செய்திகள் :

சசி தரூருக்கு ஒத்துழைப்பு கொடுக்கமாட்டோம்: காங்கிரஸ் மூத்த தலைவர்

post image

காங்கிரஸ் எம்.பி. சசி தரூருக்கு ஒத்துழைப்பு வழங்கமாட்டோம் என்று கேரள காங்கிரஸ் மூத்த தலைவர் கே. முரளீதரன் கூறியுள்ளார்.

கடந்த 2022 காங்கிரஸ் தலைவர் தேர்தல் முதலே கட்சியின் மீது சசி தரூர் அதிருப்தியில் இருந்து வருகிறார். தற்போது காங்கிரஸ் செயற்குழு உறுப்பினராக உள்ள சசி தரூர், சமீபமாக கட்சியின் மீதான அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூா் ஆகிய விஷயங்களிலும் மத்திய அரசுக்கு ஆதரவாக சசி தரூா் கருத்து தெரிவித்தாா்.

சமீபத்தில் முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட அவசரநிலையை விமர்சித்திருந்தது கட்சியில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து கேரள மாநில காங்கிரஸ் நிா்வாகிகள் சசி தரூரை கடுமையாக விமா்சித்து வருகின்றனா்.

இந்நிலையில் திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் கே. முரளீதரன் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில்,

"சசி தரூர் விவகாரத்தில் காங்கிரஸ் தலைமைக்குத்தான் அதிகாரம் உள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுப்பதா அல்லது கட்சியில் நீடிக்க அனுமதிப்பதா என்பதை அவர்கள் முடிவு செய்வார்கள். கேரளத்தைப் பொருத்தவரை சசி தரூருக்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இல்லை. காங்கிரஸ் மற்றும் இந்திரா காந்தியை அவர் விமர்சித்து பேசி வருகிறார். தேவையில்லாமல் சஞ்சய் காந்தி பற்றியும் பேசி வருகிறார்.

ராகுல் காந்தியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். கேரளத்தில் அவரது செயல்பாடுகள் குறித்து நாங்கள் மிகவும் வருத்தத்தில் இருக்கிறோம். மக்களவைத் தேர்தலில் அவரது வெற்றிக்காக தொண்டர்கள் பலரும் தியாகம் செய்துள்ளார்கள்.

எனவே, வருகிற உள்ளாட்சித் தேர்தலில் நாங்கள் அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்கமாட்டோம் என்று முடிவு செய்துள்ளோம். காங்கிரஸ் தலைமை ஏதேனும் கூறினால் அதன்படி பின்பற்றுவோம். மற்றபடி சசி தரூருக்கு எந்த ஒத்துழைப்பும் கொடுக்க மாட்டோம்" என்று கூறியுள்ளார்.

Senior Congress leader K Muraleedharan said that We are not ready to cooperate with Congress MP Shashi Tharoor

இதையும் படிக்க | முதல்வர் மு.க. ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி!

நாடாளுமன்ற வளாகத்தில் விரைவில் மக்களிடம் முழு உடல் ஸ்கேனர் கருவிகள் மூலம் பரிசோதனை

நமது சிறப்பு நிருபர்நாடாளுமன்ற வளாகத்துக்கு வரும் பொதுமக்களை முழு உடல் ஸ்கேனர்கள் மூலம் பரிசோதனை செய்யும் வசதி விரைவில் அறிமுகமாகவுள்ளது. இதையொட்டி, பாடி ஸ்கேனர்கள் எனப்படும் முழு உடல் பரிசோதனை கருவிக... மேலும் பார்க்க

ஊரக வேலை திட்டம் நிறுத்தப்படாது: மத்திய அமைச்சர் விளக்கம்

நமது நிருபர்மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை (மன்ரேகா) நிறுத்தும் திட்டம் ஏதும் மத்திய அரசிடம் இல்லை என்று மக்களவையில் மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌகான் த... மேலும் பார்க்க

விமானக் கட்டணம் கடும் உயர்வு பிரச்னை: மத்திய அமைச்சர் பதில்

விமானக் கட்டணங்கள் அவ்வப்போது கடுமையாக உயர்த்தப்படுவதை மத்திய அரசு ஒழுங்குமுறைப்படுத்துவதில்லை என்று அத்துறையின் இணை அமைச்சர் முரளீதர் மோஹோல் பதிலளித்துள்ளார். இதுதொடர்பாக மாநிலங்களவையில் திமுக உறுப்ப... மேலும் பார்க்க

8-ஆவது ஊதியக் குழு அமைப்பதில் தாமதம் ஏன்?: மத்திய அமைச்சர் பதில்

மத்திய அரசு ஊழியர்களுக்கான எட்டாவது ஊதியக் குழு அமைப்பதில் தாமதம் ஏன் என்று மக்களவையில் திருப்பெரும்புதூர் தொகுதி திமுக உறுப்பினரும், மக்களவை திமுக குழுத் தலைவருமான டி.ஆர். பாலு கேள்வி எழுப்பினார்.இதற... மேலும் பார்க்க

தமிழக மீனவர்களை விரைவாக விடுவிக்க முயற்சி: மத்திய அரசு

நமது சிறப்பு நிருபர்இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்களை விரைவாக விடுவிக்க இந்திய தூதரகம் மூலம் தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்படுவதாக மத்திய மீன்வளத்துறை இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன் தெரிவித்தார்.மக்கள... மேலும் பார்க்க

16 தமிழக கிராமங்களை மேம்படுத்த நடவடிக்கை: மத்திய அமைச்சர் பதில்

நமது சிறப்பு நிருபர்காலநிலை மாற்ற பாதிப்புகளை எதிர்கொள்ளும் கடலோர கிராமங்களை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 16 கிராமங்கள் தேர்வாகியுள்ளதாக திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் சசிகாந்த்... மேலும் பார்க்க