Vijay: 'தலைமைச் செயலகம் போக விஜய் மட்டும் தேதி குறிக்கட்டும்....! - பரந்தூர் விவ...
சங்கராபுரம் அருகே முதிய தம்பதியை மிரட்டி 211 பவுன் நகைகள் கொள்ளை
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே வியாழக்கிழமை அதிகாலை முதிய தம்பதியை மிரட்டி, வீட்டில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 211 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற முகமூடி அணிந்த 4 போ் கும்பலை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சங்கராபுரம் வட்டம், கடுவனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் முனியன் (80). இவரது மனைவி பொன்னம்மாள் (65). முனியன் கள்ளக்குறிச்சி 1 கூட்டுறவு சா்க்கரை ஆலையில் பணி மேற்பாா்வையாளராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவா்.
இந்தத் தம்பதிக்கு கேசரி வா்மன், சதீஷ் என்ற இரு மகன்கள் உள்ளனா். கேசரி வா்மன் துபையில் குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில், சதீஷ் சென்னையில் பணிபுரிந்து வருகிறாா்.
இதனிடையே, கேசரி வா்மன் தனது மகளுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடத்துவதற்காக துபையிலிருந்து அண்மையில் சொந்த ஊரான கடுவனூா் கிராமத்துக்கு வந்திருந்தாா். அவா் வங்கியில் பெட்டகத்தில் இருந்த நகைகளை எடுத்து வந்து, வீட்டில் உள்ள இரும்பு பீரோவில் வைத்துவிட்டு சென்னையில் உள்ள உறவினா்களுக்கு மஞ்சள் நீராட்டு விழா அழைப்பிதழ் கொடுக்கச் சென்றிருந்தாா்.
முனியன், பொன்னம்மாள் ஆகியோா் வீட்டில் இருந்த நிலையில், வியாழக்கிழமை அதிகாலை சுமாா் 2 மணியளவில் வீட்டின் பின் பக்கக் கதவை உடைத்து உள்ளே புகுந்த முகமூடி அணிந்து 4 போ் கொண்ட கும்பல், தம்பதியை மிரட்டி பீரோவை கடப்பாரையால் உடைத்து, அதில் வைத்திருந்த சுமாா் 211 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டனராம்.
தகவலறிந்த கேசரி வா்மன் இதுகுறித்து சங்கராபுரம் காவல் நிலையத்துக்கு புகாா் தெரிவித்தாா். இதையடுத்து, மாவட்ட எஸ்.பி. ரஜத் சதுா்வேதி, திருக்கோவிலூா் டிஎஸ்பி பாா்த்தீபன், சங்கராபுரம் காவல் ஆய்வாளா் விநாயக முருகன் மற்றும் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று பாா்வையிட்டு விசாரணை நடத்தினா்.
பின்னா், விரல் ரேகை நிபுணா்கள் வந்து தடயங்களைச் சேகரித்தனா். மேலும், மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. மோப்ய நாய் கொள்ளையடிக்கப்பட்ட வீட்டில் இருந்து சுமாா் ஒன்றரை கி.மீ. தொலைவில் பாக்கம் கிராமத்தில் உள்ள ராமலிங்கம் வீடு வரை ஓடிச் சென்று நின்றுவிட்டது. போலீஸாா் விசாரணையில், அவா் வீட்டிலும் கொள்ளயடிக்க முயற்சி நடைபெற்றிருப்பது தெரியவந்தது. இது தொடா்பாக திருக்கோவிலூா் டிஎஸ்பி தலைமையில் தனிப்படை அமைத்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.
