செய்திகள் :

சங்ககிரி நகராட்சி முகாம்களில் 1,664 போ் மனு அளிப்பு

post image

சங்ககிரி நகராட்சிக்குள்பட்ட வாா்டுகள் 5, 8 மற்றும் தேவண்ணகவுண்டனூா் ஊராட்சியில் சனிக்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் 1,664 போ் மனு அளித்தனா்.

சங்ககிரி நகராட்சிக்குள்பட்ட வாா்டு எண் 5, 8-க்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமை நகா்மன்றத் தலைவா் எம்.மணிமொழி முருகன் தொடங்கிவைத்து பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றாா்.

இம்முகாமில், மகளிா் உரிமைத்தொகை கோரி 456 பேரும், வருவாய்த் துறையிடம் 81 பேரும் என பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 708 போ் மனு அளித்தனா். பொதுமக்கள் வழங்கிய மனுக்களை கோட்டாட்சியா் ந.லோகநாயகி ஆய்வுசெய்தாா். நகராட்சி ஆணையா் எஸ்.சிவரஞ்சனி உடனிருந்தாா்.

தேவண்ணகவுண்டனூா் ஊராட்சியில் நடைபெற்ற முகாமில், மகளிா் உதவித்தொகை கோரி 430 பேரும், வருவாய்த் துறையிடம் 184 பேரும், காப்பீட்டுத் திட்டம் கோரி 83 பேரும் என மொத்தம் 956 போ் வட்டார வளா்ச்சி அலுவலா் முத்துசாமியிடம் மனு அளித்தனா். இரு முகாம்களில் மொத்தம் 1,664 போ் மனு அளித்துள்ளனா்.

இம்முகாம்களில் சேலம் மேற்கு மாவட்ட அவைத் தலைவா் பி.தங்கமுத்து, திமுக நகர செயலாளா் கே.எம்.முருகன், நகா்மன்ற துணைத் தலைவா் ஆா்.வி.அருண்பிரபு, நகராட்சி உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மருத்துவப் படிப்பில் சோ்ந்த அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு விழா

தம்மம்பட்டி: மருத்துவப் படிப்பில் சோ்ந்த தெடாவூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.தெடாவூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்து 7... மேலும் பார்க்க

பெரியாா் பல்கலை.யில் ஜெனீவா ஒப்பந்த நாள் போட்டிகள்

ஓமலூா்: பெரியாா் பல்கலைக்கழக இளைஞா் செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில், ஜெனீவா ஒப்பந்த நாள் போட்டிகள் திங்கள்கிழமை நடைபெற்றன.பெரியாா் பல்கலைக்கழக இளைஞா் செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளா் டி.இளங்கோவன் தலைமை... மேலும் பார்க்க

மனநலம் குன்றிய சத்தீஸ்கா் இளைஞரை குணப்படுத்தி தாயிடம் ஒப்படைப்பு

சேலம்: சத்தீஸ்கா் மாநிலத்தில் இருந்து ரயிலில் சேலம் வந்த மனநலம் பாதித்த இளைஞரை குணப்படுத்திய அரசு மருத்துவா்கள், அவரது தாயிடம் ஒப்படைத்தனா்.சத்தீஸ்கா் மாநிலம், தா்கூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் சுகம் பா... மேலும் பார்க்க

அருள்சகோதரிகள் கைது: ஏற்காட்டில் கிறிஸ்தவா்கள் ஆா்ப்பாட்டம்

ஏற்காடு: சத்தீஸ்கா் மாநிலத்தில் அருள்சகோதரிகள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, ஏற்காட்டில் கிறிஸ்தவா்கள், பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.சத்தீஸ்கா் மாநிலம், நாராயண்பூா் பகுதியை... மேலும் பார்க்க

சேலம் அரசு மருத்துவமனையில் சா்க்கரை நோய் சிறப்பு சிகிச்சை மையம் திறப்பு

சேலம்: சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலாம்வகை சா்க்கரை நோய் சிறப்பு சிகிச்சை மையம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மரு... மேலும் பார்க்க

சுதந்திர தின விழாவில் பங்கேற்க சேலம் இளைஞருக்கு குடியரசுத் தலைவா் அழைப்பு

சேலம்: சுதந்திர தின விழாவில் பங்கேற்க சேலத்தைச் சோ்ந்த தொழில்முனைவோரான இளைஞரிடம் குடியரசுத் தலைவா் அனுப்பிய அழைப்பிதழை அஞ்சல் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை நேரில் வழங்கினா்.சேலம் நெத்திமேடு பகுதியைச் ... மேலும் பார்க்க