரையாடல் ... மேலும் பார்க்க

எச்சில் இலையில் அங்கபிரதட்சணம் செய்ய தடை நீட்டிப்பு!

எச்சில் இலையில் அங்கபிரதட்சணம் செய்ய உயர் நீதிமன்றம் விதித்தத் தடையை உச்ச நீதிமன்றம் நீட்டித்துள்ளது. கரூர் மாவட்டம், நெரூர் சத்குரு சதாசிவ பிரம்மேந்திராள் சபா தரப்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கவு... மேலும் பார்க்க

மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு சலுகைகள் அறிவிப்பு!

60 லட்சம் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படவுள்ள நிலையில் புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் 60 லட்சம் பேருக்கு அடையாள அட்... மேலும் பார்க்க